உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 25 ஆகஸ்ட், 2010

இரு மனங்கள்

இணைய துடிக்கும்
இரு இதயங்கள்
பரிமாறும்
உணர்வுகளின்
உரிமை
வரிகள்....
கைபேசி பேசிய
காதல் வரிகள்.....


ஆண்:

யாரடி நீ எனக்கு
துன்பத்தில் தோள் கொடுக்கும்
தோழியா?
இல்லை நான் தோற்றாலும்
என் தோள் சாயும்
என் மனைவியா?????????
பெண் :
தோள் கொடுக்கும்
தோழனாய் இன்று
என்னோடு இருக்கின்றாய்...
இருந்தாலும்,
என் வாழ்க்கைக்கு
வளம் சேர்க்கும்
வரமாய் என்னோடு
வருவதெப்போது????

ஆண்:
வரத்துடிகிறேன் ,
விருப்பங்கள் பல...
வாழ துடிக்கிறேன்
வருடங்கள் பல....
தரத்துடிகும்
தருணங்கள் பல..
இருந்தாலும் வெறுப்புக்கள் பல
இவையாவும் விதி வலி எனும் போது...

பெண் :
விதி வலியது தான்
வாழ்க்கை நம்மை நெருங்க
வலியோ என்னை தெரியாமல்
விலக.... எட்ட நின்ற
என்னை கிட்ட அழைத்தது
உன் அன்னை சிரிப்பின்
அரவணைப்புத்தான்....
ஆண் :

உன் சிரிப்பில்
என் இதயத்தின் வலி
உணர்கின்றேன்..- என் அன்பே!!!
இது புது வலி தான்
பொறுத்துக்கொள்வேன்
ஆனால்?
உன் மௌனம் என்னை
கொன்று விடாதே....
பெண் :

மௌனமும் புது மொழி
தான் போகிற போக்கில்
புரிதல்கள்
நமக்கு புகட்டும்
மொழி இந்த மௌனம்
.....
ஆண் :

மௌனனமாய் இருந்து
என் மனதினில் வந்தாய்...
மனதினில் வந்து
வன்முறை செய்தாய்....
வாடிய பொழுதில்
வளங்கள் தந்தாய்
என் வான் நிலவே!
நீ என் வாழ்விற்குள்
வசந்தம் வீசும் குளிர்
நிலவாய் வருவாயா?



அன்புடன்
ரேவா

4 கருத்துகள்:

Muras சொன்னது…

Manangalai malara vaikum mangai un kavithaigal mangatha kadalosai....

ரேவா சொன்னது…

nandri nanba

எவனோ ஒருவன் சொன்னது…

வித்தியாசமான முயற்சி தோழி. கவிதையும் நல்லா இருக்கு :-)

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

வித்தியாசமான முயற்சி தோழி. கவிதையும் நல்லா இருக்கு :-)

நன்றி நண்பா