உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

பாதுகாப்போம் பத்திரமாய்

** பண்தொட்ட காலம் முதல்
பழமை மாற எம்
தாய் மொழி தான்
தமிழ்மொழியை தரணி எங்கும்
தவழவிட்டு தமிழர்களாய்
வீறுநடைபோட்டு வந்தோம்

** நம் அடையாளத்தின்
ஆணிவேர்களாய் திகழும்
எம் தமிழன்னையின் அணிகலன்களை
அவனியெங்கும் அணியதந்தோம்,

மறந்தே, ஏனோ!!!
அதை

மீண்டும் அந்நியனிடம்
அடகுவைத்தோம்......

** ஆம்,மறந்தே,
அதை
அந்நியனிடம்
அடகுவைத்தோம்.....

நாம் தமிழ் மொழியை
ஆங்கிலேயன் உச்சரிக்க
நாம் உச்சிக்குளிர்ந்து பரிசு தந்தோம்...,
உள்ளத்தால் தமிழன் என்று
மகிழ்ந்து கொண்டோம் .....

** தோழா,

எல்லா வளமும் இங்கிருக்க,
படையெடுத்தோம் அந்நிய தேசத்திற்கு!!!!

நம் நேசம் மறைத்து ,
பந்த பாசம் என்னும்
உயிர் கால்களை நம்
மண்ணில் உயிர்ப்பிக்க
பறந்தோம் பத்திரமாய்
அந்நிய தேசத்திற்கு.....

** தாய் முகம் தான் நினைவில் வந்தால்
தலையணையில் முகம் புதைத்து,
தாரமவள் நினைவில் வந்தால் ,
தன் பந்தத்தின் ஆதார நினைவுகளை கையில் கொண்டு,
உடன்பிறப்பின் நினைவுதனை
உடமையோடு உடன் கொண்டு...
நாட்கள் மறந்து, நலன்கள் தொலைத்து,
ஆசை துறந்து,
தெரிந்தே நாம் தொலைந்து
கொண்டிருக்கிறோம் அந்நியனிடம்.....

** நம் பண்பாடு பத்திரமாய் உள் தூங்க,
பார் எங்கும் வலம்வரும்
அன்னியதேசத்தின் அழுக்குகள்
அட்டையாய் நம்மில் ஒட்டி
நம் கலாச்சாரம் என்னும் ரத்தம்
குடிக்க நாமே காரணமானோம் ....

** உணவில்லிருந்து ,உடுத்தும்
உடையிலிருந்து, உச்சி முதல்
உள்ளங்கால் வரை நம் அடையாளம்
நாமே தொலைத்து
வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்
ஓர் இந்திய ஆங்கிலேயனாய்....

தோழா!!!

இந்நிலை நீடித்தால்....

இந்திய அந்நியமாய் போகும்
இந்தியர் சுயம் மறந்து அடிமையாய்
போவோம் இந்த கலாச்சார மாற்றத்தால்....

விருந்துண்ணும் பழக்கம்,
உபசரிப்பு, பாசப்பிணைப்பு
கீழ்படிதல், இல்லறம் காத்தல்
என யாவும் இனி, " ஒருகாலத்தில் இந்தியா"
என ஒரு தலைப்புக்குள்
முடிந்து விடலாம்....




என் தேசமே!!!!

என் தேசத்தின் ஜீவனே!!!
விழித்துக்கொள்!!!
விழித்திருக்கையிலே
விழி பிடுங்கும் காலமிது ....

ஆதனால், என் தேசமே ,

என் தேசத்தின் ஜீவனே!!!

****பண்தொட்ட காலம் முதல்
பழமை மாற எம்தாய் மொழி தான்
தமிழ்மொழியை, தமிழ் தந்த,
தமிழர் தந்த பண்பாட்டையும்
நமக்குளே முதலில் விதைதுக்கொள்வோம்
பெற்ற சுதந்திரத்தையும், தமிழர்
தன் பண்பாட்டையும்
பாதுகாப்போம் பத்திரமாய்!!!!!!!!









(தவறுகள் இருந்தால் தோழர்கள் மன்னிக்கவும்)
இந்த கவிதைக்காக எனக்குதவிய என் இணைய
நண்பனுக்கும், எனக்கான கவிதை மாற்றத்தை
எதிர்பார்த்து காத்திருக்கும் என் நண்பர்களுக்குமாய்
இந்த கவிதை,.....

இப்படிக்கு,
அன்னையின் அன்போடும்
அன்னை தந்த
தமிழோடும்
உங்கள்
ரேவா

9 கருத்துகள்:

அருண் K நடராஜ் சொன்னது…

Thozhs... arumai.. nalla aarambam.. innum vevaeru thalaippil memalum kalakkunga... 50th post.. 500, 5000,50000,500000 endru ennikai koodikittae pogattum..
endrum natpudan
ungal nanban

ரேவா சொன்னது…

nandri nanba

bloom சொன்னது…

thiturathuna neraa thita vendi thane yenna aathuku yen oru kavitha vera

ரேவா சொன்னது…

ungalalam thitaa mudiyumaaa sir....

எவனோ ஒருவன் சொன்னது…

புரட்சிகரமான கவிதை.... ரொம்ப நல்லா இருக்கு.

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

புரட்சிகரமான கவிதை.... ரொம்ப நல்லா இருக்கு.

புதுமுயற்சி தான்
வாழ்த்துக்கு நன்றி நண்பா

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அருமையான நாட்டு இளைஞர்கள் படித்து புரிந்து நடந்தால் நாடு செழிக்கும்..
வாழ்த்துக்கள்..

தோழன் சிங்கமுகன் சொன்னது…

உங்களது கவிதை என் ஜீவனில் கரைய மறந்து உயிரில் கலக்க நினைக்கிறது
தயயை கூர்ந்து உங்களது கவிதையில் வடமொழி கலந்துள்ளது அதை திருத்திக்கொள்ளலாமே.

தோழன் சிங்கமுகன் சொன்னது…

உங்களது கவிதை என் ஜீவனில் கரைய மறந்து உயிரில் கலக்க நினைக்கிறது
தயயை கூர்ந்து உங்களது கவிதையில் வடமொழி கலந்துள்ளது அதை திருத்திக்கொள்ளலாமே.