உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 1 ஏப்ரல், 2013

ஒரு துளி





இருப்பின் வாயிலை
உடைத்து வெளியேறுகிறது
நம்பிக்கையின் விருட்சம்
இன்னதென்று சொல்லத்தெரிய
ஓப்பீடுகளால்
உடைந்த மெளனத்தின் கணத்தை
உதடுகளால் கடந்து செல்வது
அவ்வளவு சுலபமில்லாது போயினும்
வெறித்து தொடரும்
எல்லோரின் பார்வைக்கு பின்னும்
இன்னும் பருகப்படாமலே இருக்கிறது
நீங்களறியா
உண்மையின்
ஒரு துளி
விஷம்....

-ரேவா




5 கருத்துகள்:

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

அருமையான வரிகள் ரேவா

இளமதி சொன்னது…

வணக்கம் அன்புத்தோழி...
வலைச்சரத்தில் உங்கள் கலைச்சர அறிமுகங்கண்டு இங்குவந்தேன்...

வந்ததும் ஒருதுளி பலதுளியாய் அதுவுதேன்துளியாய் எனக்கு(ள்)...
உங்கள் கவித்துளி!அருமை!

வாழ்த்துக்கள் தோழி....

கீதமஞ்சரி சொன்னது…

தேர்ந்த வார்த்தைப் பிரயோகம். உண்மையின் ஒரு துளி விஷம் பருகப்படாமலேயே போகட்டும், நம்பிக்கையின் விருட்சம் தழைக்கட்டும். பாராட்டுகள் ரேவா.

Unknown சொன்னது…

ஆழமான கவிதை, அதற்குப் பின்னால் பல பரிமாணங்கள்...!

கவியாழி சொன்னது…

ஒருதுளியில் எல்லாவற்றையும் சொல்லிவிட்டீர்கள்