உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 5 ஜூன், 2013

நிழல்

 Photo: உன்
குற்றப்பத்திரிக்கையின்
கூர்முனையிலிருந்து
வெளிவரத்துடிக்கிறதொரு
நிழல்

உன் புறக்கணிப்பு
கொஞ்சம் கொஞ்சமாய்
எனதிந்த உடலை
திண்ணத் தொடங்க
கொடூரத்தின் கோரத்திலும்
புன்னகித்தபடியே கடக்கிறது

வன்முறையொன்று
ப்ரியத்தின் பொருட்டு
வழக்கொழிந்து போவதாய்
வழமை போலவே நினைக்கிறது
அது

புலங்கப்படா பாதையில்
படிந்திருக்கும் தூசிதனை
தட்டியெழுப்புவது போல் இருக்கிறது
நினைவின் தடம்

செய்யத்துடிக்கும் அனைத்திலும்
செயலின்மையை
கைக்கு கொடுக்கிறது
கையாளாக அன்பு

இறுகப்பற்றுதலிலோ
நீண்ட முத்தத்திலோ
சில துளி கண்ணீரிலோ
மீட்டெடுக்கலாமென நினைக்கையில்
மீண்டுமெனைப் பற்றிக்கொள்கிறது
அந்நிழல்

அதீதத்தில் என்  கவிதை....
http://www.atheetham.com/?p=4738
உன்
குற்றப்பத்திரிக்கையின்
கூர்முனையிலிருந்து
வெளிவரத்துடிக்கிறதொரு
நிழல்

உன் புறக்கணிப்பு
கொஞ்சம் கொஞ்சமாய்
எனதிந்த உடலை
திண்ணத் தொடங்க
கொடூரத்தின் கோரத்திலும்
புன்னகித்தபடியே கடக்கிறது

வன்முறையொன்று
ப்ரியத்தின் பொருட்டு
வழக்கொழிந்து போவதாய்
வழமை போலவே நினைக்கிறது
அது

புலங்கப்படா பாதையில்
படிந்திருக்கும் தூசிதனை
தட்டியெழுப்புவது போல் இருக்கிறது
நினைவின் தடம்

செய்யத்துடிக்கும் அனைத்திலும்
செயலின்மையை
கைக்கு கொடுக்கிறது
கையாளாக அன்பு

இறுகப்பற்றுதலிலோ
நீண்ட முத்தத்திலோ
சில துளி கண்ணீரிலோ
மீட்டெடுக்கலாமென நினைக்கையில்
மீண்டுமெனைப் பற்றிக்கொள்கிறது
அந்நிழல்




 நன்றி : அதீதம்
http://www.atheetham.com/?p=4738




 

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கைக்கு கொடுக்கிறது
கையாளாக அன்பு...

வாழ்த்துக்கள்...

Yaathoramani.blogspot.com சொன்னது…

அந்த நிழல் தரும் அவஸ்தையை
நன்கு உணரமுடிந்தது
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 3

இளமதி சொன்னது…

//இறுகப்பற்றுதலிலோ
நீண்ட முத்தத்திலோ
சில துளி கண்ணீரிலோ
மீட்டெடுக்கலாமென நினைக்கையில்
மீண்டுமெனைப் பற்றிக்கொள்கிறது//

ம்.. வலிகளுக்கு வருடல். அழகிய கவிதை. ரசித்தேன் தோழி!

நிழல்கள் நிஜமில்லை!...
தொடருங்கள்...
த ம.4