உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 4 ஏப்ரல், 2011

மீண்டும் மீண்டும் நீ !!!!



* முதல் முதலாய்
நீயும் நானும்
பார்வைகளால்,
அறிமுகவுரை எழுதிய
இடத்திலே,
பிரிவுரை எழுத ஆயத்தமானோம்...

* ஆம்,
உன்னுள் எழுதப்படா
சட்டங்களுக்கும்,
அந்த
சட்டங்களுக்குள்,
என் உறவை விட்டு வரச் சொல்லி 
எனை சிறைபிடித்த
உன் ஆளுமைக்காய், 
பிரிந்து விடுவதென்று
நானும்....

* என் அன்பும்
என் நேசிப்பும்,
என் அருகாமையும்,
உன்
நேச உறவுகளின்
பாசத்தை தடுப்பதாய்
உன் குடும்பம்  கூறியதாய்
நீயும் ... 

* பிரிந்து விடுவோம் என்று
சேர்ந்து தான்
முடிவெடுத்தோம்...

* நாம் சொல்லியவேளையும் வந்தது..
உன் நினைவாய்
என்னிடம் இருந்த
உன் புகைப் படமும்,
நீ காதல் சொல்லி அனுப்பிய
குறுந்தகவலும்
அழித்தாகி விட்டது.... 

* இனி
எந்த ஜென்மத்திலும்
பார்க்க கூடாதென்ற
ஒப்பந்தத்தோடும்,
நமை தொடர்பு படுத்திய
அனைத்து தொடர்பையும்
அழித்து விட்டு,
ஒப்பனைகள் அற்ற
காதலோடு கலைந்துவிட்டது
நம் உறவு...

* உன்னை எப்படியும்
மறந்து விடுவேன் என்று
மனதில்
நினைத்து நினைத்தே
நாட்களை விரட்டிக்கொண்டிருக்க..., 
 
* உன் நினைவு தரும்
எந்த பொருளையும்
நெருங்கக் கூடாதென்று
நித்தமும் எண்ணுகின்றேன்...

* உன்னை மறத்தல்,
அத்தனை கொடிய விஷமில்லை
என்று 
நட்பிடம்
நடித்துக் கொள்கிறேன்... 

* ஆனாலும்,
உனக்கு பிடித்த
எந்தன் சிரிப்பும்,
நடக்கையில்
நீ பிடித்திழுக்கும்
எந்தன் கூந்தலும்...
நமை சேர்த்து வைத்த
அந்த ஒற்றை மரமும்மாக
 ஏதாவது ஒன்று 
நித்தம் நித்தம்
உன்னை நினைக்கச் சொல்லி
யுத்தம் செய்கிறது...

* தோற்று விடுவேன்
என்ற பயத்தில்,
உன் நினைவைத் தவிர்த்து
எனை தேற்றிக் கொண்டிருக்கையில்,
தோற்க்கடிக்க வருகிறது,
உன் அழைப்பு....

* எனையறியாமல்,
கண்ணீர்துளிகள்
என் மௌனம் கலைக்க,
கைபேசி வழியே
மீண்டும் ஒரு
காதல் போர் ஆரம்பம்...

அன்புடன்
ரேவா  

41 கருத்துகள்:

Chitra சொன்னது…

* உன்னை மறத்தல்,
அத்தனை கொடிய விஷமில்லை
என்று
நட்பிடம்
நடித்துக் கொள்கிறேன்...


....ரொம்ப அருமையாக எழுதி இருக்கீங்க.... பாராட்டுக்கள்!

Ram சொன்னது…

//உன் அளுமைக்காய் //

அளுமைக்காய்.??? ஓ.. ஆளுமைக்காய் ஆ.?

Ram சொன்னது…

ஆஹா.. அருமையான கதையுடன் கவிதை..

தவிப்புகளை இன்னும் அதிகமாக சொல்லியிருக்கலாம்..

இன்னும் பல எடுத்துகாட்டுகள் சொல்லி சொல்லியிருந்தால் கவிதை வலிமைபெற்றிருக்கும்..

Ram சொன்னது…

//உன் நினைவாய்
என்னிடம் இருந்த
உன் புகைப் படமும்,
நீ காதல் சொல்லி அனுப்பிய
குறுந்தகவலும்
அழித்தாகி விட்டது.... //

இது எப்படி முடியுதுன்னு எனக்கு சத்தியமா தெரியல.. யாராச்சும் காதல் பண்றவங்க சொல்லுங்கப்பா..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//உன்னை மறத்தல்,
அத்தனை கொடிய விஷமில்லை
என்று
நட்பிடம்
நடித்துக் கொள்கிறேன்... //

இப்பிடி இடையிடையே மனசு வலிக்க வச்சுருதீங்களே...

அசத்தல் கவிதை...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

தங்கள் கவிதை
அழமும் அழுத்தமும் நிறைந்து காணப்படுகிறது...
வாழ்த்துக்கள்...

ரேவா சொன்னது…

Chitra said...

* உன்னை மறத்தல்,
அத்தனை கொடிய விஷமில்லை
என்று
நட்பிடம்
நடித்துக் கொள்கிறேன்...


....ரொம்ப அருமையாக எழுதி இருக்கீங்க.... பாராட்டுக்கள்!


மிகவும் நன்றி தோழி....

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

//உன் அளுமைக்காய் //

அளுமைக்காய்.??? ஓ.. ஆளுமைக்காய் ஆ.?

உங்கள் பின்னூட்டம் கண்டதும் மாற்றி விட்டேன்...நன்றி நண்பரே :-)

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

ஆஹா.. அருமையான கதையுடன் கவிதை..

தவிப்புகளை இன்னும் அதிகமாக சொல்லியிருக்கலாம்..

இன்னும் பல எடுத்துகாட்டுகள் சொல்லி சொல்லியிருந்தால் கவிதை வலிமைபெற்றிருக்கும்..

பார்டா... நெசமாத்தான் சொல்லுறேங்களா?....உங்களுக்கு தான் காதல் கவிதைகள் பிடிக்காதே... ஆனாலும் மிக்க நன்றி...

ரேவா சொன்னது…

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அசத்தல்.

நன்றி கருண் :-)

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

//உன் நினைவாய்
என்னிடம் இருந்த
உன் புகைப் படமும்,
நீ காதல் சொல்லி அனுப்பிய
குறுந்தகவலும்
அழித்தாகி விட்டது.... //

இது எப்படி முடியுதுன்னு எனக்கு சத்தியமா தெரியல.. யாராச்சும் காதல் பண்றவங்க சொல்லுங்கப்பா..


காதலில் சின்ன, சின்ன, சிறுபிள்ளைத்தனம் ஒளித்திருக்கும்... அதன் விளைவாய், அவனை சீண்டி விடுவதாய் செய்தது தான் இந்த பத்தி... நன்றி நண்பரே உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...

//உன்னை மறத்தல்,
அத்தனை கொடிய விஷமில்லை
என்று
நட்பிடம்
நடித்துக் கொள்கிறேன்... //

இப்பிடி இடையிடையே மனசு வலிக்க வச்சுருதீங்களே...

அசத்தல் கவிதை...


ஹ ஹ நெசமாத்தேன் சொல்லுறீகளா... நன்றி மனோ :-P

ரேவா சொன்னது…

# கவிதை வீதி # சௌந்தர் said...

தங்கள் கவிதை
அழமும் அழுத்தமும் நிறைந்து காணப்படுகிறது...
வாழ்த்துக்கள்...


நன்றி # கவிதை வீதி # சௌந்தர் :-)

Ram சொன்னது…

//பார்டா... நெசமாத்தான் சொல்லுறேங்களா?....உங்களுக்கு தான் காதல் கவிதைகள் பிடிக்காதே... ஆனாலும் மிக்க நன்றி... //

அட சத்தமா சொல்லிடாதீங்க.. கல்ல கொண்டு அடிப்பாங்க போலிருக்கு.. எங்க திரும்பினாலும் காதல் கவிதையா இருக்கேனு தான் எனக்கு பிடிக்காதுனு சொன்னேன்.. இருந்தாலும் என்ன பண்றது.. யாரும் திருந்திர மாதிரி தெரில நான் கெட்டு போயிட்டன்..

ரேவா சொன்னது…

அட சத்தமா சொல்லிடாதீங்க.. கல்ல கொண்டு அடிப்பாங்க போலிருக்கு.. எங்க திரும்பினாலும் காதல் கவிதையா இருக்கேனு தான் எனக்கு பிடிக்காதுனு சொன்னேன்.. இருந்தாலும் என்ன பண்றது.. யாரும் திருந்திர மாதிரி தெரில நான் கெட்டு போயிட்டன்..


இதுல திருந்த என்ன இருக்கு...அவர் அவர்க்கு எதில் தெளிவு கிடைக்கிறதோ, அதை வைத்து அவர்கள் வழியில் பயணப்படுகிறார்கள்,,, அவ்வளவே நண்பா,,,

என்ன பண்றது நண்பா காதல் கவிதை எழுதவே கூடாதுன்னு இருந்த என்னயயும் காதல் கவிதை எழுதுன்னு கெளப்பி விட்டுடாங்க, என் நண்பர்கள்... ஆனாலும் ஊரோடு கொஞ்சம் ஒத்துத் தான் வாழவேண்டியிருக்கு..

karthikkumar சொன்னது…

சரி சரி சண்ட போடாதீங்க ........:))

Instrospecting through சொன்னது…

Great Revathi,Naturally expressed..as u said ,the thing what we trying to forget will always roam around us.... .yeah an another beginning at the end of the poem ,

பெயரில்லா சொன்னது…

பிரிந்தவர் சேர்ந்தால் கண்ணீர் சிரிக்கும், இதழ்கள் மௌனம் பேசுமே! :)
அழகான வரிகள் ரேவா..

வேங்கை சொன்னது…

எல்லோருக்கும் காதல் பிரிவு ஒன்று தான் போல

காதல் வலி மீண்டும் மீண்டும் என்னுள்

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

முதல் முதலாய் நீயும் நானும் பார்வைகளால், அறிமுகவுரை எழுதிய
இடத்திலே,பிரிவுரை எழுத ஆயத்தமானோம்.ஆம்,உன்னுள் எழுதப்படா சட்டங்களுக்கும்,அந்த
சட்டங்களுக்குள்,என் உறவை விட்டு வரச் சொல்லி எனை சிறைபிடித்த
உன் ஆளுமைக்காய், பிரிந்து விடுவதென்று நானும்.என் அன்பும்
என் நேசிப்பும்,என் அருகாமையும்,
உன் நேச உறவுகளின் பாசத்தை தடுப்பதாய் உன் குடும்பம் கூறியதாய்
நீயும்.பிரிந்து விடுவோம் என்று சேர்ந்து தான் முடிவெடுத்தோம்.நாம் சொல்லியவேளையும் வந்தது.உன் நினைவாய் என்னிடம் இருந்த உன் புகைப் படமும்,நீ காதல் சொல்லி அனுப்பிய குறுந்தகவலும் அழித்தாகி விட்டது.இனி எந்த ஜென்மத்திலும்
பார்க்க கூடாதென்ற ஒப்பந்தத்தோடும்,
நமை தொடர்பு படுத்திய அனைத்து தொடர்பையும் அழித்து விட்டு,
ஒப்பனைகள் அற்ற காதலோடு கலைந்துவிட்டது நம் உறவு.

உன்னை எப்படியும் மறந்து விடுவேன் என்று மனதில் நினைத்து நினைத்தே
நாட்களை விரட்டிக்கொண்டிருக்க.உன் நினைவு தரும் எந்த பொருளையும்
நெருங்கக் கூடாதென்று நித்தமும் எண்ணுகின்றேன்.உன்னை மறத்தல்,அத்தனை கொடிய விஷமில்லை என்று நட்பிடம் நடித்துக் கொள்கிறேன்.ஆனாலும்,உனக்கு பிடித்த எந்தன் சிரிப்பும்,நடக்கையில்
நீ பிடித்திழுக்கும் எந்தன் கூந்தலும்.நமை சேர்த்து வைத்த
அந்த ஒற்றை மரமும்மாக ஏதாவது ஒன்று நித்தம் நித்தம் உன்னை நினைக்கச் சொல்லி யுத்தம் செய்கிறது.

தோற்று விடுவேன் என்ற பயத்தில்,உன் நினைவைத் தவிர்த்து எனை தேற்றிக் கொண்டிருக்கையில்,தோற்க்கடிக்க வருகிறது,உன் அழைப்பு. எனையறியாமல்,கண்ணீர்துளிகள்
என் மௌனம் கலைக்க,கைபேசி வழியே மீண்டும் ஒரு காதல் போர் ஆரம்பம்...


என்ன பார்க்கிறீங்க ரேவதி நீங்க எண்டர் தட்டுனதெல்லாம் சேர்த்தா ஒரு காதல் கடிதம் படிச்ச எஃபெக்ட்தான் இருக்கு கவிதையா இல்ல . பாவம் உங்க கீபோர்ட்ல இருக்கிற எண்டர் கீ விட்ருங்க ப்ளீஸ்

என்னா ஒரு வில்லத்தனம் :)

ரேவா சொன்னது…

karthikkumar said...

சரி சரி சண்ட போடாதீங்க ........:))

சண்டையா எங்க சகோ :-)

ரேவா சொன்னது…

Instrospecting through said...

Great Revathi,Naturally expressed..as u said ,the thing what we trying to forget will always roam around us.... .yeah an another beginning at the end of the poem ,

நன்றி நண்பரே உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

ரேவா சொன்னது…

Balaji saravana said...

பிரிந்தவர் சேர்ந்தால் கண்ணீர் சிரிக்கும், இதழ்கள் மௌனம் பேசுமே! :)
அழகான வரிகள் ரேவா..

நன்றி நண்பா....

ரேவா சொன்னது…

வேங்கை said...

எல்லோருக்கும் காதல் பிரிவு ஒன்று தான் போல

காதல் வலி மீண்டும் மீண்டும் என்னுள்

அப்படியா?... வருகைக்கு நன்றி.வேங்கை..

ரேவா சொன்னது…

என்ன பார்க்கிறீங்க ரேவதி நீங்க எண்டர் தட்டுனதெல்லாம் சேர்த்தா ஒரு காதல் கடிதம் படிச்ச எஃபெக்ட்தான் இருக்கு கவிதையா இல்ல . பாவம் உங்க கீபோர்ட்ல இருக்கிற எண்டர் கீ விட்ருங்க ப்ளீஸ்

என்னா ஒரு வில்லத்தனம் :)


ஹி ஹி ஆமாம்ல... சரி நெக்ஸ்ட் டைம் கவிதையவே ட்ரை பண்ணுறேன்... ஓகே யா... என்னா ஒரு வில்லத்தனம் ஹி ஹி... நன்றி பாஸ்...

logu.. சொன்னது…

மறத்துப்போய் கிடந்தாலும் மறந்துவிடுதல் இயலாதது.

கவிதை ரொம்ப வலியா இருக்கு.
சூப்பர்.

நிரூபன் சொன்னது…

முதல் முதலாய்
நீயும் நானும்
பார்வைகளால்,
அறிமுகவுரை எழுதிய
இடத்திலே,
பிரிவுரை எழுத ஆயத்தமானோம்...//

முதற் காதலிலே பிரிவிற்கான அடித்தளமா? நம்பவே முடியவில்லை..இது இக் காலக் காதலின் யதார்த்தம் போல உள்ளது.

நிரூபன் சொன்னது…

நாம் சொல்லியவேளையும் வந்தது..
உன் நினைவாய்
என்னிடம் இருந்த
உன் புகைப் படமும்,
நீ காதல் சொல்லி அனுப்பிய
குறுந்தகவலும்
அழித்தாகி விட்டது.... //

சகோதரி கவிதையினை யதார்த்த நடையில், இலகுவான மொழி நடையில் கொண்டு செல்கிறீர்கள்.
பெற்றோரினைக் காரணம் காட்டி, காதலைப் பிரிய நினைக்கும் காதலனின் மன நிலையினையும் அழகாக உரைத்துள்ளீர்கள்.

ஒரு கேள்வி, குறுந்தகவலையும், புகைப்படத்தையும் அழிக்கலாம், ஆனால் மனதினுள் ஆழமாக மனச்சிறையினுள் சிக்கிக் கொண்ட நினைவுகளை அழிக்க முடியுமா?

நிரூபன் சொன்னது…

தோற்று விடுவேன்
என்ற பயத்தில்,
உன் நினைவைத் தவிர்த்து
எனை தேற்றிக் கொண்டிருக்கையில்,
தோற்க்கடிக்க வருகிறது,
உன் அழைப்பு...//

எவ்வளவு தான் பிரிந்திருந்தாலும் மனதிற்குப் பிடித்தவர்களின் வார்த்தைகளைக் கேட்டால் கல்லும் இளகி விடும் எனும் உணர்வினைக் கவிதையில் கொட்டியிருக்கிறீர்கள்.

இறுதியில் உங்களின் மனதினையும், உங்கள் சபதத்தினையும் சூரியனைக் கண்ட தாமரை போலத் தொலை பேசி அழைப்பினூடகத் தோற்றிருக்கிறீர்கள்...

இது உணர்வின் வெளிப்பாடு என்பதனை விட அனுபவங்களின் சிதறல் என்றே எடுத்துக் கொள்ளலாம்.

நிரூபன் சொன்னது…

எனையறியாமல்,
கண்ணீர்துளிகள்
என் மௌனம் கலைக்க,
கைபேசி வழியே
மீண்டும் ஒரு
காதல் போர் ஆரம்பம்...//

மீண்டும் மீண்டும்.... அழிக்க நினைத்தாலும் அழிந்து விட முடியாதவாறு அடிக்கடி நினைவிற்கு வரும் ஆழ்மனக் காதலின் எண்ன வெளிப்பாடுகளை அழகாகப் பாடி நிற்கிறது. தாமதமான பின்னூட்டங்களுக்கு மன்னிக்கவும்.

நிரூபன் சொன்னது…

இன்னொரு வேண்டுகோள்... பதிவினை வெளியிடும் போது, நேரங்களை மாற்றி புதிய பதிவாக அதே நாளில் வெளியிடுவது போல வெளியிட்டால் உங்கள் பதிவுகளை இலகுவாக டாஷ்போர்ட்டில் கண்டு கொள்ளலாம்.

நேற்றைய திகதியில் பதிவினை எழுதி விட்டு, இன்றைய நாளில் அதனை போஸ்ற் செய்யும் போது உங்களின் பதிவு என் புளொக்கில் பத்து மணித்தியாலங்களிற்கு முன்னர் பகிரப்பட்டது போலக் காட்டுகிறது.

ஒரு சின்ன வேண்டுகோள். ஒவ்வொரு பதிவும் எழுதி முடித்த பின்னர், அப் பதிவினை வெளியிட முதல் அப் பதிவெழுதும் பெட்டிக்கு கீழ் உள்ள post options இல் நேரம், திகதியினை மாற்றி current நேரத்திற்கு அமைவாகப் போட்டால் உங்கள் பதிவுகளைத் தவற விடமாட்டேன் என நினைக்கிறேன். ஒரு நண்பனின் வேண்டுகோள்..
தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்!

ரேவா சொன்னது…

logu.. said...

மறத்துப்போய் கிடந்தாலும் மறந்துவிடுதல் இயலாதது.

கவிதை ரொம்ப வலியா இருக்கு.
சூப்பர்.

நன்றி logu.

ரேவா சொன்னது…

நிரூபன் said...

முதல் முதலாய்
நீயும் நானும்
பார்வைகளால்,
அறிமுகவுரை எழுதிய
இடத்திலே,
பிரிவுரை எழுத ஆயத்தமானோம்...//

முதற் காதலிலே பிரிவிற்கான அடித்தளமா? நம்பவே முடியவில்லை..இது இக் காலக் காதலின் யதார்த்தம் போல உள்ளது.'

ஆம் சகோ யதார்த்தம் தான்

ரேவா சொன்னது…

நிரூபன் said...

நாம் சொல்லியவேளையும் வந்தது..
உன் நினைவாய்
என்னிடம் இருந்த
உன் புகைப் படமும்,
நீ காதல் சொல்லி அனுப்பிய
குறுந்தகவலும்
அழித்தாகி விட்டது.... //

சகோதரி கவிதையினை யதார்த்த நடையில், இலகுவான மொழி நடையில் கொண்டு செல்கிறீர்கள்.
பெற்றோரினைக் காரணம் காட்டி, காதலைப் பிரிய நினைக்கும் காதலனின் மன நிலையினையும் அழகாக உரைத்துள்ளீர்கள்.

ஒரு கேள்வி, குறுந்தகவலையும், புகைப்படத்தையும் அழிக்கலாம், ஆனால் மனதினுள் ஆழமாக மனச்சிறையினுள் சிக்கிக் கொண்ட நினைவுகளை அழிக்க முடியுமா?



அது முடியாது தான் சகோ... ஏதோ ஒரு கோவத்தால் காதலை நினைக்க கூடாதுன்னு நினைக்கும் போதெல்லாம் அவன் நினைவு வருகிறது என்பதை கவிதையில் சொல்லி உள்ளேன் சகோ

ரேவா சொன்னது…

நிரூபன் said...

தோற்று விடுவேன்
என்ற பயத்தில்,
உன் நினைவைத் தவிர்த்து
எனை தேற்றிக் கொண்டிருக்கையில்,
தோற்க்கடிக்க வருகிறது,
உன் அழைப்பு...//

எவ்வளவு தான் பிரிந்திருந்தாலும் மனதிற்குப் பிடித்தவர்களின் வார்த்தைகளைக் கேட்டால் கல்லும் இளகி விடும் எனும் உணர்வினைக் கவிதையில் கொட்டியிருக்கிறீர்கள்.

இறுதியில் உங்களின் மனதினையும், உங்கள் சபதத்தினையும் சூரியனைக் கண்ட தாமரை போலத் தொலை பேசி அழைப்பினூடகத் தோற்றிருக்கிறீர்கள்...

இது உணர்வின் வெளிப்பாடு என்பதனை விட அனுபவங்களின் சிதறல் என்றே எடுத்துக் கொள்ளலாம்.

கண்டிப்பாக சகோ... எல்லோர்ருடைய வெளிப்பாடும் இது தான்

ரேவா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ரேவா சொன்னது…

நிரூபன் said...

எனையறியாமல்,
கண்ணீர்துளிகள்
என் மௌனம் கலைக்க,
கைபேசி வழியே
மீண்டும் ஒரு
காதல் போர் ஆரம்பம்...//

மீண்டும் மீண்டும்.... அழிக்க நினைத்தாலும் அழிந்து விட முடியாதவாறு அடிக்கடி நினைவிற்கு வரும் ஆழ்மனக் காதலின் எண்ன வெளிப்பாடுகளை அழகாகப் பாடி நிற்கிறது. தாமதமான பின்னூட்டங்களுக்கு மன்னிக்கவும்.


நன்றி சகோ உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

ரேவா சொன்னது…

நிரூபன் said...

இன்னொரு வேண்டுகோள்... பதிவினை வெளியிடும் போது, நேரங்களை மாற்றி புதிய பதிவாக அதே நாளில் வெளியிடுவது போல வெளியிட்டால் உங்கள் பதிவுகளை இலகுவாக டாஷ்போர்ட்டில் கண்டு கொள்ளலாம்.

நேற்றைய திகதியில் பதிவினை எழுதி விட்டு, இன்றைய நாளில் அதனை போஸ்ற் செய்யும் போது உங்களின் பதிவு என் புளொக்கில் பத்து மணித்தியாலங்களிற்கு முன்னர் பகிரப்பட்டது போலக் காட்டுகிறது.

ஒரு சின்ன வேண்டுகோள். ஒவ்வொரு பதிவும் எழுதி முடித்த பின்னர், அப் பதிவினை வெளியிட முதல் அப் பதிவெழுதும் பெட்டிக்கு கீழ் உள்ள post options இல் நேரம், திகதியினை மாற்றி current நேரத்திற்கு அமைவாகப் போட்டால் உங்கள் பதிவுகளைத் தவற விடமாட்டேன் என நினைக்கிறேன். ஒரு நண்பனின் வேண்டுகோள்..
தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்!


கண்டிப்பாக நீங்கள் கூறியது போல செய்கிறேன் சகோ... இதில் தவறென்ன இருக்கிறது.. நன்றி சகோ... இனி வரும் பதிவுகளில் தாங்கள் சொன்னது போல செய்கிறேன்... நன்றி சகோ
--

எவனோ ஒருவன் சொன்னது…

////என் அன்பும்
என் நேசிப்பும்,
என் அருகாமையும்,
உன்
நேச உறவுகளின்
பாசத்தை தடுப்பதாய்
உன் குடும்பம் கூறியதாய்
நீயும் ...////

தங்கள் கவிதையை வாசிக்கும் பொழுது மனதில் ஏற்பட்ட பாரத்தை மறைக்க முடியவில்லை. பிரிவால் வாடும் இதயங்களுக்கு தங்கள் கவிதைகள் ஒரு ஆறுதல் :-) நன்றி தோழி....

Unknown சொன்னது…

mee the first,...
valakkam pola
wonderfull
beautifull
colorfull.

lcnathan சொன்னது…

paravayillai !!!