உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 14 ஜூன், 2010

பிடிக்கும் எனக்கு....

தோழனே.

* உன்னால் எனக்குள் உருவான
மாற்றங்கள் பிடிக்கும்........

* கொள்ளாமல் என்னை கொள்ளும்
உன் காதல் பிடிக்கும்

* உன்னக்காக எனக்குள் உருவான
கவிதை பிடிக்கும்...

* உன்னோடு இருந்த அந்த ஆனந்த
நினைவுகள் பிடிக்கும்...

* ரகசியமாய் நீ என்னை
ரசிப்பது பிடிக்கும்...

* நீ ரசிப்பதை நான் அறிந்ததும்
ஒன்றும் அறியா பிள்ளை போல் நீ
நடிப்பது பிடிக்கும்...

* உனக்கான காத்திருப்பில்
நான் தொகுத்த கவிதையை
உன்னிடம் கொடுக்கும் போது
அலச்சியம் செய்யும் உன் செல்லத்
திமிர் பிடிக்கும்......

* என் காதலை ஏற்றுக் கொள்ள
மனம் இருந்தும் ஏளனமாய்
பார்ப்பது போல் உன்னை நீ
ஏமாற்றிக்கொல்வதாய் நீ உணரும்
உன் பார்வையின் ஏக்கம் பிடிக்கும்...

* என் கைகோர்த்து நடக்க
ஆசை இருந்தும்
அசையாமல் இருக்கும்
உன் ஆண்மை பிடிக்கும்...

* உன்னையும் உன் நினைவுகளையும்
நிழலாய் நேசிக்கும் என்னை பிடிக்குமா
என்று நான் கேட்க மறந்து போன
அந்த நாட்களை பிடிக்கும்

* தடுமாறி போன என்
என் நினைவுகள் எல்லாம்
தடம் மாறாத உன் நினைவுகளுடன்
தான் பயணம் செய்கின்றன
என்று தெரிந்தும்
ஒன்றும் தெரியாதவனை போல்
நீ செய்யும் முகபாவம் பிடிக்கும்...


தோழனே,


*உன்னோடு வாழும் பொழுதுகள்
வேண்டும் என்று தான்
வாடாத மலரான இவள்
வாடும் மலர் கொண்டு
பூஜிகின்றாள்

* இந்த மலரின் வேதனை தான்
புரியுமோ? இல்லை
உன் தோளுக்கு வராமல்
இந்த மலரும் வீணாகுமோ?
விடை தெரியவில்லை


^ இருப்பினும் பிடிக்கும் எனக்கு,
என்றாவது என்னை உன்னக்கு
பிடிக்கும் என்று காத்திருக்கும்
அந்த நாட்களே பிடிக்கும் எனக்கு ^

* அந்த நாட்கள் வந்தால்
தயங்காமல் சொல் அன்றாவது பிடிக்குமா
என்னை உனக்கு ?

இப்படிக்கு
உன்னை பிடிக்கும்
ரேவதி

2 கருத்துகள்:

எவனோ ஒருவன் சொன்னது…

really superb :-)

அந்த நாள் கூடிய சீக்கிரம் வரும். வாழ்த்துக்கள் தோழி :-)

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

really superb :-)

அந்த நாள் கூடிய சீக்கிரம் வரும். வாழ்த்துக்கள் தோழி :-)

வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பா