உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 25 மார்ச், 2014

பற்றுதல் சுகம்




எதையாவது பற்றிக்கொள்ளுதல்
தேவையாய் இருக்கிறது
பல நேரங்களில்

கனவுகளின் வாசத்தை
வசப்படுத்தும் நிமிடங்களில்,

காத்திருப்பின் மூலம்
அலைக்கழிக்கப்படும் நேசத்திடம்,

ஒரு தோல்வியின் போது
நொருங்கி உடைகின்ற மனதிடம்,

அனுதாபங்களின் பிடியில்
சிக்கிக் கிடக்கின்ற சுயத்திடம்

எதைச் சொல்லவேண்டுமோ அதைச்சொல்லாது
தவிக்கின்ற கவிதைகளிடம்

தனித்திருக்கும் பிடிதனில்
லாவகமாய் கிடைக்கும் நினைவுகளிடம்

மரண நேரத்தின் யோசிப்புக்கு பின்
உயிர் உணர்த்தும் தவறுக்காய்
தவறி விழும் கண்ணீரிடம்

எப்படியாவது
இணங்கிப்போய்விட வேண்டுமென்ற
இயல்பைத் தொலைக்கும்
இல்லாமைகளிடமென
 
இடைமறிக்கும்
இவ்வெல்லா உணர்வுக்கு பின்னும்
எதையாவது பற்றிக்கொள்ளுதல்
தேவைப்படுகிறது பல நேரங்களில்


3 கருத்துகள்:

Unknown சொன்னது…

அருமை..

கீதமஞ்சரி சொன்னது…

வணக்கம். தங்கள் பதிவு இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
வாசிக்க http://blogintamil.blogspot.com.au/2014/09/blog-post_18.html
நன்றி.

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ.http://blogintamil.blogspot.com/2014/09/blog-post_18.html?showComment=1411012022369#c8444431922796668986

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-