உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 21 பிப்ரவரி, 2011

என் காதல் தேவன் நீ




* அன்பான பேச்சினில்,
அழகான பரிசுகளில்,
தாயன்பின் அரவணைப்பில்,
செல்ல சண்டைகளில்
சின்ன சின்ன கூடல்களில்
என நீளும் 
என் காலத்தை 
காதல் கொண்டு
நிரப்பிய 
என் காதல் தேவன் நீ...

* அறியா ஒன்றை
அறிந்ததாய்...
புரியா ஒன்றை
புரிந்ததாய்...
காணாத ஒன்றை
கண்டதாய்...பக்தியில்
லயிக்கும் பக்தர்கள்
கூட்டம் உண்டெனில்...
நானும் உன் பக்த்தையே
நீயும் என் காதல் தேவனே...

* பாவம் செய்தோர்...
நிம்மதிவேண்டுவோர்...
அமைதி தேடுவோர்
நாடுவது ஆலயம் எனில்..
நான் நாடுவது உன் மடியன்றோ?...
 
* உன்னிடம் பேச
ஆசைப்பட்டு பத்திரமாய்
உனக்காய் சேமிக்கும்
காதல் வார்த்தைகளின்
கோப்புகள் கூட என்னைக்
கேட்காமல் இரவில்
வெள்ளியாய் உனைப் பார்த்து
சிரிப்பது புரிகிறதா?...

* நீ சோம்பல் முறித்து,
எனைப் பார்க்கும்
பார்வையில் பிறந்த
குழந்தை நிலவென்பது
உனக்கு தெரிகிறதா?....

* உன்னோடு நான்
இட்ட சண்டையில்
நீ வீசிய வார்த்தையின்
வடிவம் தன்
அந்த ஆதவன் என்பது
புரிகிறதா?...

* இரவும் பகலும் மாறிமாறி வர
நீ இட்டுக்கொள்ளும் ஒப்பனை
தான் காரணம் என்பது
புரிகிறதா?....


எல்லாம் புரிந்தும்
புரியாதது போல் நடிக்கும்
என் காதலே!!!!
நீ
நீராய் என் மேனி நுழைந்து,
நிலமாய் எனைத்தாங்கி...
காற்றாய் என் அங்கம் கலந்து,
ஆகாயம்போல்
அளவில்லாத அன்பை 
என்மேல்  பொலிந்து...
நெருப்பாய் எனைத்தொடும் துயரை
எரித்து எனை காக்கும்
என் காதலே...
பஞ்ச பூதங்களையும்
காப்பது கடவுள் என்றால்..
அனைத்தையும் உன்னுள் வைத்து
எனை காக்கும் என் காதலே
நீ என் காதல் தேவன் தானே?!!!!!!

* அன்பான பேச்சினில்,
அழகான பரிசுகளில்,
தாயன்பின் அரவணைப்பில்,
செல்ல சண்டைகளில்
சின்ன சின்ன கூடல்களில்
என நீளும் 
என் காலத்தை 
காதல் கொண்டு
நிரப்பிய 
என் காதல் தேவன் நீ...



அன்புடன்
ரேவா


( என் காதல் தேவன் நீ இது  என்னோட 100 வது   பதிவு.... என்னை இவ்வளவு தூரம்
எழுத உந்திய  என் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி....)






--


38 கருத்துகள்:

priyamudanprabu சொன்னது…

NICE.....

Unknown சொன்னது…

அருமை!
வாழ்த்துக்கள்!!

மாணவன் சொன்னது…

//அன்பான பேச்சினில்,
அழகான பரிசுகளில்,
தாயன்பின் அரவணைப்பில்,
செல்ல சண்டைகளில்
சின்ன சின்ன கூடல்களில்
என நீளும்
என் காலத்தை
காதல் கொண்டு
நிரப்பிய
என் காதல் தேவன் நீ...///

அழகான வரிகளுடன் அருமையான கவிதை சூப்பர் சகோ :)

'பரிவை' சே.குமார் சொன்னது…

Arumai... 100kku vazhththukkal.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

Congratulations for 100th.

it was a nice poem.natural feelings......naturally written.

karthikkumar சொன்னது…

நீ சோம்பல் முறித்து,
எனைப் பார்க்கும்
பார்வையில் பிறந்த
குழந்தை நிலவென்பது
உனக்கு தெரிகிறதா?.////
nice lines sister.....:)) 100th post congratulations thodarnthu kalakkunga...

Unknown சொன்னது…

no no mee the first..
உங்கள் நூறாவது பதிவுக்கு
வாழ்த்துக்கள் கவிதை தோழி
ரசித்து உணரும்
உணர்வுகள் கவிதையாய்
(கடவுளே அவரை காப்பாத்து)
ஏனுங்க உங்கள் பதிவு போல போடா இன்னும் ஐம்பது பதிவு எழுத வேணுமா ?

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

100வது பதிவுக்கு வாழ்த்துகள்...!

sulthanonline சொன்னது…

கவிதை சூப்பர்... நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் சகோ

ரேவா சொன்னது…

பிரியமுடன் பிரபு said...

NICE.....

நன்றி பிரியமுடன் பிரபு... உங்கள் முதல் வருகைக்கும் மறுமொழிக்கும்.. இனி தொடர்ந்து வா(சியு)ருங்கள்

ரேவா சொன்னது…

ஜீ... said...

அருமை!
வாழ்த்துக்கள்!!
நன்றி நண்பரே உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
இனி தொடர்ந்து வா(சியு)ருங்கள்

ரேவா சொன்னது…

மாணவன் said...

//அன்பான பேச்சினில்,
அழகான பரிசுகளில்,
தாயன்பின் அரவணைப்பில்,
செல்ல சண்டைகளில்
சின்ன சின்ன கூடல்களில்
என நீளும்
என் காலத்தை
காதல் கொண்டு
நிரப்பிய
என் காதல் தேவன் நீ...///

அழகான வரிகளுடன் அருமையான கவிதை சூப்பர் சகோ :)

நன்றி சகோ :) உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

எவனோ ஒருவன் சொன்னது…

////
* அறியா ஒன்றை
அறிந்ததாய்...
புரியா ஒன்றை
புரிந்ததாய்...
காணாத ஒன்றை
கண்டதாய்...பக்தியில்
லயிக்கும் பக்தர்கள்
கூட்டம் உண்டெனில்...
நானும் உன் பக்த்தையே
நீயும் என் காதல் தேவனே...

* பாவம் செய்தோர்...
நிம்மதிவேண்டுவோர்...
அமைதி தேடுவோர்
நாடுவது ஆலயம் எனில்..
நான் நாடுவது உன் மடியன்றோ?...////

கிளாஸ்ஸா இருக்கு தோழி :-)

ரேவா சொன்னது…

சே.குமார் said...

Arumai... 100kku vazhththukkal.
நன்றி நண்பா உங்கள் வாழ்த்துக்கு உங்கள் வாழ்த்துகளே எனை வளர்த்தெடுக்கிறது

ரேவா சொன்னது…

ஓட்ட வட நாராயணன் said...

Congratulations for 100th.

it was a nice poem.natural feelings......naturally written.


நண்பா இந்த பெயர் மாற்றம் ஏனோ?..... நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

ரேவா சொன்னது…

karthikkumar said...

நீ சோம்பல் முறித்து,
எனைப் பார்க்கும்
பார்வையில் பிறந்த
குழந்தை நிலவென்பது
உனக்கு தெரிகிறதா?.////
nice lines sister.....:)) 100th post congratulations thodarnthu kalakkunga...


நன்றி சகோ உன்னாலே இது சாத்தியம்.... உனக்கும் என் நன்றிகள் சகோ

ரேவா சொன்னது…

siva said...

no no mee the first..
உங்கள் நூறாவது பதிவுக்கு
வாழ்த்துக்கள் கவிதை தோழி
ரசித்து உணரும்
உணர்வுகள் கவிதையாய்
(கடவுளே அவரை காப்பாத்து)
ஏனுங்க உங்கள் பதிவு போல போடா இன்னும் ஐம்பது பதிவு எழுத வேணுமா ?

ஹ ஹ கடவுள் எப்படி அவர காப்பாத்த என் கடவுளே அவரா இருக்கும் போது.... நன்றி நண்பா உங்கள் வாழ்த்துக்கும் அப்பறம் இன்னொரு 50 வது பதிவுக்கும் முன்கூட்டிய வாழ்த்துக்கள்

ரேவா சொன்னது…

ப்ரியமுடன் வசந்த் said...

100வது பதிவுக்கு வாழ்த்துகள்...!

நன்றி நண்பா உங்கள் வாழ்த்துக்கு உங்கள் வாழ்த்துகளே எனை வளர்த்தெடுக்கிறது

ரேவா சொன்னது…

sulthanonline said...

கவிதை சூப்பர்... நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் சகோ

நன்றி சகோ :) உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//* உன்னிடம் பேச
ஆசைப்பட்டு பத்திரமாய்
உனக்காய் சேமிக்கும்
காதல் வார்த்தைகளின்
கோப்புகள் கூட என்னைக்
கேட்காமல் இரவில்
வெள்ளியாய் உனைப் பார்த்து
சிரிப்பது புரிகிறதா?...//


அடடடா அருமை அருமை காதல் ரசம் பொழி பொழி என பொழியுது மக்கா....

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

////
* அறியா ஒன்றை
அறிந்ததாய்...
புரியா ஒன்றை
புரிந்ததாய்...
காணாத ஒன்றை
கண்டதாய்...பக்தியில்
லயிக்கும் பக்தர்கள்
கூட்டம் உண்டெனில்...
நானும் உன் பக்த்தையே
நீயும் என் காதல் தேவனே...

* பாவம் செய்தோர்...
நிம்மதிவேண்டுவோர்...
அமைதி தேடுவோர்
நாடுவது ஆலயம் எனில்..
நான் நாடுவது உன் மடியன்றோ?...////

கிளாஸ்ஸா இருக்கு தோழி :-)

நன்றி நண்பா... உன்னாலும் இது சாத்தியம்
உன் பொறுமைக்கும்....மறுமொழிக்கும்

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...

//* உன்னிடம் பேச
ஆசைப்பட்டு பத்திரமாய்
உனக்காய் சேமிக்கும்
காதல் வார்த்தைகளின்
கோப்புகள் கூட என்னைக்
கேட்காமல் இரவில்
வெள்ளியாய் உனைப் பார்த்து
சிரிப்பது புரிகிறதா?...//


அடடடா அருமை அருமை காதல் ரசம் பொழி பொழி என பொழியுது மக்கா....


ஹ ஹ ஹ.... நன்றி நண்பா உங்கள் வருக்கைக்கும் வாழ்த்துக்கும்

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

//////உன்னிடம் பேச
ஆசைப்பட்டு பத்திரமாய்
உனக்காய் சேமிக்கும்
காதல் வார்த்தைகளின்
கோப்புகள் கூட என்னைக்
கேட்காமல் இரவில்
வெள்ளியாய் உனைப் பார்த்து
சிரிப்பது புரிகிறதா?...////////


காதல் ரசம் சொட்டும் கவிதை வரிகள்..
படிக்கும் போது சிலிர்க்க வவைக்கிறது..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இந்த கவிதைக்கு
என் வாழ்த்துகளும் மற்றும் வாக்குகளும்..

வேங்கை சொன்னது…

ரொம்ப அழகான காதல் உணர்வு ....

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்கள் காதல் தேவனுக்கும்

100 வது பதிவுக்கும்

Unknown சொன்னது…

ஹ ஹ கடவுள் எப்படி அவர காப்பாத்த என் கடவுளே அவரா இருக்கும் போது.... ந///
எப்போ எல்லாம் சொல்லுவீங்க.....
சாமி சத்தியமா முடியல.....அழுவேன் அப்புறம்..:)
அவரை காப்பாத்த வேணாம் என்னை மட்டும் காப்பாத்து இந்த கவதைகளிடம் இருந்து...:)
நன்றி தங்கள் வாழ்த்துக்களுக்கும்
இன்னும் மேன்மேலும் வாழ்க வளமுடன் கவித்தோழி

logu.. சொன்னது…

Tooo latethan .. irunthaalum solluvamla..


Vazhthtugal..

Kavithaium padamum azhaga irukku.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

அருமை.
100வது பதிவிற்கு வாழ்த்துக்கள்

ரேவா சொன்னது…

# கவிதை வீதி # சௌந்தர் said...

//////உன்னிடம் பேச
ஆசைப்பட்டு பத்திரமாய்
உனக்காய் சேமிக்கும்
காதல் வார்த்தைகளின்
கோப்புகள் கூட என்னைக்
கேட்காமல் இரவில்
வெள்ளியாய் உனைப் பார்த்து
சிரிப்பது புரிகிறதா?...////////


காதல் ரசம் சொட்டும் கவிதை வரிகள்..
படிக்கும் போது சிலிர்க்க வவைக்கிறது..


நன்றி நண்பா உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும்... இனி தொடர்ந்து வாருங்கள்

ரேவா சொன்னது…

# கவிதை வீதி # சௌந்தர் said...

இந்த கவிதைக்கு
என் வாழ்த்துகளும் மற்றும் வாக்குகளும்..


நன்றி நண்பரே...உங்கள் வாக்குக்கும் வாழ்த்துக்கும்...

ரேவா சொன்னது…

வேங்கை said...

ரொம்ப அழகான காதல் உணர்வு ....

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்கள் காதல் தேவனுக்கும்

100 வது பதிவுக்கும்

நன்றி நண்பா உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும்... இனி தொடர்ந்து வாருங்கள்

ரேவா சொன்னது…

siva said...

ஹ ஹ கடவுள் எப்படி அவர காப்பாத்த என் கடவுளே அவரா இருக்கும் போது.... ந///
எப்போ எல்லாம் சொல்லுவீங்க.....
சாமி சத்தியமா முடியல.....அழுவேன் அப்புறம்..:)
அவரை காப்பாத்த வேணாம் என்னை மட்டும் காப்பாத்து இந்த கவதைகளிடம் இருந்து...:)
நன்றி தங்கள் வாழ்த்துக்களுக்கும்
இன்னும் மேன்மேலும் வாழ்க வளமுடன் கவித்தோழி...

சாமி சத்தியமா முடியல.....அழுவேன் அப்புறம்..:)

என்னாலையும் முடியல நண்பா... ஹ ஹ...என் கவிதைகளிடம் இருந்து தப்பா முடியாது பாஸ்...நன்றி நன்றி நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

ரேவா சொன்னது…

logu.. said...

Tooo latethan .. irunthaalum solluvamla..


Vazhthtugal..

Kavithaium padamum azhaga irukku.


நன்றி நண்பா உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும்... இனி தொடர்ந்து வாருங்கள்

ரேவா சொன்னது…

விக்கி உலகம் said...

அருமை!
வாழ்த்துக்கள்!


நன்றி நண்பரே உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்...இனி தொடர்ந்து வா(சியு)ருங்கள்

ரேவா சொன்னது…

தோழி பிரஷா said...

அருமை.
100வது பதிவிற்கு வாழ்த்துக்கள்

நன்றி தோழி பிரஷா....உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் இனி தொடர்ந்து வாருங்கள் தோழி

Unknown சொன்னது…

பிரபல கவியும் ,உலகபுகழ் ப்ளாக் பதிவரும் எனது தோழியும் ஆகிய ரேவதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்

கவிதை பூக்கள் பாலா சொன்னது…

நீராய் என் மேனி நுழைந்து,
நிலமாய் எனைத்தாங்கி...
காற்றாய் என் அங்கம் கலந்து,
ஆகாயம்போல்
அளவில்லாத அன்பை
என்மேல் பொலிந்து...
நெருப்பாய் எனைத்தொடும் துயரை
எரித்து எனை காக்கும்
என் காதலே...
பஞ்ச பூதங்களையும்
காப்பது கடவுள் என்றால்..
அனைத்தையும் உன்னுள் வைத்து
எனை காக்கும் என் காதலே
நீ என் காதல் தேவன் தானே?!!!!!!


அருமை பஞ்ச பூதங்களை இப்படியும் கூறலாமோ அருமை தோழியே வாழ்த்துக்கள் 1000 பதிவுகளுக்கு முன்கூடியே

சீராளன்.வீ சொன்னது…

அழகிய கவிதை தொடரட்டும் உங்கள் கவி பயணம் ......... வாழ்கவளமுடன்