உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 25 மார்ச், 2014

கற்பனையாளனுக்காய்





வாழத் தொடங்குவதற்கான வாய்த்தலை 
கோடிட்டு காட்டா காலத்தின் முன்
திராணியற்று நிற்கிற கனவுக்குள்
நீயுண்டு நெஞ்சம் நிறைய நிகழ்வுசார் 

காதலுண்டு

உணர்வுக்கு சிக்கா உடையணிந்து கொண்டு
உனைத் தேடுதல் அசெளகர்யமெனப்பட்டாலும்
மெல்ல மெல்ல அருகமர்ந்து தலைகோதிவிடுகிற
விரலினைத்தருகிறாய் கால்முளைக்கா
எந்தன் கனவுக்குள்

கற்பனையில் உனைத்தேடி
கனவுதனில் நிதம் வாடி
நிஜத்தினில் ஓடுகின்றேன்
சிறகற்ற பறவையைப்போல்..

பிய்தெரியமுடியா உந்தன் கனவுகளெனக்கு
சிறகுகளான பின் சிக்கனமென்ன
இச்சிறுபிள்ளைக் கனவுக்கு

உனைத்தேடி அலைந்திட்டேன்
கனவதில் நீ கிட்ட காத்திருந்தவள்போல
காதலுண்டிட்டேன்


மெய்யுணர்வில் கொஞ்ச்ம் கெஞ்சுதல்
மொழி அறிந்திட்டேன்
நாணமெனும்
தாழிட்டேன்
நாள் கணக்கில்
இவ்வுணர்வில் கட்டுட்டேன்
 
கனவுப் பசிக்கு உணவாகி
மெல்ல மெல்ல
உனைத் தின்றிடத் துடிக்கும்
இக்கவிதையின்
கருதனில்
உன்னை வைத்து
என்னை எழுதிட்டேன்..

எழுதியவை
எழுந்து நின்று
என்றேனும் உனை சேர்க்குமென்ற
 நம்பிக்கையில் இக்கவியை முடித்திட்டேன்..

0 கருத்துகள்: