உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

என் நண்பனுக்காய்


அன்பு நண்பனே!!!!

***எனக்கான என் மாற்றுத்தாயே,


**இந்த கவிதை முற்றும் வரையிலும்
நம் நட்பின் பயணம் மரணம்
தொட்டு முடியும் வரையிலும்
என்னை விட்டு பிரியா
என் அன்பு தேசமே!!!!!
இந்த கவிதை உனக்காய்......

**ஆயிரம் முறை தோற்றாலும்
மீண்டும் தொடருவேன் நான்,
உன் நட்பின் கரம்
எனக்காய் காத்திருக்கும் என்ற நம்பிக்கையில்....

**வழிமாறிய பொழுதுகளில் எல்லாம்
தடம் மாறாமல் நான் செல்ல
தவியாய் தவித்தது
என்னை வழிநடத்திச் செல்லும் ஆசானே....

**வெற்றியில் நான் திளைத்தாலும்,
தோல்வியால் தோற்கடிக்கப்பட்டாலும்
என்னை ஒரே வார்த்தையில்
உயிர்ப்பிக்கச் செய்யும்
என் உண்மையானவனே.......

**எனக்குள் உள்ள திறமை என்னென்று
நானே அறியாத போதும்,
என் திறமைதனை உக்குவித்த
என் உத்வேகனே.......

**அழுது புரண்ட காலத்திலும்,
கரை தெரியாமல் கண்பிதிங்கிய வேளையிலும்,
வறுமையில் வடிய பொழுதினிலும்,
தாழ்வு மனப்பான்மையால் தயங்கி
நின்ற வேளையிலும்,
உன்னால் முடியும் முயற்சி செய்
என்ற ஒற்றை மந்திரம் கொடுத்த
வெற்றி இது உன் வெற்றி....

என் அன்பு நட்பே!!!

**
கருவறை சுமந்த காலம் பத்து
என்றால், என் மழலை குணம்
கொண்ட நட்பு நீ
என்னை சுமந்த நாள் அதிகமென்று
உனக்கும் புரியும் ஊருக்கும் தெரியும்....

**ஆயிரம் கவிதை நான் வடிக்க
வழக்கமாய் அதன் பிழைகள்
நீ திருத்த, விளையாட்டாய் கேட்டாய்
என்னை பற்றி ஒரு கவிதை சொல்
என்று....

உன்னை பற்றி என்ன கவிதையடா
சொல்வது
நான் காணும் என் கவியுலகமே
நீயாய் இருக்கும் போது,

இருந்தாலும் தோழனே
இந்த கவிதை உனக்கானது.......

**தவம் இருக்கின்றேன் தோழா
வரும் பிறப்பிலும் உன் நட்பாக
நம்பிக்கையுடன் வலம் வர
தவம் இருக்கின்றேன்....

என் அன்பு நட்பே!!!

**ஆண்டவன் எனக்காய்
கொடுத்த என் இரண்டாம் கருவறையே,
கருவறை சுமந்த காலம் பத்து
என்றால், என் மழலை குணம்
கொண்ட நட்பு நீ
என்னை சுமந்த நாள் அதிகமென்று
உனக்கும் புரியும்,
ஊருக்கும் தெரியும்....

அன்பு நண்பனே!!!!
**இந்த கவிதை முற்றும் வரையிலும்
நம் நட்பின் பயணம் மரணம்
தொட்டு முடியும் வரையிலும்
என்னை விட்டு பிரியா
என் அன்பு தேசமே!!!!!
இந்த கவிதை உனக்காய்......














என் நட்பின் பாதையில்
ஒரு படிக்கல்லாய் இல்லாமல்
நான் மேல்லேற காரணமாய் இருந்த
என் அசோக நண்பனுக்கும்,
குணத்தையே பேராய் கொண்டவனுக்கும்....
நாகத்தின் துணையானவனுக்கும்,
எழுத்தாளரை பெயரில் கொண்டவனுக்கும்
என் முகவரி அறியா
என் வெற்றிக்காய் வேண்டுதல் செய்து
முரசு கொட்டும் நண்பனுக்காய்
இன்னும் என் அந்தனை
நட்பிற்கும்
இந்த கவிதை சமர்ப்பணம்


நட்பின் துணையுடன்
உங்கள்
ரேவா

4 கருத்துகள்:

guna சொன்னது…

good , keep it up

Unknown சொன்னது…

ஆயிரம் முறை தோற்றாலும்
மீண்டும் தொடருவேன் நான்,
உன் நட்பின் கரம்
எனக்காய் காத்திருக்கும் என்ற நம்பிக்கையில்....///


super

எவனோ ஒருவன் சொன்னது…

உங்கள் நட்புக்கு ஒரு கவிதை. அழகு :-)

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

உங்கள் நட்புக்கு ஒரு கவிதை. அழகு :-)

நண்பா வந்தாச்சா.. நன்றி நண்பா.... வாழ்த்துக்கும் வருகைக்கும்..