உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்
நண்பர்கள் தின கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நண்பர்கள் தின கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

வரமாய் வந்த நட்பு



நீ என்னைத் திருத்தி தான் 
கொடுத்தாய்,
உன் நட்பால் திருப்பம் பெற்றது
என் வாழ்க்கை...

எப்போதோ விட்டு போன
காதலை விட ,
விலகாமல் நீ தரும்
ஆறுதலில் அழுத்தமாய்
உன் நட்பு....

*
சண்டைகளுக்குப் பின்னும்
நான் தோள் சாயும்
இன்னொரு அன்னையாய்
உன் நட்பு...

*
எனக்கு வேண்டியதை
நான் வேண்டாமலே
நீ கொடுத்தபோதும்,
உனக்கு வேண்டியதை
உரிமையோடு 
நீ எடுத்த போதும்,
அழகாய் தெரிந்தது 
உன் நட்பு...

*
என் சந்தோஷத்தை
இரட்டிப்பாக்கவும்,
என் வேதனையை
இல்லாமல் போக்கவும்,
மருந்தாய் வந்தது
உன் நட்பு...

*
எனக்காய் நீயும்,
உனக்காய் நானும்,
உள்ளார்ந்த தோழமையில்,
உயிர் சிலிர்ந்த பொழுதுகளில்
காலம் மறந்த வேளைகளில்,
என அத்துணை காலங்களிலும் 
கூட இருந்தது 
 நட்பு...

*
என் புன்னகையில்
புன்னைக்கைக்கும்
இன்னொரு இதழாய்,
என் வலிகளை தாங்கும்
இன்னொரு இதயமாய்,
எனக்காய் இருப்பது 
உன் நட்பு.....

*
உணர்தலில் பேசி,
உயிர்வரை நேசித்து,
என் பிரச்சனையில் 
அவள் சிலுவை சுமந்து,
அன்பில் சிறகை 
எனக்காய் கொடுத்து,
என்னை அவளாய்
நேசிப்பது,
நட்பு...

*
வாழும் நேரத்திலும்,
நான் வீழும் நேரத்திலும்,
என்னைத் தாங்கிப் பிடிக்கும்,
இன்னொரு தோளாய்
நட்பு...

ஆம்............
என் வாழ்வின் 
வரமாய் வந்தது 
உன் நட்பு 




  பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்......................என் வாழ்வின் துணை நின்ற அத்துணை இனிய இதயத்திற்கும்  நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...............