உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 18 ஜனவரி, 2011

நம் விவாகரத்து..



* கண்ணியமான காதலர் 
நாம் என்று ஊர் சொல்ல...
நாலடிச்சுவரை இரண்டாய் 
பிரித்து நீ வேறாய் நான் 
வேறாய் வாழ்வதை யாரறிவார்...

* காதலில் செல்ல கோவமும்,
சின்ன சின்ன சந்தேகங்களும்
அழகாய் தோன்ற, 
இன்று நம் மணவாழ்வில்
காதலும் காணாமல்  போக..
கோவமும், சந்தேகமுமே
உன்னை பலமாய் ஆட்கொண்டுளுள்ளது
என்பதை நான் அறிவேன்..
* அன்பாய் உணவு பரிமாற...
தோல்வியில் உன் தோள்சாய்ந்து 
என் துயர் சொல்ல,
உனக்காய் நான், நமக்காய் நம் குழந்தைகள் 
என்று ஊர் மெச்ச வாழ்வோம் என்று 
சொன்ன நம் உரிமைகள் எங்கே????
* உன்னால் பலமற்று போன 
என் மனதிற்கு அறுதல் 
எல்லாம் நம் காதலின் 
மீதங்களாய் போன நாம் குழந்தைகள்தான்..

* நீ நீயாகவே இருக்க,
நான் நானென்பதை தொலைத்ததின் 
விளைவு நம் விவாகரத்து...

* மூத்தவன்  என்னிடமும்,
இளையவள் உன்னிடமும்,
நம்மிடம் இல்லாத காதலால் 
பிரிக்கப்பட, நிர்கதியாய் 
நிற்பது நம் மீதத்தின் 
எதிர்கால வாழ்க்கைதான்... 

* இனி நாம் காதலர் இல்லை 
கணவன் மனைவியும் இல்லை...
நலம் விசாரிக்கும் உறவும் இல்லை...
என் குழந்தைக்கு நீ தாய் 
உன் குழந்தைக்கு நான் தந்தை...
எங்கே சென்றது நம் காதல்.
..
உன்னை பார்க்காத நாட்கள் எல்லாம் 
நரகத்தின் வாசல் நின்றேன் என்று
சொன்னாயே????
எங்கே சென்றது நம் காதல்...
உன்னோடு காலமெல்லாம் காதலோடு வாழ்வேன்
என்றாயே எங்கே சென்றது நம் காதல்???...
** ஆளுமைகள் ஆட்சி செய்தால் 
அன்பென்பது தொலைந்து போகும்...
குடும்பமும் குழைந்து போகும் 
என்பதை புரிய நான் கொடுத்த
விலை நம் மணமுறிவு... 

* நமக்காய் காத்திருக்கும் கடமைகள் 
ஒருபக்கம்...
மரணத்தில் பிடியில் மாட்டும் வரை 
உன் பிரிவு தரும் வலி
ஒரு பக்கம்...
நம் குழந்தைக்கு நல்ல பெற்றோராய்
இருக்க தவறிப்போன வேதனை 
ஒரு பக்கம் 
என என் எல்லா பக்கங்களும் 
வலி கொண்டு நிரப்பிய என் காதல் தேவதையே!!!

** கண்ணியமான காதலர் 
நாம் என்று ஊர் சொல்ல...
நாலடிச்சுவரை இரண்டாய் 
பிரித்து நீ வேறாய் நான் 
வேறாய் வாழ்வதை யாரறிவார்..

* ஆளுமைகள் ஆட்சி செய்தால் 
அன்பென்பது தொலைந்து போகும்...
குடும்பமும் குழைந்து போகும் 
என்பதை புரிய நான் கொடுத்த
விலை நம் விவாகரத்து..



அன்புடன் 
ரேவா

8 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் சொன்னது…

நான்தான் பஸ்ட்

svramani08 சொன்னது…

"ஆளுமைகள் ஆட்சி செய்தால்....
மிகச் சரியான வார்த்தை.
காதலுக்கு மட்டும் அல்ல
அனைத்து இடர்களுக்கும்...
வாழ்த்துக்கள்..

Yaathoramani.blogspot.com சொன்னது…

"ஆளுமைகள் ஆட்சி செய்தால்....
மிகச் சரியான வார்த்தை.
காதலுக்கு மட்டும் அல்ல
அனைத்து இடர்களுக்கும்...
வாழ்த்துக்கள்..

ரேவா சொன்னது…

sakthistudycentre-கருன் said...

நான்தான் பஸ்ட்..........

ஹஹா... நன்றி.... முதல் வருகைக்கு

ரேவா சொன்னது…

svramani08 said...

"ஆளுமைகள் ஆட்சி செய்தால்....
மிகச் சரியான வார்த்தை.
காதலுக்கு மட்டும் அல்ல
அனைத்து இடர்களுக்கும்...
வாழ்த்துக்கள்..

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி svramani08

ரேவா சொன்னது…

Ramani said...

"ஆளுமைகள் ஆட்சி செய்தால்....
மிகச் சரியான வார்த்தை.
காதலுக்கு மட்டும் அல்ல
அனைத்து இடர்களுக்கும்...
வாழ்த்துக்கள்..

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

எவனோ ஒருவன் சொன்னது…

நல்லா இருக்கு தோழி.

////இனி நாம் காதலர் இல்லை
கணவன் மனைவியும் இல்லை...
நலம் விசாரிக்கும் உறவும் இல்லை...
என் குழந்தைக்கு நீ தாய்
உன் குழந்தைக்கு நான் தந்தை...
எங்கே சென்றது நம் காதல்.////

நான் ரசித்த வரிகள்....

பெயரில்லா சொன்னது…

Right due to this write-up, I personally suppose the site needs considerably more thing to consider. I’ll probably be all over again to study rather more, thanks for of which info.