உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 1 ஜனவரி, 2014

எதாவது சொல்.





எதாவது சொல்
எதையாவது செய்
நினைப்பதை பேசு
நினைத்ததில் நில்
அழுக்கு ஆடை
அழகென்று சொல்
அரிதாரம் சுத்தமாய்
ஒட்டவில்லையென சரிசெய்
நெற்றிப்பொட்டின் கோணலை காட்டி
நெற்றி தொடு
நெற்றியிலிருந்து கண்களை பார்
காரணம் கேள்
காத்திருக்கும் இவ்விழிகளின்
பார்வைக்குள் நுழை
அனுமதி வேண்டுமெனில் அதையும் கேள்
அனுமதித்த இதழ்களை தொடு
இன்னும் வேண்டுமென
புன்னகையில் கொல்
இதற்குமேல் வேகத்தடைகொடுக்கும்
அமைதியினை எறி
எதற்கும் தயாராய் இரு
தொடராத புள்ளியில்
முழுக்கோலம் அழகென்று பொய்சொல்
மருதாணி பொருத்தமென்று சொல்லி
என் பெரும்மூச்சை அள
ஆர்பரிக்கும் அலைகளின் முன்
என் அழுகுரல் கேள்
அணைத்துறங்கும் தலையணையிடம்
ஆசையினை அறி
கோபிக்க வேண்டுமென நான் சொன்ன
பொய்களை ரசி
ரசித்தாயாயின் ருசி
ருசி கண்ட மனம்
இன்னுமொருமுறை
உனைக் காரணம் கேட்கும்
காரணமுடைத்து
காதல் வேண்டும்
கதைத் துறங்க காதல்மடி தேடும்
அதற்குமுன்
ஒரே ஒரு முறை
 
சத்தம் போடாதே
தனித்திருக்கும்
இந்நிமிடம் பேசட்டும் ...

7 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

Yaathoramani.blogspot.com சொன்னது…


சத்தம் போடாதே
தனித்திருக்கும்
இந்நிமிடம் பேசட்டும்

அற்புதமான கவிதை
ஆழமான பொருளுடைய இறுதி வரிகள்
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
//

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 2

Unknown சொன்னது…

எல்லாரும் நல்லா இருக்கவேணும்...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

கவிதை வழக்கம் போல...இதம்

Seeni சொன்னது…

Apppp.......pppaaa..

Arumai..

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமையான கவிதை...
வாழ்த்துக்கள்.

எவனோ ஒருவன் சொன்னது…

சத்தம் போடாதே
தனித்திருக்கும்
இந்நிமிடம் பேசட்டும் ...

sema...