உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 14 நவம்பர், 2011

வா இப்போதே காதலிப்போம்...


அம்மா என் பெயர் சொல்லி
அழைக்கும் போதெல்லாம்
மறக்காமல் வந்து விடுகிறது 
உன் நினைவு...



பேரழகை இன்னும் இன்னும்
அழகாக்குகிறது
நீ சூடிக்கொண்டு வரும் 
வெட்கம் 


விட்டுவிட நினைத்தாலும்
முடியவில்லை 
எதிலாவது  உன்னை நினைவு படுத்தும்
இந்த  நினைவுகளை..


சிறகில்லாமல் பறந்து வரும் 
காதல் பட்டாம் பூச்சி
நீ...
உன்னைப் பார்த்ததிலிருந்து
களவுபோன கண்களுக்குள் 
என் காதல் ஆடுது 
கண்ணாமூச்சி ...


முடியாது என்றாலும்
முடியும் என்ற
விருட்சத்தை எனக்குள்
விதைத்தது 
நீ...


என்னை கடத்திச் செல்லும்
உன் பார்வைக்கு பின்னே
தொலைந்து போகின்றன
என் கெட்ட பழக்கங்கள்...


பலரும் பலவாறு
நடந்து செல்ல,
நீ மட்டும் எப்படி
அழகோடு செல்கிறாய்.


நீ  அன்று சாதாரமாய் தான்
பார்த்தாய் என்னை ,
அன்றிலிருந்து  சதா உன்னைப் பார்ப்பதே
வேலையாகி விட்டது
எனக்கு...


அழகை சுமந்து வரும் 
கவிதை
நீ..
அந்த கவிதைக்கே
கவிபடித்த கலைஞன்
நான்..



நீ நடந்து செல்லும் 
வீதியில் 
நடைபயில்கிறது 
என் காதல்...




கனவினில் கூட
தொடாமல் பேசும் 
உன்னை
தொட்டுவிட துடிக்கிறேன்,
நிலவைத் தொட்டவன்
நானாய் இருக்கட்டும் 
என்ற ஆசையில்,,,,


கொடுக்க கொடுக்க 
குறையாத செல்வம் 
கல்வியாம்!!!
கற்றுக் கொடு
எனக்கான காதல் கல்(ல)வியை...





என் கவிதைகளுக்கு
கிடைத்த 
மிகப்பெரிய பரிசு 
உன் வாசிப்பு...
என் காதலுக்கு கிடைத்த
மிகப்பெரிய  பரிசு
உன் நேசிப்பு..





கவிதையோடு
வாழ ஆசை எனக்கு,
அதற்காகவேனும் 
வா இப்போதே காதலிப்போம்...




33 கருத்துகள்:

சௌந்தர் சொன்னது…

அம்மா என் பெயர் சொல்லி
அழைக்கும் போதெல்லாம்
மறக்காமல் வந்து விடுகிறது
உன் நினைவு...///

பேர் வைச்சது அம்மா கூப்பிடுறது அம்மா நினைப்பு மட்டும் யார் மேல வருது பாரேன்...

சௌந்தர் சொன்னது…

என்னை கடத்திச் செல்லும்
உன் பார்வைக்கு பின்னே
தொலைந்து போகின்றன
என் கெட்ட பழக்கங்கள்...//

அப்படி என்ன கேட்ட பழக்கம்..???

சௌந்தர் சொன்னது…

நீ அன்று சாதாரமாய் தான்
பார்த்தாய் என்னை ,
அன்றிலிருந்து சதா உன்னைப் பார்ப்பதே
வேலையாகி விட்டது
எனக்கு...///

ம்ம்ம நீ அவர பாகுறதும் அவர் உன்னை பாகுறதும் வேலையா இருந்தா புவ்வாக்கு என்னமா பண்ணுவே..???

சௌந்தர் சொன்னது…

அழகை சுமந்து வரும்
கவிதை
நீ..
அந்த கவிதைக்கே
கவிபடித்த கலைஞன்
நான்..///

அட அட அட பாருய்யா....

சௌந்தர் சொன்னது…

கவிதையோடு
வாழ ஆசை எனக்கு,
அதற்காகவேனும்
வா இப்போதே காதலிப்போம்... ///

இனி ஒன்னும் பண்ண முடியாது சொல்லிட வேண்டியது தான் :))

Unknown சொன்னது…

நல்லா இருக்குங்க!

இந்திரா சொன்னது…

ஒவ்வொரு கவிதையும் மனதை அள்ளுகிறது..
எதாவதொன்றை குறிப்பிட்டு சொல்ல நினைத்து copy செய்ய ஆரம்பித்து கடைசி வரி வரை ட்ராக் பண்ணிக்கொண்டே வந்துவிட்டேன்.
அற்புதமான வரிகள்.

இருந்தாலும்
//விட்டுவிட நினைத்தாலும்
முடியவில்லை
எதிலாவது உன்னை நினைவு படுத்தும்
இந்த நினைவுகளை..//

மீண்டும் படிக்க வைத்த வரிகள்..

வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

NICE :)

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

குறிப்பிட்டு சொல்ல மனம்வரவில்லை..

அத்தனையும் காதல் வாசம்வீச மலர்கிறது மனதில்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நினைவுகள் சடுகுடு ஆடுது சூப்பரா வாழ்த்துக்கள்...!!!

நம்பிக்கைபாண்டியன் சொன்னது…

எல்லாம் ரசித்தேன் :):):)


\\\என் கவிதைகளுக்கு
கிடைத்த
மிகப்பெரிய பரிசு
உன் வாசிப்பு...///

இதை மிக ரசித்தேன்!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>முடியாது என்றாலும்
முடியும் என்ற
விருச்சத்தை எனக்குள்
விதைத்தது
நீ...



விருட்சத்தை... ( விருச்சத்தை)

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>
கனவினில் கூட
தொடாமல் பேசும்
உன்னை
தொட்டுவிட துடிக்கிறேன்,
நிலவைத் தொட்டவன்
நானாய் இருக்கட்டும்
என்ற ஆசையில்,,,,

haa haa , இது அவர் எழுதுனது போல.. அல்லது அவர் பார்வையில் நீங்க எழுதுனதோ?

அ. வேல்முருகன் சொன்னது…

பார்ப்பவை எல்லாம் அழகாய் தெரியும் பருவம், வாழ்வை அங்ஙனமே ரசித்து வாழுங்கள். அருமை வாழ்த்துக்கள்

மழை சொன்னது…

பலரும் பலவாறு
நடந்து செல்ல,
நீ மட்டும் எப்படி
அழகோடு செல்கிறாய்.///


அட அட அட !!!நமக்கு பிடிச்சவங்க எத செய்தாலும் அழகாத்தான் இருக்கும் ங்க:)
காட்சியும்,கவிதையும் காதல் மொழி பேசுது!!!

arasan சொன்னது…

அனைத்து கவிதைகளும் பசுமரத்தாணி போல் பதிந்து விட்டது ..
வாழ்த்துக்கள்

எவனோ ஒருவன் சொன்னது…

அனுபவிச்சு எழுதி இருக்கீங்க போல :-) எல்லாக் கவிதைகளும் மிக அருமை. முடித்த விதம் அற்புதம். ரேவானால மட்டும் தான் இப்படி எல்லாம் எழுத முடியும்.

கவிதை எப்படி எழுதுறதுன்னு எனக்கு டியுஷன் எடுக்கலாம்ல :-)

நீ நடந்து செல்லும்
வீதியில்
நடைபயில்கிறது
என் காதல்...

சூப்பர்!

Unknown சொன்னது…

சௌந்தர் கூறியது...

அம்மா என் பெயர் சொல்லி
அழைக்கும் போதெல்லாம்
மறக்காமல் வந்து விடுகிறது
உன் நினைவு...///

பேர் வைச்சது அம்மா கூப்பிடுறது அம்மா நினைப்பு மட்டும் யார் மேல வருது பாரேன்...

என்ன பண்றது சௌந்தர் எங்களுக்கு காதலும் இன்னொரு அன்னையே :)

Unknown சொன்னது…

சௌந்தர் கூறியது...

என்னை கடத்திச் செல்லும்
உன் பார்வைக்கு பின்னே
தொலைந்து போகின்றன
என் கெட்ட பழக்கங்கள்...//

அப்படி என்ன கேட்ட பழக்கம்..???

என் கெட்ட பழக்கம் என்பது பலர் சொல்லி கேட்ட பழக்கமே... சோ எனக்கு தெரியாதே ஹி ஹி

Unknown சொன்னது…

சௌந்தர் கூறியது...

நீ அன்று சாதாரமாய் தான்
பார்த்தாய் என்னை ,
அன்றிலிருந்து சதா உன்னைப் பார்ப்பதே
வேலையாகி விட்டது
எனக்கு...///

ம்ம்ம நீ அவர பாகுறதும் அவர் உன்னை பாகுறதும் வேலையா இருந்தா புவ்வாக்கு என்னமா பண்ணுவே..???

அதெல்லாம் நாங்க பாத்துப்போம் யூ டோன்ட் வொர்ரி :)

Unknown சொன்னது…

சௌந்தர் கூறியது...

கவிதையோடு
வாழ ஆசை எனக்கு,
அதற்காகவேனும்
வா இப்போதே காதலிப்போம்... ///

இனி ஒன்னும் பண்ண முடியாது சொல்லிட வேண்டியது தான் :))

நன்றி சௌந்தர் உன் அத்துணை கருத்துக்களுக்கும் :)

Unknown சொன்னது…

விக்கியுலகம் கூறியது...

நல்லா இருக்குங்க!

நன்றி சகோ :)

Unknown சொன்னது…

இந்திரா கூறியது...

ஒவ்வொரு கவிதையும் மனதை அள்ளுகிறது..
எதாவதொன்றை குறிப்பிட்டு சொல்ல நினைத்து copy செய்ய ஆரம்பித்து கடைசி வரி வரை ட்ராக் பண்ணிக்கொண்டே வந்துவிட்டேன்.
அற்புதமான வரிகள்.

இருந்தாலும்
//விட்டுவிட நினைத்தாலும்
முடியவில்லை
எதிலாவது உன்னை நினைவு படுத்தும்
இந்த நினைவுகளை..//

மீண்டும் படிக்க வைத்த வரிகள்..

வாழ்த்துக்கள்.


மிக்க நன்றி தோழி உங்கள் உளமார்ந்த கருத்துரைக்கு :)

Unknown சொன்னது…

siva கூறியது...

NICE :)

Thanks :)

Unknown சொன்னது…

கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...

குறிப்பிட்டு சொல்ல மனம்வரவில்லை..

அத்தனையும் காதல் வாசம்வீச மலர்கிறது மனதில்...

நன்றி நண்பரே உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் :)

Unknown சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

நினைவுகள் சடுகுடு ஆடுது சூப்பரா வாழ்த்துக்கள்...!!!


நன்றி மனோ அண்ணா :)

Unknown சொன்னது…

நம்பிக்கைபாண்டியன் கூறியது...

எல்லாம் ரசித்தேன் :):):)


\\\என் கவிதைகளுக்கு
கிடைத்த
மிகப்பெரிய பரிசு
உன் வாசிப்பு...///

இதை மிக ரசித்தேன்!


நன்றி நண்பரே உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் :)

Unknown சொன்னது…

சி.பி.செந்தில்குமார் கூறியது...

>>முடியாது என்றாலும்
முடியும் என்ற
விருச்சத்தை எனக்குள்
விதைத்தது
நீ...



விருட்சத்தை... ( விருச்சத்தை)

பிழைகள் திருத்தப்பட்டது நன்றி சகோ :)

Unknown சொன்னது…

சி.பி.செந்தில்குமார் கூறியது...

>>
கனவினில் கூட
தொடாமல் பேசும்
உன்னை
தொட்டுவிட துடிக்கிறேன்,
நிலவைத் தொட்டவன்
நானாய் இருக்கட்டும்
என்ற ஆசையில்,,,,

haa haa , இது அவர் எழுதுனது போல.. அல்லது அவர் பார்வையில் நீங்க எழுதுனதோ?

ஹி ஹி ஒரு ஆண் பார்வையில், ஒரு பெண் எழுதுனது அவ்வளவே... நன்றி சகோ உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் :)

Unknown சொன்னது…

அ. வேல்முருகன் கூறியது...

பார்ப்பவை எல்லாம் அழகாய் தெரியும் பருவம், வாழ்வை அங்ஙனமே ரசித்து வாழுங்கள். அருமை வாழ்த்துக்கள்


நன்றி சகோதரரே உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்...நன்றி தொடர்ந்து வாருங்கள் :)

Unknown சொன்னது…

மழை கூறியது...

பலரும் பலவாறு
நடந்து செல்ல,
நீ மட்டும் எப்படி
அழகோடு செல்கிறாய்.///


அட அட அட !!!நமக்கு பிடிச்சவங்க எத செய்தாலும் அழகாத்தான் இருக்கும் ங்க:)
காட்சியும்,கவிதையும் காதல் மொழி பேசுது!!!

தூறல் மழையாய் என்னை ரசிக்க செய்த உங்கள் கருத்துக்கு நன்றி நண்பா....தொடர்ந்து வாருங்கள்

Unknown சொன்னது…

அரசன் கூறியது...

அனைத்து கவிதைகளும் பசுமரத்தாணி போல் பதிந்து விட்டது ..
வாழ்த்துக்கள்

நன்றி நண்பரே உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் :)

Unknown சொன்னது…

எவனோ ஒருவன் கூறியது...

அனுபவிச்சு எழுதி இருக்கீங்க போல :-) எல்லாக் கவிதைகளும் மிக அருமை. முடித்த விதம் அற்புதம். ரேவானால மட்டும் தான் இப்படி எல்லாம் எழுத முடியும்.

கவிதை எப்படி எழுதுறதுன்னு எனக்கு டியுஷன் எடுக்கலாம்ல :-)

நீ நடந்து செல்லும்
வீதியில்
நடைபயில்கிறது
என் காதல்...

சூப்பர்!


அட போ நண்பா எனக்கு உன் கவிதைகள் சிறந்ததாய் தெரிகின்றது....ஆனாலும் என்னை வரைக்கும் கருத்துக்களுக்கு நன்றி நண்பா :)