உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 30 செப்டம்பர், 2013

குரல்





ஊமையின் கனவில்
நித்தம் வருகிறது ஒரு குரல்
முற்றிலும் பழக்கப்பட்டதாய்
மாறிப்போன நாளொன்றின் துவக்கத்திலிருந்து
உறக்கம் கெடுக்கிறது அக்குரல்
பேசத்தெரிந்தவாறு
பேசிச்சிரித்தவாறு
அழுகையின் அந்தம் சொன்னவாறு
அவனோடே உரையாடலைத்தொடர்ந்தவாறு
தன்னை நிலைத்து வைக்கிறது
அக்குரல்
பசிக்கு உணவாய்
பழக்கத்தின் நட்பாய்
ஆதரவின் அன்னையாய்
அக்குரலை
தன் குரலாய் நினைக்கத்தொடங்கிய
ஊமைச்சிறுவனின்
உலகம் வார்த்தைகளால் நிறைந்திருக்க
பேசத்துடிக்கும் அச்சோடி கண்களில்
நீங்களும் தேடியெடுக்கலாம்
அக்குரலை
ஏளனமற்ற புன்னகையை கொடுத்தவாறே...


3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

// பசிக்கு உணவாய்
பழக்கத்தின் நட்பாய்
ஆதரவின் அன்னையாய் //

அருமை........!

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அருமை...

உணர்வுபூர்வமான கவிதை

'பரிவை' சே.குமார் சொன்னது…

உணர்வுப்பூர்வமான கவிதை....