உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 25 மே, 2011

உன்னை பார்த்த நொடி....



காதல், காதல், என்று சதா அலையும் பலரை பார்க்கும் போதெல்லாம் வியப்பாக இருக்கும் எனக்கு, எந்த ஒரு சக்தி இவர்களை உந்தச் செய்கிறது என்று....ஆனால் முதல் முதலாய் உணர்ந்தேன், உன்னை பார்த்த நிமிடம், என்னையறியாமல், நீ என்னுள் நுழைந்து, என் இமைகள் படபடக்கச் செய்தாய், சிரித்து சிரித்தே என் கவனம் ஈர்த்தாய்...பார்வையால் புன்னகைத்து, என் மனதில் காதல் பூப்பூக்கச்செய்தாய்...

நீ பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்ள, ஒய்யார நடமாடுகிறது என் நெஞ்சம் உன் பெயரைச் சொல்லி,சொல்லி....என்னைப் போல நீயும் உணர்கிறாயா? என்று உன்பார்வையில் நான் என் காதலைத்தேட, தூண்டிலில் சிக்கிய மீனாய், நீயும் சிக்கிகொண்டதை உணர்ந்தேன்....

அழகாய் பலர் என்னைக் கடந்து செல்ல, நீ மட்டும் அனைத்துமாய் தெரிய காரணம் என்ன?....ஓஹ இது தான் காதல் அஹ?.....உன் விழி மொழியை வாங்கியே, உன் அருகில் வந்து பேச நினைக்கையிலே, ஆடையாய் நீ சூடிக்கொள்ளும் வெட்க்க மருதாணியில், நானும்  கொஞ்சம் சிவந்து போகிறேன்...இத்தனை காலம் எங்கிருந்தாய், என உள்ளம் கேட்க்கும் பதிலுக்கு, ஓற்றை பார்வை நீ வீச, உன் பார்வைக்கணையிலே, பாதி ஆயுளைத் தொலைத்தேன்...  மீதி....மீதி......

கற்பனை பண்ண வேணாமா?....தொடரும்....நாங்களும் எழுதுவோம்ல..


அப்பறம் இன்னொரு விஷயம், பதிவெழுதி பேர் வாங்கும் பதிவர்கள் ஒரு ரகம், குற்றம் கண்டுபிடிச்சே பேர் வாங்குற பதிவர்கள் ஒரு ரகம், இதுல நீங்க...ஹ ஹ நான் யாரச் சொல்லுறேன்னு தெரியுதா?....ஹ ஹ....  .வரட்டா?.....

54 கருத்துகள்:

SriNith சொன்னது…

பதிவெழுதி பேர் வாங்கும் பதிவர்கள் ஒரு ரகம், குற்றம் கண்டுபிடிச்சே பேர் வாங்குற பதிவர்கள் ஒரு ரகம், இதுல நீங்க...ஹ ஹ நான் யாரச் சொல்லுறேன்னு தெரியுதா?....ஹ ஹ.... .வரட்டா?.....>>>>>

யாரையோ உள்குத்துற மாதிரி தெரியுதே?

மதுரை சரவணன் சொன்னது…

என்னங்க கடைசியில் இப்படி சொல்லிட்டீங்க.. வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

காசா பணமா தொடருங்கள் ... நல்லா இருக்கு ...எழுது பிழைகள் உள்ளது

Ram சொன்னது…

பார்வையால் புன்னகைத்து, என் மனதில் காதல் பூப்பூக்கச்செய்தாய்...//

தனியா நைட்ல வெளிய போகாத போகாதனு சொன்னா கேட்டா தானே!! பாரு கெட்ட கெட்ட கனவா தோணுது.!!

Ram சொன்னது…

தூண்டிலில் சிக்கிய மீனாய், நீயும் சிக்கிகொண்டதை உணர்ந்தேன்....//

பாவும் எவரோ ஒருவர் வாழ்க்கை.!! போச்சு போல

Ram சொன்னது…

தூண்டிலில் சிக்கிய மீனாய், நீயும் சிக்கிகொண்டதை உணர்ந்தேன்....//

மூக்கு பொடைப்பா இருந்தா இப்படியெல்லாம் யோசிக்க தோணும்..

Ram சொன்னது…

ஓஹ இது தான் காதல் அஹ?//

இல்ல ரேவா.. இதுக்கு பெயர் ப்ராந்து..

Ram சொன்னது…

, நானும் கொஞ்சம் சிவந்து போகிறேன்..//

எத்தன நாளுடா இப்படியே மருதாணி மாதிரி செவக்குது, கிழவிலாம் குமரியா தெரியுதுனு பில் டப் கொடுத்திட்டு இருப்பீக.?

Ram சொன்னது…

உன் பார்வைக்கணையிலே, பாதி ஆயுளைத் தொலைத்தேன்..//

என்ன கொடுமை சார் இது.?

Ram சொன்னது…

கற்பனை பண்ண வேணாமா?....தொடரும்....நாங்களும் எழுதுவோம்ல..//

பொதுமக்களே நம்பாதீங்க.!! கற்பனை கற்பனைனு சொல்லிகிட்டு நடந்தத எல்லாத்தையும் சொல்லிகிட்டு கிடக்கா.. நம்பாதீங்க.. இது உண்மை சம்பவம்..

Ram சொன்னது…

அப்பறம் இன்னொரு விஷயம், பதிவெழுதி பேர் வாங்கும் பதிவர்கள் ஒரு ரகம், குற்றம் கண்டுபிடிச்சே பேர் வாங்குற பதிவர்கள் ஒரு ரகம், இதுல நீங்க...ஹ ஹ நான் யாரச் சொல்லுறேன்னு தெரியுதா?....ஹ ஹ.... .வரட்டா?.....//

ஓய்.!! யார சொல்ற.? தெரியல.. சொல்லிட்டு போ.. யாருடா இங்க வந்து குத்தம் குறை சொல்லுறது.? கமான்..

Ram சொன்னது…

நாளைக்கு பதிவு போட போறேன்னு சொல்லிட்டு இன்னைக்கே போட்டுட்ட.. சரி.. இதுக்கு பெயர் என்ன உரைநடை கவிதையா.? நான் தொடர் பதிவு எழுதுறன்னு சொன்னதும் அவசர அவசரமா வந்து இங்கிட்டு ஒரு தொடர் பதிவு போட்டு எனக்கு போட்டியா வர்றீயா.? உன்ன அப்பரமா டீல் பண்ணிகிடுறன்.. ஆனா.. நல்லா தான் இருக்கு.. நடத்து நடத்து..

பெயரில்லா சொன்னது…

வசன நடை அருமை, தொடருங்கள்..

Chitra சொன்னது…

நீ பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்ள, ஒய்யார நடமாடுகிறது என் நெஞ்சம் உன் பெயரைச் சொல்லி,சொல்லி....என்னைப் போல நீயும் உணர்கிறாயா? என்று உன்பார்வையில் நான் என் காதலைத்தேட, தூண்டிலில் சிக்கிய மீனாய், நீயும் சிக்கிகொண்டதை உணர்ந்தேன்....


.... அருமையாக எழுதி இருக்கீங்க. :-)

நிரூபன் சொன்னது…

முதல் பந்தியில் காதல் பற்றிய கவி நடை அருமை.

நிரூபன் சொன்னது…

அப்பறம் இன்னொரு விஷயம், பதிவெழுதி பேர் வாங்கும் பதிவர்கள் ஒரு ரகம், குற்றம் கண்டுபிடிச்சே பேர் வாங்குற பதிவர்கள் ஒரு ரகம், இதுல நீங்க...ஹ ஹ நான் யாரச் சொல்லுறேன்னு தெரியுதா?....ஹ ஹ.... .வரட்டா?.....//

ஆஹா... நீங்களும் உள் குத்து குத்த வெளிக்கிட்டீங்களா..
அவ்...

இதை நான் நம்ம பாட்டிக்கிட்ட கேட்டுத் தான் தெரிஞ்சுக்கனும்.

Unknown சொன்னது…

நா அப்போவே சொன்னேன் ...
பாக்காத பாக்காதனு....
பாரதி ராஜ படமா பாத்து இப்படி ஆய்ட்டு...

நல்ல
கற்பனை
வளம் பெற வாழ்த்துக்கள் ..

Unknown சொன்னது…

உன் பார்வைக்கணையிலே, பாதி ஆயுளைத் தொலைத்தேன்... மீதி....மீதி.....//.

அவளா நீ ....ஹஹஅஹா நடத்து நடத்து ..

நீ ஒரு மார்க்கம்தான் இருக்க
ரைட்டு...

வேங்கை சொன்னது…

என்ன ரேவா தொடரா ? இதுவரை கவிதை போல நடை உள்ளது ....

//பதிவெழுதி பேர் வாங்கும் பதிவர்கள் ஒரு ரகம், குற்றம் கண்டுபிடிச்சே பேர் வாங்குற பதிவர்கள் ஒரு ரகம், இதுல நீங்க...ஹ ஹ நான் யாரச் சொல்லுறேன்னு தெரியுதா?....ஹ ஹ.... .வரட்டா?.....//

ஆமா யாருங்க அது, ஏதோ ... யாரையோ சொல்லுறீங்க ? ஆனால் தெரியல ...வாங்க வாங்க பார்ப்போம்

sulthanonline சொன்னது…

//தூண்டிலில் சிக்கிய மீனாய், நீயும் சிக்கிகொண்டதை உணர்ந்தேன்...//

சிக்கிட்டானா சொல்லவே இல்ல.

//கற்பனை பண்ண வேணாமா?....தொடரும்....நாங்களும் எழுதுவோம்ல.//

உண்மையெல்லாம் சொல்லிட்டு கடைசில கற்பனைன்னு போடுறீங்க . இது நம்பும்படி இல்லியே . சமாளிபிகேஷன் நல்லா இருக்கு .

FARHAN சொன்னது…

வி வரிகளையும் கதைவடிவில் சிறப்பான செதுக்கல்

jayaram சொன்னது…

மிக அருமை.. சொல்ல பட்ட உவமை மனதை கொள்ளை போகிறது... தொடரும்...யாரை? எது?? நீயா? உன் காதலா?

மாலதி சொன்னது…

அருமையாக எழுதி இருக்கீங்க.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>அழகாய் பலர் என்னைக் கடந்து செல்ல, நீ மட்டும் அனைத்துமாய் தெரிய காரணம் என்ன?

haa haa ஹா ஹா ரேவா காதல்ல விழுந்தாட்டாங்க.. ஸ்வீட் எடு கொண்டாடு,... இனி பதிவு போட மாட்டாங்களே?

மயாதி சொன்னது…

பதிவெழுதி பேர் வாங்கும் பதிவர்கள் ஒரு ரகம், குற்றம் கண்டுபிடிச்சே பேர் வாங்குற பதிவர்கள் ஒரு ரகம், இதுல நீங்க...ஹ ஹ நான் யாரச் சொல்லுறேன்னு தெரியுதா?....ஹ ஹ.... .வரட்டா?


நானும் வரட்டா ?

மயாதி சொன்னது…

கற்பனை பண்ண வேணாமா?....தொடரும்....நாங்களும் எழுதுவோம்ல..

நல்லாருக்கு தொடருங்க

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

நீ பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்ள, ஒய்யார நடமாடுகிறது என் நெஞ்சம் உன் பெயரைச் சொல்லி,சொல்லி....என்னைப் போல நீயும் உணர்கிறாயா? என்று உன்பார்வையில் நான் என் காதலைத்தேட, தூண்டிலில் சிக்கிய மீனாய், நீயும் சிக்கிகொண்டதை உணர்ந்தேன்....

சூப்பரா எழுத்யிருக்கிறிங்கள் ரேவா தொடருங்கள்

ரேவா சொன்னது…

பிரகாஷ் குமார் ............ உங்களுக்காக said...

பதிவெழுதி பேர் வாங்கும் பதிவர்கள் ஒரு ரகம், குற்றம் கண்டுபிடிச்சே பேர் வாங்குற பதிவர்கள் ஒரு ரகம், இதுல நீங்க...ஹ ஹ நான் யாரச் சொல்லுறேன்னு தெரியுதா?....ஹ ஹ.... .வரட்டா?.....>>>>>

யாரையோ உள்குத்துற மாதிரி தெரியுதே?

உள்குத்துலாம் இல்ல, நேரவே தான் குத்து..ஹி ஹி நன்றி நண்பரே உங்கள் முதல் வருகைக்கு

ரேவா சொன்னது…

மதுரை சரவணன் said...

என்னங்க கடைசியில் இப்படி சொல்லிட்டீங்க.. வாழ்த்துக்கள்

ஏன் தப்பா சொல்லிட்டேனா?....நன்றி சரவணன்

ரேவா சொன்னது…

ரியாஸ் அஹமது said...

காசா பணமா தொடருங்கள் ... நல்லா இருக்கு ...எழுது பிழைகள் உள்ளது

...எழுத்து பிழைகள் திருத்தப் பட்டன நன்றி சகோ....

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

பார்வையால் புன்னகைத்து, என் மனதில் காதல் பூப்பூக்கச்செய்தாய்...//

தனியா நைட்ல வெளிய போகாத போகாதனு சொன்னா கேட்டா தானே!! பாரு கெட்ட கெட்ட கனவா தோணுது.!!

சகோ நீ இருக்கிறவரைக்கும் எனக்கு கெட்ட கனவே வராது

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

தூண்டிலில் சிக்கிய மீனாய், நீயும் சிக்கிகொண்டதை உணர்ந்தேன்....//

பாவும் எவரோ ஒருவர் வாழ்க்கை.!! போச்சு போல

ஒய் நீயே இப்படி சொன்ன, அப்பறம் உன் சகோ வா பத்தி எல்லாரும் என்ன நினைப்பாங்க...

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

ஓஹ இது தான் காதல் அஹ?//

இல்ல ரேவா.. இதுக்கு பெயர் ப்ராந்து..

ஹ ஹ அப்டியா?.... நான் இவ்ளோ நாளா காதல்னுல நினைச்சேன்

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

, நானும் கொஞ்சம் சிவந்து போகிறேன்..//

எத்தன நாளுடா இப்படியே மருதாணி மாதிரி செவக்குது, கிழவிலாம் குமரியா தெரியுதுனு பில் டப் கொடுத்திட்டு இருப்பீக.?

ஹ ஹ

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

உன் பார்வைக்கணையிலே, பாதி ஆயுளைத் தொலைத்தேன்..//

என்ன கொடுமை சார் இது.?]]


:-(

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

கற்பனை பண்ண வேணாமா?....தொடரும்....நாங்களும் எழுதுவோம்ல..//

பொதுமக்களே நம்பாதீங்க.!! கற்பனை கற்பனைனு சொல்லிகிட்டு நடந்தத எல்லாத்தையும் சொல்லிகிட்டு கிடக்கா.. நம்பாதீங்க.. இது உண்மை சம்பவம்..

என்னது உண்மை சம்பவமா?.... ஒன்னும் இல்லா நீ தான் இப்போ புரளிய கெளப்பி விடுற...

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

அப்பறம் இன்னொரு விஷயம், பதிவெழுதி பேர் வாங்கும் பதிவர்கள் ஒரு ரகம், குற்றம் கண்டுபிடிச்சே பேர் வாங்குற பதிவர்கள் ஒரு ரகம், இதுல நீங்க...ஹ ஹ நான் யாரச் சொல்லுறேன்னு தெரியுதா?....ஹ ஹ.... .வரட்டா?.....//

ஓய்.!! யார சொல்ற.? தெரியல.. சொல்லிட்டு போ.. யாருடா இங்க வந்து குத்தம் குறை சொல்லுறது.? கமான்..


சி சி நீ இல்ல சகோ...ஹ ஹ

ரேவா சொன்னது…

தம்பி கூர்மதியன் said...

நாளைக்கு பதிவு போட போறேன்னு சொல்லிட்டு இன்னைக்கே போட்டுட்ட.. சரி.. இதுக்கு பெயர் என்ன உரைநடை கவிதையா.? நான் தொடர் பதிவு எழுதுறன்னு சொன்னதும் அவசர அவசரமா வந்து இங்கிட்டு ஒரு தொடர் பதிவு போட்டு எனக்கு போட்டியா வர்றீயா.? உன்ன அப்பரமா டீல் பண்ணிகிடுறன்.. ஆனா.. நல்லா தான் இருக்கு.. நடத்து நடத்து..

உனக்கு போட்டியா நானா? ஐயோ என்ன சொல்லுற, உனக்கு போட்டியா தான் அண்ணி களம் இறங்கிருக்காங்கள்ல... ஹி ஹி நன்றி சகோ

ரேவா சொன்னது…

கந்தசாமி. said...

வசன நடை அருமை, தொடருங்கள்..

நன்றி சகோ

ரேவா சொன்னது…

Chitra said...

நீ பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்ள, ஒய்யார நடமாடுகிறது என் நெஞ்சம் உன் பெயரைச் சொல்லி,சொல்லி....என்னைப் போல நீயும் உணர்கிறாயா? என்று உன்பார்வையில் நான் என் காதலைத்தேட, தூண்டிலில் சிக்கிய மீனாய், நீயும் சிக்கிகொண்டதை உணர்ந்தேன்....


.... அருமையாக எழுதி இருக்கீங்க. :-)

நன்றி சித்ராக்கா :-)

ரேவா சொன்னது…

நிரூபன் said...

முதல் பந்தியில் காதல் பற்றிய கவி நடை அருமை.

நன்றி சகோ

ரேவா சொன்னது…

நிரூபன் said...

அப்பறம் இன்னொரு விஷயம், பதிவெழுதி பேர் வாங்கும் பதிவர்கள் ஒரு ரகம், குற்றம் கண்டுபிடிச்சே பேர் வாங்குற பதிவர்கள் ஒரு ரகம், இதுல நீங்க...ஹ ஹ நான் யாரச் சொல்லுறேன்னு தெரியுதா?....ஹ ஹ.... .வரட்டா?.....//

ஆஹா... நீங்களும் உள் குத்து குத்த வெளிக்கிட்டீங்களா..
அவ்...

இதை நான் நம்ம பாட்டிக்கிட்ட கேட்டுத் தான் தெரிஞ்சுக்கனும்.

ஹ ஹ ஆமா ஆமா, நம்ம பாட்டிக் கிட்ட கேளுங்க, என்ன சொல்லுறாங்கள் எண்டு எமக்கு கதையுங்கள் சகோ ....

ரேவா சொன்னது…

siva said...

நா அப்போவே சொன்னேன் ...
பாக்காத பாக்காதனு....
பாரதி ராஜ படமா பாத்து இப்படி ஆய்ட்டு...

நல்ல
கற்பனை
வளம் பெற வாழ்த்துக்கள் ..

நன்றி சிவா

ரேவா சொன்னது…

siva said...

உன் பார்வைக்கணையிலே, பாதி ஆயுளைத் தொலைத்தேன்... மீதி....மீதி.....//.

அவளா நீ ....ஹஹஅஹா நடத்து நடத்து ..

நீ ஒரு மார்க்கம்தான் இருக்க
ரைட்டு...

ஹ ஹ அவளே தான்

ரேவா சொன்னது…

வேங்கை said...

என்ன ரேவா தொடரா ? இதுவரை கவிதை போல நடை உள்ளது ....

//பதிவெழுதி பேர் வாங்கும் பதிவர்கள் ஒரு ரகம், குற்றம் கண்டுபிடிச்சே பேர் வாங்குற பதிவர்கள் ஒரு ரகம், இதுல நீங்க...ஹ ஹ நான் யாரச் சொல்லுறேன்னு தெரியுதா?....ஹ ஹ.... .வரட்டா?.....//

ஆமா யாருங்க அது, ஏதோ ... யாரையோ சொல்லுறீங்க ? ஆனால் தெரியல ...வாங்க வாங்க பார்ப்போம்

அது சும்மா ஒரு பினிஷிங் டச் காக அப்டி சொன்னேன்...பயந்துட்டேங்களா?ஹ ஹ

ரேவா சொன்னது…

sulthanonline said...

//தூண்டிலில் சிக்கிய மீனாய், நீயும் சிக்கிகொண்டதை உணர்ந்தேன்...//

சிக்கிட்டானா சொல்லவே இல்ல.

(((((((((((எனக்கே தெரியாதே ))))))))))

//கற்பனை பண்ண வேணாமா?....தொடரும்....நாங்களும் எழுதுவோம்ல.//

உண்மையெல்லாம் சொல்லிட்டு கடைசில கற்பனைன்னு போடுறீங்க . இது நம்பும்படி இல்லியே . சமாளிபிகேஷன் நல்லா இருக்கு .

ஹ ஹ நான் சமாளிக்கிறேனா?.....hcl சார் நான் சமாளிக்கலீங்கோ...உண்மையத்தானுங்கோ சொல்லுறேன்... நன்றி நண்பா உங்கள் வருகைக்கு

ரேவா சொன்னது…

FARHAN said...

வி வரிகளையும் கதைவடிவில் சிறப்பான செதுக்கல்

நன்றி நண்பா

ரேவா சொன்னது…

jayaram said...

மிக அருமை.. சொல்ல பட்ட உவமை மனதை கொள்ளை போகிறது... தொடரும்...யாரை? எது?? நீயா? உன் காதலா?

ஹ ஹ எது ஏன் எப்படி னு சன் நியூஸ் ல வர மாதிரி கேள்வி கேக்குறேங்க..சும்மா கற்பனை...

ரேவா சொன்னது…

மாலதி said...

அருமையாக எழுதி இருக்கீங்க.

நன்றி தோழி

ரேவா சொன்னது…

சி.பி.செந்தில்குமார் said...

>>அழகாய் பலர் என்னைக் கடந்து செல்ல, நீ மட்டும் அனைத்துமாய் தெரிய காரணம் என்ன?

haa haa ஹா ஹா ரேவா காதல்ல விழுந்தாட்டாங்க.. ஸ்வீட் எடு கொண்டாடு,... இனி பதிவு போட மாட்டாங்களே?

அது சரி நீங்களுமா>,,,,,இது என்ன ஜி...கணிப்பாலாஜி அஹ ஹ ஹ..அப்டிலாம் இல்ல சகோ..ஓஹ நான் பதிவு எழுதாட்டி உங்களுக்கு கொண்டாட்டமா?...என்னா ஒரு வில்லத்தனம்...இருக்கட்டும் இருக்கட்டும்....ஹ ஹ நன்றி நன்றி நன்றி

ரேவா சொன்னது…

மயாதி said...

பதிவெழுதி பேர் வாங்கும் பதிவர்கள் ஒரு ரகம், குற்றம் கண்டுபிடிச்சே பேர் வாங்குற பதிவர்கள் ஒரு ரகம், இதுல நீங்க...ஹ ஹ நான் யாரச் சொல்லுறேன்னு தெரியுதா?....ஹ ஹ.... .வரட்டா?


நானும் வரட்டா ?

:-(

ரேவா சொன்னது…

மயாதி said...

கற்பனை பண்ண வேணாமா?....தொடரும்....நாங்களும் எழுதுவோம்ல..

நல்லாருக்கு தொடருங்க

நன்றி மயாதி :-)

ரேவா சொன்னது…

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

நீ பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்ள, ஒய்யார நடமாடுகிறது என் நெஞ்சம் உன் பெயரைச் சொல்லி,சொல்லி....என்னைப் போல நீயும் உணர்கிறாயா? என்று உன்பார்வையில் நான் என் காதலைத்தேட, தூண்டிலில் சிக்கிய மீனாய், நீயும் சிக்கிகொண்டதை உணர்ந்தேன்....

சூப்பரா எழுத்யிருக்கிறிங்கள் ரேவா தொடருங்கள்

நன்றி தோழி பிரஷா..

Unknown சொன்னது…

காதல் ஒரு தீவிரவாதி.......ஏனெனில் எது நல்லது எது கெட்டது என்று புரியாததால்!