உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

நீ இல்லாத உலகம்


**அன்னை முகம் பார்த்து
ஆசையாய் விடிந்த
பொழுதெல்லாம் இன்று
அன்னை அவள் அலுவலகம்
செல்ல, உன்முகம் பார்த்தே
உயிர் கொண்டோம்....
உன் உயிரோசையைத்தந்து
எம்மை உயிர்ப்பிக்கச்செய்யும்
என் உலகமே....
நீ இல்லையென்றால் .....
என் உலகம் நிசப்தமாய் போய்விடும்...


**விடியல் வரும் பொழுதினிலும்,
விடியலது விடை பெறும் வேளையிலும்,
என்னோடு நீ இல்லாத உலகம்
நரகமாகவே நீளும் ...

** என்னிரண்டாம் உறவே!!!

~தனிமைச் சிறையில் அறையப்படும்
நாட்கள் எவ்வளவு நரகமோ?
அவ்வளவு நரகம்,
நீ இல்லாத உலகம்...

~கடவுள் மனிதனைப் படைத்தான்,
எம் மனிதக்கடவுள் வரமாய்
உன்னைப் படைத்தான்...












ஆம்!

~வரமாய் வந்த கைப்பேசி நீ
வழங்கிய வரங்கள் தான் எத்தனையோ....

~உயிராய் நினைக்கும்
உறவையெல்லாம் ஊட்டி வளர்ப்பதும்
நீ தான்...

~ தீராத பகையெல்லாம்
தீர்த்து வைக்கும் சமாதான
தூதுவன் நீ தான்...

~கலங்கி நிற்கும் இதயத்திர்க்கெல்லாம்
இனிய கடவுள் நீ தான்...

~ என் இனிய கைபேசியே!!!
நீ கொடுத்த காலமாற்றம்
தான் கணக்கிலடங்கா~!~

நீ இல்லாத உலகை
கொஞ்சம் சுற்றி வந்து பயணிப்போம்
இந்த கவிதையில்....

~@~பெற்றோருக்கு:
















~ உன் வழியாய், தன் வழி
வந்த உறவின் குரலொலி
கேட்டு தன் வாழ்வின்
பசுமை நினைவுகளோடு
கதை பேசி திரியும் காலம்
இல்லாமல் போயிருக்கும்
நீ இல்லாத உலகத்தில்...

~@~நட்புக்கு:

அறுதல் சொல்லவும்
ஆனநதக்கூத்தாடவும்
அன்பு மொழியை
குறுந்தகவலாய்

பரிமாறிக்கொள்ளவும்.,
அன்னை மடியாய் அவன்
அமுத குரல் தரும்
அரவணைப்பும்
இல்லாமல் இருந்திருக்கும்
நீ இல்லாத உலகத்தில்...


~@~காதலர்க்கு:

காதலால் கசிந்துறிகி ,
காளையர் அன்புக்காதல்
கதை பேச, சிறு சிறு
கள்ளத்தனம் செய்ய,
விடியும் வரை உன்னை
உறங்கவிடாமல்
"தன்னுறவுக்காய்
உன்னுறவு கொண்டு
பரிமாறப்படும்
காதல் குறுந்தவகல்கள்
எனயாவும் காணமல்
போயிருந்திருக்குமே
நீ இல்லாத உலகத்தில்...

~@~தூரதேச இதயத்திற்கு:
உறவுகளை இதயத்தில்
சுமந்துகொண்டு, உயிர்
வாழ்வின் அடிப்படை
தேவைக்காய் கடல் கடந்து,
காலம் மறந்து,
தம் பொருளாதாரத்தை
வறுமையின்
எல்லைக்கோடில் இருந்து
விரட்ட பாடுபடும் இந்த
" இன்பச்சுமையாளிக்களுக்கு "
அறுதல் கதை கூற,
ஆனந்தக்கண்ணீரால்
அன்பை வெளிக்காட்ட
வாய்ப்பில்லாமல்
போயிருக்குமே,
நீ இல்லாத உலகத்தில்...

காதலே!

**எம் மனிதக்கடவுள்
கொடுத்த வரத்தால்...
தினமும் உன் முகம்
பார்த்தே
எழுந்து,
உன்னை
கையோடே வைத்து
கண்ணுறக்கம் கொண்டு
நகரும்
இந்த நாட்கள்
எல்லாம்
வளமாய்,
வரமாய்
நீள்கிறது...
அப்படி
நீ
இன்று இல்லையென்றால்
இனி நகரும் நாட்கள்
எல்லாம் நரகமாய்
போகுமே...



***அன்னை முகம் பார்த்து
ஆசையாய் விடிந்த
பொழுதெல்லாம் இன்று
அன்னை அவள் அலுவலகம்
செல்ல, உன்முகம் பார்த்தே
உயிர் கொண்டோம்....
உன் உயிரோசையைத்தந்து
எம்மை உயிர்ப்பிக்கச்செய்யும்
என் உலகமே....
நீ இல்லையென்றால் .....
என் உலகம் நீச்சப்தமாய் போய்விடும்...


~தனிமைச் சிறையில் அறையப்படும்
நாட்கள் எவ்வளவு நரகமோ?
அவ்வளவு நரகம்,
நீ இல்லாத உலகம்...

அன்புடன்
ரேவா

3 கருத்துகள்:

div சொன்னது…

தனிமைச் சிறையில் அறையப்படும்
நாட்கள் எவ்வளவு நரகமோ?
அவ்வளவு நரகம்,
நீ இல்லாத உலகம்...

good suberp.....

எவனோ ஒருவன் சொன்னது…

கைபேசியை வைத்து ஒரு நல்லா கவிதை. கலக்குங்க தோழி :-)

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

கைபேசியை வைத்து ஒரு நல்லா கவிதை. கலக்குங்க தோழி :-)

நன்றி நண்பா.....