உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 14 ஜூன், 2010

சிந்தனை செய் மனிதா?

^மனிதா^
* உயர்ந்திடும் எண்ணம்
பறவைக்கும் உண்டு.....

*உழைத்திடும் எண்ணம்
எறும்புக்கும் உண்டு...

*இறைதேடும் பழக்கம்
விலங்குக்கும் உண்டு...

*சேர்த்து வாழும் பண்பு
பறவைக்கும் உண்டு...

*பகிர்ந்துண்டு வாழும் குணம்
காக்கைக்கும் உண்டு...

*பழிவாங்கும் தன்மை
பாம்பிற்கும் உண்டு...

*நன்றியை சொல்லும் நயம்
நாய்க்கும் உண்டு...

*அன்பு கட்டும் ஆற்றல்
கோழிக்கும் உண்டு...

*சேமிக்கும் குணம்
ஒட்டகத்திற்கும் உண்டு....

^மனிதா^
* உன்னிடம் உள்ள எல்லா
பண்பும் ஐய்ந்தறிவுள்ள உயிர்களுக்கும் உண்டு....

*ஆனால்*

*ஆறாவது அறிவாய் ஆண்டவன்
நம்மை பூமியில் படைத்தது
எதற்க்ககா?

***சிந்தித்து பார் மனிதா? ***
@ புறம் பேசும் பழக்கம்
விலங்குக்கு இல்லை...

*அடுத்தவரை ஏமாற்றும் குணம்
அதற்கு இல்லை...

*சொந்தமாய் பழகி சூழ்ச்சி செய்யும்
வழக்கம் அதற்கு இல்லை...

* கூட்டு வாழ்கையை இன்னும்
அது குழைக்கவில்லை...

*எந்த புறாவும் தன் ஜோடியன்று,
பிற ஜோடியை தொடுவதில்லை....

***சிந்தித்து பார் மனிதா? ***

^ இரண்டறிவு மரம் கூட மறித்தாலும்
மனிதனுக்கு பயன்படுகிறது.....

^ ஓரறிவு இனம் கூட
உரமாய் நமக்கு பயன்படுகிறது...

** ஆனால் நீ? **
யோசி மனிதா? யோசி
ஆறாவது அறிவாய் ஆண்டவன்
நம்மை பூமியில் படைத்தது
எதற்காய்???

அன்புடன்
ரேவதி

4 கருத்துகள்:

jayaram சொன்னது…

உண்மையை உரக்க சொல்லிய உனக்கு நன்றி
உணரும் உள்ளம் இங்கே !!

ரேவா சொன்னது…

nandri jayaram

எவனோ ஒருவன் சொன்னது…

அருமையா இருக்குங்க....

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

அருமையா இருக்குங்க..

ரொம்ப ரொம்ப நன்றி நண்பா