உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சொல்வதற்கு இனி ஒன்றுமில்லை...



* தெருவெல்லாம்  தோரணம்
தெருக்கூத்து நாடகம்,
சுவர் எல்லாம் கண்கவரும்
வண்ண வண்ண வாசகம்...
இங்கு,
சண்டையிட்டவன் கூட்டாளி,
சாட்சி சொல்பவன் பங்காளி,
வேடிக்கைப் பார்க்கும்
சாமானியனுக்கோ
சலுகை விலையிலே
சமாதி...

* ஊழல் சகதியை
சந்தனமாய் இட்டுக்கொண்டு,
சாகச வித்தை காட்டி,
ஒன்றுமாறியா பாமரனின்
உரிமையை காசுக்கு
விலைபேசி,
சலுகை காட்டி,
நமக்கு நாமே
போடும் வாய்க்கரிசி...

* மாற்றம் கண்டு கண்டு,
மானுடம் மாறிப் போக,
என்றேனும் மாறுதல்
வரும் எனக் காத்திருக்கும்
மனங்களுக்கோ,
தேர்தல் கால
பாசம் என்பது
கண்துடைப்பு...

* ஏறாத விலையெல்லாம்
ஏறிப்போக,
ஏதுமறியா என் பாமரனுக்கோ
 500 ரூபாயும், பிரியாணிப்
பொட்டலமே
உயிர் நாடி...

* சிந்திக்க  தெரியாத
மனித சடலங்கள் இதுவரை
பெற்ற சலுகை,
வீடில்லா ஏழைகளுக்கு வீடு..
பசித்த வயிறுக்கு உணவில்லாத
வேலையிலே,
ஒய்யார  பவனி வந்து
ஓரத்தில் முடங்கிப் போன
கேஸ் அடுப்பு....
வறுமைக் கோட்டில்
தன் வாழ்வை தொலைத்த
சகோதரிக்கோ
இலவச வண்ணத்தொலைக்காட்சி...
மின்சாரமே இல்லா
என் ஏழைச் சிறுவர்களுக்கோ
மடிகணினி...
இது எல்லாம் போக,
இறந்து போன
மனிதனுக்கும் ஓட்டுரிமை...

* ஆம் சொல்வதற்கு
ஒன்றும் இல்லை...
ஏப்ரல் 13
தேர்தல்...

* ஒத்திகைப் பார்த்தாயிற்று..
முகச் சாயமும்
போட்டாகி விட்டது..
தெருவெல்லாம் இனி
நாடகம்...
இனிக்க இனிக்க சலுகை
என்னும் பாசக் கையிற்றால்
சாமானியனின்
சுவாசம் நிறுத்தும் நாடகம்
ஆரம்பம்....   

* கண்ணால் பார்த்ததைக்
கொண்டு,
காதால் கேட்டதை
வைத்து,
தீர்க்கமாய் யோசித்து,
மாற்றம் என்னும் மையிட்டு,
தேர்தலை வரவேற்ப்போம்...
பொய்மைக்கு இடம் தராமல்,
உண்மையை வாழ வைப்போம்...

* காசுக்கு அடகு வைக்கும்
நம் உரிமையை,
சுய அறிவு கொண்டு
மீட்டெடுப்போம்...

* இதையும் தவறவிட்டால்,
சொல்வதற்கு
இனி ஒன்றுமில்லை.... 

* தெருவெல்லாம்  தோரணம்
தெருக்கூத்து நாடகம்,
சுவர் எல்லாம் கண்கவரும்
வண்ண வண்ண வாசகம்...
இங்கு,
சண்டையிட்டவன் கூட்டாளி,
சாட்சி சொல்பவன் பங்காளி,
வேடிக்கைப் பார்க்கும்
சாமானியனுக்கோ
சலுகை விலையிலே
சமாதி... 

அன்புடன் 
ரேவா

31 நேசித்த உள்ளங்கள்:

{ வேடந்தாங்கல் - கருன் } at: 3/05/2011 9:27 AM சொன்னது…

கவிகை நல்லாயிருக்கு... தமிழ் விளையாடியிருக்கு..

{ மாணவன் } at: 3/05/2011 9:30 AM சொன்னது…

சரியான நேரத்தில் எழுதியிருக்கீங்க சகோ விழிப்புணர்வு கவிதை,

வாழ்த்துக்கள் :)

{ மாணவன் } at: 3/05/2011 9:32 AM சொன்னது…

//காசுக்கு அடகு வைக்கும்
நம் உரிமையை,
சுய அறிவு கொண்டு
மீட்டெடுப்போம்...

* இதையும் தவறவிட்டால்,
சொல்வதற்கு
இனி ஒன்றுமில்லை.... //

சிந்திக்க கூடிய வரிகள் சகோ,

நாம் அனைவரும் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது...

{ sulthanonline } at: 3/05/2011 9:46 AM சொன்னது…

சிந்தக்க தெரியாத
மனித சடலங்கள் இதுவரை
பெற்ற சலுகை,
வீடில்லா ஏழைகளுக்கு வீடு..
பசித்த வயிறுக்கு உணவில்லாத
வேலையிலே,
ஒய்யார பவனி வந்து
ஓரத்தில் முடங்கிப் போன
கேஸ் அடுப்பு....
வறுமைக் கோட்டில்
தன் வாழ்வை தொலைத்த
சகோதரிக்கோ
இலவச வண்ணத்தொலைக்காட்சி...
மின்சாரமே இல்லா
என் ஏழைச் சிறுவர்களுக்கோ
மடிகணினி...
இது எல்லாம் போக,
இறந்து போன
மனிதனுக்கும் ஓட்டுரிமை...

settha piraku vaaikkarisi poda
oru roobaikku arisi

satharana kudimakanin kopaththai veliyittrukkenga arumai thozi

{ Ramani } at: 3/05/2011 10:01 AM சொன்னது…

சொல்ல வேண்டியதையெல்லாம் மிகத் தெளிவாக
உறைக்கும்படி சொல்லிவிட்டு
சொல்வதற்கு ஏதுமில்லை என அடக்கமாய்
தலைப்பிட்டுள்ள உங்களுக்கு
என் சார்பாக பிடியுங்கள் பூங்கொத்து
நல்ல சமூக அக்கறையுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்

{ logu.. } at: 3/05/2011 10:13 AM சொன்னது…

நெத்தியடி...

உண்மையான ஆதங்கம்.

\\உரிமையை காசுக்கு
விலைபேசி,
சலுகை காட்டி,
நமக்கு நாமே
போடும் வாய்க்கரிசி...\\

{ வேங்கை } at: 3/05/2011 10:38 AM சொன்னது…

அருமையோ அருமை

பற்றுள்ள வரிகள் .....

சொல்வதற்கு
இனி ஒன்றுமில்லை.... பார்ப்போம் மே 13 ல் முடிவுகளை !!!

{ அருண் K நடராஜ் } at: 3/05/2011 11:01 AM சொன்னது…

solvadharkku ondrumillai... seivadharkku nariya undu.. sindhiththu seyal paduvoam... oar nalla bhaaradhaththai uruvaakkuvom...

{ ரேவா } at: 3/05/2011 11:13 AM சொன்னது…

வேடந்தாங்கல் - கருன் said...

கவிகை நல்லாயிருக்கு... தமிழ் விளையாடியிருக்கு..

அப்படியா நன்றி கருண் உங்கள் வாழ்த்துக்களுக்கு

{ ரேவா } at: 3/05/2011 11:14 AM சொன்னது…

மாணவன் said...

சரியான நேரத்தில் எழுதியிருக்கீங்க சகோ விழிப்புணர்வு கவிதை,

வாழ்த்துக்கள் :)

நன்றி சகோ :)

{ ரேவா } at: 3/05/2011 11:20 AM சொன்னது…

மாணவன் said...

//காசுக்கு அடகு வைக்கும்
நம் உரிமையை,
சுய அறிவு கொண்டு
மீட்டெடுப்போம்...

* இதையும் தவறவிட்டால்,
சொல்வதற்கு
இனி ஒன்றுமில்லை.... //

சிந்திக்க கூடிய வரிகள் சகோ,

நாம் அனைவரும் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது...

கண்டிப்பாக நாம் விழித்துக் கொள்ள சரியான தருணம் இதுவே சகோ...நன்றி சகோ

{ ரேவா } at: 3/05/2011 11:24 AM சொன்னது…

sulthanonline said...

சிந்தக்க தெரியாத
மனித சடலங்கள் இதுவரை
பெற்ற சலுகை,
வீடில்லா ஏழைகளுக்கு வீடு..
பசித்த வயிறுக்கு உணவில்லாத
வேலையிலே,
ஒய்யார பவனி வந்து
ஓரத்தில் முடங்கிப் போன
கேஸ் அடுப்பு....
வறுமைக் கோட்டில்
தன் வாழ்வை தொலைத்த
சகோதரிக்கோ
இலவச வண்ணத்தொலைக்காட்சி...
மின்சாரமே இல்லா
என் ஏழைச் சிறுவர்களுக்கோ
மடிகணினி...
இது எல்லாம் போக,
இறந்து போன
மனிதனுக்கும் ஓட்டுரிமை...

settha piraku vaaikkarisi poda
oru roobaikku arisi

satharana kudimakanin kopaththai veliyittrukkenga arumai thozi

வேதனையான உண்மைதான் மாற்றம் வரும் காத்திருப்போம் நன்றி நண்பா

{ ரேவா } at: 3/05/2011 11:29 AM சொன்னது…

Ramani said...

சொல்ல வேண்டியதையெல்லாம் மிகத் தெளிவாக
உறைக்கும்படி சொல்லிவிட்டு
சொல்வதற்கு ஏதுமில்லை என அடக்கமாய்
தலைப்பிட்டுள்ள உங்களுக்கு
என் சார்பாக பிடியுங்கள் பூங்கொத்து
நல்ல சமூக அக்கறையுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்

நன்றி நன்றி நன்றி திரு.ரமணி அவர்களே.... பெற்றுக்கொண்டேன் உங்கள் பூங்கொத்தை
மகிழ்ச்சிக் கண்ணீரோடு... நன்றி..

{ karthikkumar } at: 3/05/2011 11:33 AM சொன்னது…

வரிகள் ஒவ்வொன்றும் நச்சுன்னு இருக்கு ......:))

{ ரேவா } at: 3/05/2011 11:34 AM சொன்னது…

logu.. said...

நெத்தியடி...

உண்மையான ஆதங்கம்.

\\உரிமையை காசுக்கு
விலைபேசி,
சலுகை காட்டி,
நமக்கு நாமே
போடும் வாய்க்கரிசி...\\

நன்றி நண்பா எல்லோர் ஆதங்கமும் சேர்ந்தால் மாற்றம் வரும்

{ ரேவா } at: 3/05/2011 11:39 AM சொன்னது…

வேங்கை said...

அருமையோ அருமை

பற்றுள்ள வரிகள் .....

சொல்வதற்கு
இனி ஒன்றுமில்லை.... பார்ப்போம் மே 13 ல் முடிவுகளை !!!



கண்டிப்பாக காத்திருப்போம்.... இடைப்பட்ட காலத்தில் வாக்குப் பொட்டிகளோடு நம் கோவணம் கூட களவு போகலாம்..

{ ரேவா } at: 3/05/2011 11:43 AM சொன்னது…

அருண் K நடராஜ் said...

solvadharkku ondrumillai... seivadharkku nariya undu.. sindhiththu seyal paduvoam... oar nalla bhaaradhaththai uruvaakkuvom...

கண்டிப்பாக நண்பா நான் செய்வதற்கு நிறைய உண்டு...அதற்குள் சலுகைகள்
நம்மை மூளைச் சலவை செய்யாமல் இருந்தால் நன்று... சரி நீ இப்போ இருந்து
கமெண்ட் போட ஆரம்பிச்ச நண்பா... ஹி ஹி சொல்லவே இல்ல... நன்றி நண்பா

{ ரேவா } at: 3/05/2011 11:48 AM சொன்னது…

karthikkumar said...

வரிகள் ஒவ்வொன்றும் நச்சுன்னு இருக்கு ......:))
அட அட வாங்க வாங்க சகோ.இப்போலாம் பாக்கவே முடியல....அவ்வளோ ஆணியா ஹ ஹ...ஆணியா ஹ ஹ.....நன்றி சகோ...

{ MANO நாஞ்சில் மனோ } at: 3/05/2011 3:13 PM சொன்னது…

அசத்தலான சாட்டையடி கவிதை...

{ ரேவா } at: 3/05/2011 3:26 PM சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...

அசத்தலான சாட்டையடி கவிதை...

நன்றி மனோ........

{ ♔ம.தி.சுதா♔ } at: 3/06/2011 7:25 AM சொன்னது…

ஃஃஃஃஏறாத விலையெல்லாம்
ஏறிப்போக,
ஏதுமறியா என் பாமரனுக்கோ
500 ரூபாயும், பிரியாணிப்
பொட்டலமே
உயிர் நாடி...ஃஃஃஃஃ

உண்மையாகவே தாங்க... எப்ப நாமெல்லாம் திருந்துவோமோ தெரியல...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.

{ ரேவா } at: 3/06/2011 9:16 AM சொன்னது…

♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃஏறாத விலையெல்லாம்
ஏறிப்போக,
ஏதுமறியா என் பாமரனுக்கோ
500 ரூபாயும், பிரியாணிப்
பொட்டலமே
உயிர் நாடி...ஃஃஃஃஃ

உண்மையாகவே தாங்க... எப்ப நாமெல்லாம் திருந்துவோமோ தெரியல...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.

உண்மைதான் சகோ நாமெல்லாம் எப்போ திருந்துவோம்...... சலுகை கட்டியே நமை கட்டிப் போடும் மனிதர்களிடம் இருந்து எபோது மீளுவோம்..நன்றி சகோ உங்கள் மறுமொழிக்கு

{ சே.குமார் } at: 3/06/2011 10:41 AM சொன்னது…

சாட்டையடி கவிதை...
விழிப்புணர்வு கவிதை...

{ bala } at: 3/06/2011 11:40 PM சொன்னது…

''வேடிக்கைப் பார்க்கும்
சாமானியனுக்கோ
சலுகை விலையிலே
சமாதி...

ஏறாத விலையெல்லாம்
ஏறிப்போக,
ஏதுமறியா என் பாமரனுக்கோ
500 ரூபாயும், பிரியாணிப்
பொட்டலமே
உயிர் நாடி...''

வரிகளில் தெரிகின்றது வைத்தெரிச்சல் ,,,,,, உள்ளே புழுங்கி தவித்த உங்கள் தமிழ் வெடித்து கவிதையாய் வெளிவந்திருன்கின்றது ...... வாழ்த்துக்கள் தொடருங்கள் வீர நடை போட்டு ....
ஏன் கவிதையை படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறன் இல்லை என்றால் கொஞ்சம் படிச்சிட்டு சொல்லுங்க ஏன் வைத்தெரிச்சல் எப்படின்னு ...
http://nankirukkiyavai.blogspot.com/2011/01/blog-post_04.html#comments

{ siva } at: 3/08/2011 6:18 AM சொன்னது…

present...

{ ரேவா } at: 3/08/2011 8:35 PM சொன்னது…

சே.குமார் said...

சாட்டையடி கவிதை...
விழிப்புணர்வு கவிதை...

நன்றி நண்பரே

{ ரேவா } at: 3/08/2011 8:38 PM சொன்னது…

bala said...

''வேடிக்கைப் பார்க்கும்
சாமானியனுக்கோ
சலுகை விலையிலே
சமாதி...

ஏறாத விலையெல்லாம்
ஏறிப்போக,
ஏதுமறியா என் பாமரனுக்கோ
500 ரூபாயும், பிரியாணிப்
பொட்டலமே
உயிர் நாடி...''

வரிகளில் தெரிகின்றது வைத்தெரிச்சல் ,,,,,, உள்ளே புழுங்கி தவித்த உங்கள் தமிழ் வெடித்து கவிதையாய் வெளிவந்திருன்கின்றது ...... வாழ்த்துக்கள் தொடருங்கள் வீர நடை போட்டு ....
ஏன் கவிதையை படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறன் இல்லை என்றால் கொஞ்சம் படிச்சிட்டு சொல்லுங்க ஏன் வைத்தெரிச்சல் எப்படின்னு ...
http://nankirukkiyavai.blogspot.com/2011/01/blog-post_04.html#comments...


உண்மை தான் நண்பா... உள்ளத்தில் இருந்தது இன்று கவிதையாய் உருமாறியது...
இம்ம்ம் நானும் உங்கள் வலைத்தளம் தொடர்ந்து படிக்கின்றேன்.... நண்பா நன்றி, உங்கள் வருகைக்கு ...

{ ரேவா } at: 3/08/2011 8:39 PM சொன்னது…

siva said...

present...

என்ன சிவா ப்ரெசென்ட் மட்டும் சொல்லிட்டு போறேங்க வழக்கம் போல உங்க கமெண்ட் அஹ காணாம்... என்ன மாயமோ?....

{ தல தளபதி } at: 3/25/2011 9:43 PM சொன்னது…

//* காசுக்கு அடகு வைக்கும்
நம் உரிமையை,
சுய அறிவு கொண்டு
மீட்டெடுப்போம்...//

மீட்டெடுத்து மனப்புரம் கோல்ட் பினான்ஸ்ல வைக்கலாம்னு சொல்றிங்களா மேடம்? வட்டி கம்மியா.

{ ரேவா } at: 3/25/2011 10:33 PM சொன்னது…

தல தளபதி said...
//* காசுக்கு அடகு வைக்கும்
நம் உரிமையை,
சுய அறிவு கொண்டு
மீட்டெடுப்போம்...//

மீட்டெடுத்து மனப்புரம் கோல்ட் பினான்ஸ்ல வைக்கலாம்னு சொல்றிங்களா மேடம்? வட்டி கம்மியா.


பாத்தியா என்னையவே வாருரையே ஜெய்....ஹி ஹி

{ தமிழ் மாணவன் சத்யா } at: 4/15/2011 7:55 PM சொன்னது…

உங்கள் கவிதை பொருள் செறிந்த ஒன்றாக தூங்கும் தமிழரின் கன்னத்தில் அறைவதாய் இருக்கிறது.இனி சலுகை இல்லாத தேர்தல் வரட்டும்

Related Posts Plugin for WordPress, Blogger...