உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 23 ஏப்ரல், 2011

ஓசைகள் அற்ற ஓர் இரவில்....


* மௌனம் கலைத்து
விட்டிருந்த
அந்த வீட்டில்,
நடை பிணமாய் யார் யாரோ
வருகிறார்கள்,

* ரத் தழுவி
அடக்க நினைக்கும்
சோகத்தையெல்லாம்
கட்டவிழ்த்து விடுகிறார்கள்...

* ழாதவர்கள்
அன்பற்றவர்களாய்
பெயர் சூட்டப்படுகிறார்கள்... 

* மாதனம் செய்வதாய்,
சட்டை  கிழிக்கிறது,
சொந்தம்...

*ம்மந்த சாப்பாடென்று,
சந்தி சிரிக்க வைக்கிறது
பிறிதொரு  கூட்டம்..

* சில சடங்குகளுக்குப்
பின் பிடி சாம்பலாய்
போகிறது
இ(ரு)றந்தவர்  கோலம்...

* றக்கம்மேதும் இன்றி,
வந்திட்ட மரணத்தின் 
வலியில்
சிக்கித் தவிக்கிறது,
இ(ரு)றந்தவர் குடும்பம்...

* கையோடு கை பொருத்தி
ஆறுதல் சொல்லிவிட்டு
சலனமே இல்லாமல்,
வந்தவர் களைகிறார்கள்...

* பின் ஓசைகள் அற்ற ஓர்
இரவில்,
விழி வாசல் வந்து நிற்கிறது
இ(ரு)றந்தவர் நினைவாய்
கண்ணீர்த்துளிகள்..

***********

அன்புடன் 
ரேவா

45 கருத்துகள்:

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

ரொம்ப சோகமான கவிதை....

Unknown சொன்னது…

வாழ்வின் முடிவில் அவர் நினைவாய் கவிதை அருமை!

sulthanonline சொன்னது…

துக்கம் நடந்த வீட்டில் நடக்கும் சம்பவங்களை கண்முன் வரவழைத்துவிட்டீர்கள்.

// பின் ஓசைகள் அற்ற ஓர்
இரவில்,
விழி வாசல் வந்து நிற்கிறது
இ(ரு)றந்தவர் நினைவாய்
கண்ணீர்த்துளிகள்..//


கடைசிவரிகள் class

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

படிக்கும் போது கூடவே பயணிக்கிறது என்னைச்சுற்றி சோகம்...

கண்ணீர் துளிகள் எட்டிப்பார்க்கிறது
கவிதை படித்துமுடிக்கும் பேர்து...

வலி நிறைந்த கவிதை....

Unknown சொன்னது…

அழகான கவிதை தோழி

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//பின் ஓசைகள் அற்ற ஓர்
இரவில்,
விழி வாசல் வந்து நிற்கிறது
இ(ரு)றந்தவர் நினைவாய்
கண்ணீர்த்துளிகள்..//



என் கண்ணிலும் கண்ணீர்......

Ram சொன்னது…

//ஓசைகள் அற்ற ஓர் இரவில்....//

டைட்டில் செம..

Ram சொன்னது…

//மௌனம் கலைத்து
விட்டிருந்த
அந்த வீட்டில்,
நடை பிணமாய் யார் யாரோ
வருகிறார்கள்,//

நடை பிணமாய் என்றால் வருத்தத்தோடு வார்த்தைகளே அற்றமாதிரி தானே.!! இப்ப எல்லாம் யாருங்க அப்படி வர்றாங்க.. வரணுமேன்னு வராங்க..

Ram சொன்னது…

//ஆரத் தழுவி
அடக்க நினைக்கும்
சோகத்தையெல்லாம்
கட்டவிழ்த்து விடுகிறார்கள்...//

யு மீன் ஒப்பாரி..!! ஸோ சாட்.. அந்த ஒப்பாரியில நான் சிக்கிகிட்டு பட்ட பாடு.? எப்படியோ நாளைக்கு பதிவு ரெடியாயிடுச்சு..

Ram சொன்னது…

அழாதவர்கள்
அன்பற்றவர்களாய்
பெயர் சூட்டப்படுகிறார்கள்... //

நோ நோ.. இரும்பு மனசுகாரன்.. எப்படி நிக்கிறான் பாரு.. கல்லு மனசு அவனுக்கு.. இப்படிலாம் தான் ஓடும் ரீலு..

Ram சொன்னது…

//சமாதனம் செய்வதாய்,
சட்டை கிழிக்கிறது,
சொந்தம்...//

இதாங்க எவன் கண்டுபிடிச்சதுன்னே தெரியல..

Ram சொன்னது…

சம்மந்த சாப்பாடென்று,
சந்தி சிரிக்க வைக்கிறது
பிறிதொரு கூட்டம்..//

அட இதுக்காக தானே வர்றதே.!!

Ram சொன்னது…

//சில சடங்குகளுக்குப்
பின் பிடி சாம்பலாய்
போகிறது
இ(ரு)றந்தவர் கோலம்...//

பின்ன வீட்ல வச்சு பூஜைய பண்ண முடியும்.?

Ram சொன்னது…

இறக்கம்மேதும் இன்றி,
வந்திட்ட மரணத்தின்
வலியில்
சிக்கித் தவிக்கிறது,
இ(ரு)றந்தவர் குடும்பம்...//

பின்ன வருத்தம் இல்லாம இருக்குமா.?

Ram சொன்னது…

கையோடு கை பொருத்தி
ஆறுதல் சொல்லிவிட்டு
சலனமே இல்லாமல்,
வந்தவர் களைகிறார்கள்...//

வந்த வேலை முடிஞ்சா கிளம்ப வேண்டியது தானே.!! அப்பரம் என்ன.?

Ram சொன்னது…

பின் ஓசைகள் அற்ற ஓர்
இரவில்,
விழி வாசல் வந்து நிற்கிறது
இ(ரு)றந்தவர் நினைவாய்
கண்ணீர்த்துளிகள்..//

செம செம.!!

Ram சொன்னது…

மரணத்தின் ஒரு நாள் நிகழ்வு..!! நல்லாவே சொல்லியிருக்கீங்க.. காதல் கவிதையில்லாம இருப்பது எனக்கு இன்னும் சிறப்பு.. ஹி ஹி.. மனதில் அப்படியென்ன தீராத வலி..?

Unknown சொன்னது…

என் கண்ணிலும் கண்ணீர்......enthanga boss tissue eduthukkonga..no feelings..

Unknown சொன்னது…

revathai ellaraium ala vaikkinrai..:((((

ரேவா சொன்னது…

தமிழ்வாசி - Prakash said...

ரொம்ப சோகமான கவிதை....

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தமிழ்வாசி நண்பரே....

ரேவா சொன்னது…

விக்கி உலகம் said...

வாழ்வின் முடிவில் அவர் நினைவாய் கவிதை அருமை!

நன்றி விக்கி உலகம்

ரேவா சொன்னது…

sulthanonline said...

துக்கம் நடந்த வீட்டில் நடக்கும் சம்பவங்களை கண்முன் வரவழைத்துவிட்டீர்கள்.

// பின் ஓசைகள் அற்ற ஓர்
இரவில்,
விழி வாசல் வந்து நிற்கிறது
இ(ரு)றந்தவர் நினைவாய்
கண்ணீர்த்துளிகள்..//


கடைசிவரிகள் class


நன்றி நண்பரே...உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்...

ரேவா சொன்னது…

# கவிதை வீதி # சௌந்தர் said...

படிக்கும் போது கூடவே பயணிக்கிறது என்னைச்சுற்றி சோகம்...

கண்ணீர் துளிகள் எட்டிப்பார்க்கிறது
கவிதை படித்துமுடிக்கும் பேர்து...

வலி நிறைந்த கவிதை....

முதலில் நன்றி நண்பரே தங்கள் வருகைக்கு....சமீபத்தில் நான் சந்தித்த சூழலை தான் எழுத முயன்றேன் நண்பரே...பல நேரங்களில், முகம் தெரியா, அறியா பிறரின் மரணம் கூட எதோ ஒரு வலியை நம்மிடம் உண்டாக்கும்..அந்த வலி நிரந்த தருணத்தில், என் வார்த்தைகளோடு நான் பயணித்ததின் விளைவே இந்த கவிதை

ரேவா சொன்னது…

ananth said...

அழகான கவிதை தோழி

நன்றி...நண்பரே

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...

//பின் ஓசைகள் அற்ற ஓர்
இரவில்,
விழி வாசல் வந்து நிற்கிறது
இ(ரு)றந்தவர் நினைவாய்
கண்ணீர்த்துளிகள்..//



என் கண்ணிலும் கண்ணீர்......

நன்றி மனோ அவர்களே.... :-(

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

//ஓசைகள் அற்ற ஓர் இரவில்....//

டைட்டில் செம..

வாங்க சகோ... நன்றி நன்றி

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

//மௌனம் கலைத்து
விட்டிருந்த
அந்த வீட்டில்,
நடை பிணமாய் யார் யாரோ
வருகிறார்கள்,//

நடை பிணமாய் என்றால் வருத்தத்தோடு வார்த்தைகளே அற்றமாதிரி தானே.!! இப்ப எல்லாம் யாருங்க அப்படி வர்றாங்க.. வரணுமேன்னு வராங்க..


அப்படியா சகோ..மே பி இருக்கலாம் ஒரு சிலர்...

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

//ஆரத் தழுவி
அடக்க நினைக்கும்
சோகத்தையெல்லாம்
கட்டவிழ்த்து விடுகிறார்கள்...//

யு மீன் ஒப்பாரி..!! ஸோ சாட்.. அந்த ஒப்பாரியில நான் சிக்கிகிட்டு பட்ட பாடு.? எப்படியோ நாளைக்கு பதிவு ரெடியாயிடுச்சு..


ஹ ஹ ஒரு பதிவுல, இன்னொரு பதிவா...கலக்குங்க

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

அழாதவர்கள்
அன்பற்றவர்களாய்
பெயர் சூட்டப்படுகிறார்கள்... //

நோ நோ.. இரும்பு மனசுகாரன்.. எப்படி நிக்கிறான் பாரு.. கல்லு மனசு அவனுக்கு.. இப்படிலாம் தான் ஓடும் ரீலு..

நான் சொன்ன மாதிரி கூட சொல்லுவாங்க சகோ

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

//சமாதனம் செய்வதாய்,
சட்டை கிழிக்கிறது,
சொந்தம்...//

இதாங்க எவன் கண்டுபிடிச்சதுன்னே தெரியல..

ஹ ஹ அனுபவமா?....

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

சம்மந்த சாப்பாடென்று,
சந்தி சிரிக்க வைக்கிறது
பிறிதொரு கூட்டம்..//

அட இதுக்காக தானே வர்றதே.!!


ஹ ஹ

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

//சில சடங்குகளுக்குப்
பின் பிடி சாம்பலாய்
போகிறது
இ(ரு)றந்தவர் கோலம்...//

பின்ன வீட்ல வச்சு பூஜைய பண்ண முடியும்.?

:-(

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

இறக்கம்மேதும் இன்றி,
வந்திட்ட மரணத்தின்
வலியில்
சிக்கித் தவிக்கிறது,
இ(ரு)றந்தவர் குடும்பம்...//

பின்ன வருத்தம் இல்லாம இருக்குமா.?]

அதானே ?..............:-)

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

பின் ஓசைகள் அற்ற ஓர்
இரவில்,
விழி வாசல் வந்து நிற்கிறது
இ(ரு)றந்தவர் நினைவாய்
கண்ணீர்த்துளிகள்..//

செம செம.!!

நன்றி சகோ

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

மரணத்தின் ஒரு நாள் நிகழ்வு..!! நல்லாவே சொல்லியிருக்கீங்க.. காதல் கவிதையில்லாம இருப்பது எனக்கு இன்னும் சிறப்பு.. ஹி ஹி.. மனதில் அப்படியென்ன தீராத வலி..?


நன்றி சகோ...நண்பர் கவிதை வீதிக்கு, இட்ட மறுமொழி தான் சகோ உங்களுக்கும்....நன்றி சகோ உங்கள் கருத்துக்கும், வருகைக்கும்....

ரேவா சொன்னது…

siva said...

என் கண்ணிலும் கண்ணீர்......enthanga boss tissue eduthukkonga..no feelings..


இதுக்கு தான் என் நண்பன் சிவா வேணும்னு சொல்லுறது....
பாத்திங்களா....டிஸ்யூ பேப்பர் லம் எடுத்து தரான்...நன்றி சிவா....

ரேவா சொன்னது…

siva said...

revathai ellaraium ala vaikkinrai..:((((


அதான், அன்பால எல்லாத்தையும் சிரிக்க வைக்க நீ இருக்கேல....ஹி ஹி நன்றி சிவா

பெயரில்லா சொன்னது…

///பின் ஓசைகள் அற்ற ஓர்
இரவில்,
விழி வாசல் வந்து நிற்கிறது
இ(ரு)றந்தவர் நினைவாய்
கண்ணீர்த்துளிகள்../// பாதிக்கப்பட்டவனுக்கு மட்டும் தான் வலிகள் நிரந்தரம்............(((

எவனோ ஒருவன் சொன்னது…

tragedy யா இருக்கு. சந்தோசமா ஏதாச்சும் எழுதுங்க....

logu.. சொன்னது…

\\பின் ஓசைகள் அற்ற ஓர்
இரவில்,
விழி வாசல் வந்து நிற்கிறது
இ(ரு)றந்தவர் நினைவாய்
கண்ணீர்த்துளிகள்..\\

nachunu irukku.

பனித்துளி சங்கர் சொன்னது…

வலிகள் பொருந்திய வார்த்தை தொடுப்புகள் கவிதை ரணத்தின் உச்சம் . பகிர்ந்தமைக்கு நன்றி

ரேவா சொன்னது…

கந்தசாமி. said...

///பின் ஓசைகள் அற்ற ஓர்
இரவில்,
விழி வாசல் வந்து நிற்கிறது
இ(ரு)றந்தவர் நினைவாய்
கண்ணீர்த்துளிகள்../// பாதிக்கப்பட்டவனுக்கு மட்டும் தான் வலிகள் நிரந்தரம்............(((


உண்மைதான் சகோதரம் :-(

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

tragedy யா இருக்கு. சந்தோசமா ஏதாச்சும் எழுதுங்க....

கண்டிப்பாக நண்பா :-)

ரேவா சொன்னது…

logu.. said...

\\பின் ஓசைகள் அற்ற ஓர்
இரவில்,
விழி வாசல் வந்து நிற்கிறது
இ(ரு)றந்தவர் நினைவாய்
கண்ணீர்த்துளிகள்..\\

nachunu irukku.

நன்றி நண்பா

ரேவா சொன்னது…

!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

வலிகள் பொருந்திய வார்த்தை தொடுப்புகள் கவிதை ரணத்தின் உச்சம் . பகிர்ந்தமைக்கு நன்றி

Monday, April 25, 2011

நன்றி பனித்துளி சங்கர் .