உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 12 பிப்ரவரி, 2015

கவலை




இனி கவலையில்லையென்ற பாவனையில்
எழுதத் தொடங்குகின்ற வரிகளுக்குள்
எங்கோ ஒளித்து வைக்கப்படுகிறது
கவலை குறித்த பயம்


பயமற்று தொடர்வதாய் நினைத்து
ஒவ்வொரு நிறுத்தத்திலும் தன்னை சரிசெய்து கொள்ள
ஆரம்பித்த இடத்தில்
ஒளித்துவைக்கப்பட்டதாய் நினைத்த கவலை
கொஞ்சம் கொஞ்சமாய் தன்னை அவிழ்த்துவிட
கவலைகுறித்த கவலையொன்றை
சுமந்து வருகிறது
இனி கவலையில்லையென்ற பாவனையில்
தன்னை எழுதிக்கொண்ட
ஒரு க(வலை)விதை...

0 கருத்துகள்: