உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 25 மார்ச், 2014

கிட்டாதவைகளின் வழி




இப்படி ஒரு முடிவு
ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்று தான்
என்பதால் பெரிதாய் ஏமாற்றமில்லை....

ஏற்றம் கொண்டு வரும்
எந்த ஒரு நாளின் நிமிடமும்
தொடங்கி வைத்ததில் தானே
வந்து வி(மு)டியும்..

கிட்டாது போதலின் அசெளகர்யங்கள்
பற்றி கவலையில்லாது போயினும்
நினைவின் தடத்திலிருந்து
நீங்காது இருப்பது தான்
பேரிழபபை அவ்வவ்போது
கண்ணில் நிறுத்துகிறது...

பேரிரைச்சலோடோ
இல்லை
தனியொரு இடத்தில்
உரக்க வசைபாடுதலில் ஊடோ
நாவினால் வருடி
தீயச்சொற்களில் உறவை
எரிப்பதில் மூலமோ
உன்னை விடுவிப்பேன்
எனதிந்த வலிகளோடு

எப்படியும்
வலிகள் கொடுக்க
இவ்வனாந்திரத்தில் வந்தமரும்
சில உயிர் பறவைகளுக்காய்
காத்தே கிடக்கிறேன் கிளைகள் விரித்து

வேறென்ன
சம்பிரதாயமெனும் சாட்டையெடுத்து
நீ வீசக்காத்திருக்கும்
அவ்வார்த்தைக்காய் காத்திருக்கிறேன்
சீக்கிரம் வா

அடுத்ததொரு வலிக்கு
ஆயத்தமாகவேண்டும்
நான்....

1 கருத்துகள்:

Unknown சொன்னது…

நல்லாருக்கு...