உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 25 மார்ச், 2014

கானல் தகிக்கும் பொழுது






ஒரு பாலைவனத்தை யாருமற்று
கடப்பது போன்றிருக்கிறது
இந்நாட்கள்

தனிமை தகிப்புகளுக்குள்
கிளையுயர்த்தி ஆறுதல் தருகிற
நிழலுக்குள் நீயிருக்க

எப்போது வருமென்று வானம் பார்க்க
தொடங்கியிருக்கிறது
வார்த்தைக்குள் சிக்காத மேகக்கூட்டமொன்று



0 கருத்துகள்: