உன்னைக் காணும் போதெல்லாம்
கர்வப் படச்செய்யும்
அந்த கண்களில்
என்ன தான் ஒளித்துவைத்திருக்கிறாய்...
பட்டாம்பூச்சியாய் படபடக்கிறது
என் கண்கள்
உன் விழிகண்டு..
உன் பார்வை தீண்டும
ஒவ்வொரு நிமிடத்திலும்
பலவாறாய் எனக்குள்
நீ...
சிலநேரப் பார்வை
அரவணைப்பாய்,
சிலநேரப் பார்வை
கதகதப்பாய்..
சிலநேரப் பார்வை
குறுகுறுப்பாய்...
சிலநேரப் பார்வை
கண்டிப்பாய்...
என பலவாறு என்னை
மயக்கியும், கடத்தியும்,
கட்டளையிட்டும், காதலிட்டும்
பாடாய்படுத்தும் அந்த பார்வைக்குள்
என்ன (னைத்) தான் ஒழித்து
வைத்திருகிறாய்
சொல்.
13 கருத்துகள்:
இன்னும் கண்கள் கவிக்கூட பாடும்...
அழகிய கவிதை...
அருமை.... வாழ்த்துக்கள்.. ரிஷ்வன்.
"கட்டளையிட்டும், காதலிட்டும் "காதலிட்டும் கவிதையாய் இருக்கிறது இந்த வார்த்தையே..."எங்கிருந்து கண்டுபிடித்தீர்கள் இந்த வார்த்தையை, முதல் முறை உங்கள் வார்த்தை உபயோகத்தில் தான் இப்படி பார்க்கிறேன் அருமை....
http://tamilraja-thotil.blogspot.com/
எதிர் பார்ப்பைப் பிரதிபலிக்கும் அழகான வரிகள்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution
கவிபாடும் அழகிய கண்களின் காதல், தொடரட்டும் அட்டகாசம்...!!!
வணக்கம் அக்காச்சி,
நல்லா இருக்கிறீங்களா?
அவர் கண்களில் தொலைந்து போனது நீங்கள் என்று அறியாது தேடுகின்றீர்களோ?
இறுதி வரிகளில் சிலேடை கலந்து கண்களில் தொலைந்த உள்ளத்தின் உணர்வுகளை மீட்டிப் பார்க்கும் கவிதை அருமை!
வழக்கம் போல் அழகான காதல் கவிதை!
kangalaal kalavadiya manathu indru kathalai puram thalli pona pennai ennavendru kooruvathu ippadikku pethaiyal nirakarikkapattavanarumaiya kavithai anbudan k.muthukumar tirupur....
ஒவ்வொரு வரிகளும் மிகவும் அருமையாக இருக்கிறது அக்கா.வாழ்த்துக்கள்.
ம் பார்வைகள் பலவிதம்:) அருமை ....
வாவ்!! சூப்பர் ரேவா :-)
ஒரு சின்னப் பார்வைக்குள்ள இவ்வளவு விஷயங்கள் இருக்கா!!!! ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க வழக்கம் போல :-)
என்ன (னைத்) தான் ஒழித்து
வைத்திருகிறாய்
சொல்.//// nice
கருத்துரையிடுக