உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 31 ஜனவரி, 2012

அழிக்கப்படா உன் நினைவுகள்....


பிரிதல் எனும்
உடன்படிக்கையின் வாயிலாய்
உன்னை பிரிந்தாகிற்று,
ஆயினும்,
களைக்கப்படாத
செய்தித்தாள்களில்,
வரிசையாய் அடுக்கப்பட்ட 
காலனிகளில்,
சீப்பில் சிக்கிய
உன் கற்றை முடியில்,
படுக்கை கசங்காத
விரிப்புகளில்,
சரியாய் வரிசைப்படுத்தப்படாத
என் முகப்பூச்சுகளில்,
நீ பாதி படித்து முடித்த
புத்தக்கத்தில்,
சுவர் எங்கும் 
இருக்கும் உன் முத்த கிறுக்கலில்,
காதல் கக்கும் நாட்குறிப்பில்,
என
அத்தனையிலும் 
அழிக்கப்படா உன் நினைவுகள்
எனக்கு நினைவு படுத்துகின்றன...
காதல் சில நேரம் கொடுமையானதென்று...








7 கருத்துகள்:

Admin சொன்னது…

குறும்பு செய்யும் குழந்தைகளை செல்லமாக குட்டி நாயே என்று திட்டுவது காதல் செய்வதையும் செல்லக் கொடுமை என சொல்லலாம்..சிறப்பு.

Marc சொன்னது…

அழகிய கவிதை வரிகள் வாழ்த்துகள்.

HOTLINKSIN.com திரட்டி - வலைப்பதிவர்களின் சங்கமம் சொன்னது…

///காதல் சில நேரம் கொடுமையானதென்று...///
மிக மிக கொடுமையானதென்று...

Unknown சொன்னது…

மதுமதி கூறியது...

குறும்பு செய்யும் குழந்தைகளை செல்லமாக குட்டி நாயே என்று திட்டுவது காதல் செய்வதையும் செல்லக் கொடுமை என சொல்லலாம்..சிறப்பு.


சரியாய் சொன்னீர்கள் சகோ... நன்றி உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்.. தொடர்ந்து வாருங்கள்...

Unknown சொன்னது…

dhanasekaran .S கூறியது...

அழகிய கவிதை வரிகள் வாழ்த்துகள்.

நன்றி சகோ :)

Unknown சொன்னது…

HOTLINKSIN.com திரட்டி - வலைப்பதிவர்களின் சங்கமம் கூறியது...

///காதல் சில நேரம் கொடுமையானதென்று...///
மிக மிக கொடுமையானதென்று...

உண்மைதான்...:) நன்றி உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்.. தொடர்ந்து வாருங்கள்...

எவனோ ஒருவன் சொன்னது…

அத்தனையிலும்
அழிக்கப்படா உன் நினைவுகள்
எனக்கு நினைவு படுத்துகின்றன...
காதல் சில நேரம் கொடுமையானதென்று...

அருமை ரேவா.

பிரிந்த பின் காதல் கொடுமை ஆனது தான் :-)