உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 14 ஜூன், 2010

ஊடல்

அன்பே!

*நம் கண்கள் பார்பதற்குள்ளே
கருத்தொருமித்தோம்!!!!
கனவுகள் கொண்டோம்!!!
காரணமில்லா சிறு சிறு கள்ளத்தனம் செய்தோம்!!!!

*விதிவழியே,
நமக்கு விதிக்கப்பட்ட
வழியை விளையாட்டாய்
படி படியாய் கடந்தோம்...

*எனக்கானவன் நீ என்றும்
உனக்கானவள் நான் என்றும்
(தயக்கத்துடன்) நம் உள் மனது சொன்னாலும்
நம்மை உறங்காமல் உளற
வைப்பது எது?

*இந்த சிறிய நாட்களில்
நமக்குள் உண்டான ஏதேச்சை
எண்ணங்கள் எத்தனையோ!!!!

*முட்டி மோதி நம்மிடம்
எட்டி பார்க்கும் நம்
ஒற்றுமைகள் எத்தனையோ!!!!

*ஆழ இருக்கும் மனதில்
நம்மை ஆளத்துடிக்கும்
ஆசைகள் எத்தனையோ!!!!

*தயக்கங்கள் எத்தனையோ!!!!
தவிப்புகள் எத்தனையோ!!!!
தடையில்லா என்னை நெருங்கி வரும் உன்
தார்மீக உரிமைகள் எத்தனையோ!!!!

*இப்படி எத்தனையோ,
இருந்தும் ஓர்
**எத்தனை** போல்
நம்மை ஆட்டுவிப்பது எது! தோழா??

அன்பே!

*சுகமான ஒரு மாலை பொழுதில்
முதன் முதல் பார்வை பரிமாற்றம்...

என் இரண்டாம் தாய் நீயா?
என்று என்னுளே ஆயிரம் கேள்விகள்...!

ம்...ம்

நம் வாழ்கை கேள்விகளுக்கெல்லாம்
விடை தெரிந்து விட்டால்
"விதி" என்ற ஓன்று
வீண் தானே!!!!!

*மாற்றங்கள் வாழ்கையில்
மாறாமல் இருக்க நம்மை
வந்தடையும் வாழ்வியல் மாற்றங்கள் தான்
எத்தனை!!! எத்தனை!!!!

*தினம் தினம் உன் குறுந் தகவல்களால்
நிறப்பப்படும் என் கைப்பேசி
இபோதெல்லாம் கணவனை
இழந்த கைம்பெண்ணாய்
மாறியதன் மாற்றம்
என்னடா?????

*என்னை வந்தடையும்
உன் அழைப்புகள்,
உன் அரவணைப்பு,
உன் தாய் உள்ளத்தின் கனிவுயாவும்
காற்றில் கிடத்திய கற்பூரமாய்
காணாமல் போனதன்
கரணம் என்னடா???

புரிந்துகொண்டேன்னடா!!!!

*மாற்றங்கள் வாழ்கையில்
மாறாமல் இருக்க நம் வாழ்வில்
நம்மை வந்தடையும் வாழ்வியல்
மாற்றங்கள் தான்
எத்தனை!!! எத்தனை!!!!

மாற்றங்கள் தரும்
மாற்றங்களை
எதிர்பார்த்திருக்கும்

ரேவா

2 கருத்துகள்:

எவனோ ஒருவன் சொன்னது…

////மாற்றங்கள் தரும்
மாற்றங்களை
எதிர்பார்த்திருக்கும்

ரேவா////

கவிதையை மாடல் போல முடிக்கிறீர்கள். அழகு :-)

ரேவா சொன்னது…

////மாற்றங்கள் தரும்
மாற்றங்களை
எதிர்பார்த்திருக்கும்

ரேவா////

கவிதையை மாடல் போல முடிக்கிறீர்கள். அழகு :-)

நன்றி நண்பா.... உங்கள் பொறுமைக்கும் உங்கள் மறுமொழிக்கும் நன்றி நன்றி நன்றி....