உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 14 ஜூன், 2010

***தெரியாத எனது பயணம்***+

*அன்புக்கு அர்த்தமான
என் அன்னையை....

* அறிவுக்கு துணை தந்த
என் தந்தையை....

* பாசத்தை உண்மையாய் பரிமாறும்
என் சகோதர உறவுகளை....

* நட்பிற்கு உயிர் கொடுத்த
என் நண்பனை....

என அத்தனை உறவுகளையும்
மறந்தேன்,
உன்னை சந்தித்ததிலிருந்து

^இறுதியாய் என்னையும் நான்
மறந்தேன் அது உன்னைபற்றி
நான் சிந்தித்ததில் இருந்து^

என் நேசமிகு உறவே!!!

* உயிர் தெரியா? உணர்வுகள் அறியா?
ஏதோ ஓன்று உன்னிடம்
என்னை அடிபணிய செய்கின்றது....

*உன் நிழலும் என் நினைவுடன்
தான் நித்திரை கொள்ள வேண்டும்
என்று நித்தமும் என் மனம்
எதிர்பார்கின்றது.....

தூயவனே!!!!

* உனது பார்வை கிரகங்களாய்
என் மீது விழும் போது
நான் அதைநேசிக்கவில்லை
என்று தான் நினைத்திருந்தேன்..
ஆனால் உன் நியாபகம்
காற்றாய் வந்து என் மன திரையை
அகற்றும் போது தான்
உன் பார்வையின்
ஆளுமையை பத்திரமாய் என்னக்குள்ளே
சேமித்து வைத்திருப்பதை
நானே அறிந்தேன்....

***தோழனே-உன்னை
நீக்கிய இந்த வாழ்வு
சரிப்படுமா? சாத்தியமா?
தெரியவில்லை....
இதற்கு காலம் என்ன பதில்
சொல்லுமோ புரியவில்லை-இவ்

**விடைதெரியா விதியறியா?
ஒரு கேள்விக்கு இருவரும்
பதில் எழுதிவிட்டோம்.-இதற்கு
நம் உறவுகள் என்ன பதில் சொல்லுமோ
புரியவில்லை

என் இனியவனே!!!

* நீ என்னை பார்த்திடும் போதெல்லாம்
நான் பார்வை இழந்தவள் ஆகின்றேன்
இந்த உலகத்தின் மீது..

* உன் சுவாசம் என்னை
சுட்டிடும் போதெல்லாம் சத்தியமாய்
சொல்கிறேன்
உன் வசமே நான் அடிமை ஆகின்றேன்....

நீ புன்னகைக்காய் உன் இதழ்
பிரிக்கும் போதெல்லாம்
நான் உன்னோடு
சேர்வதாய் உணர்கின்றேன்..
உன் புன்னகைக்கும் நானே
காரணமாக வேண்டும் என்று எதிர்பார்கிறேன்..

^இது சரியா? தவறா?
என ஒரே பதில் தரும்
கேள்விகளை என்னக்குள்ளே
நான் கேட்டு விட்டேன்,
இறுதியாய் என் கேள்விகளுக்கு
எல்லாம் பதிலாய் என்னை
வென்று நிற்பது
**உன் மோக(ன)ப்
புன்னகை மட்டும் தான்**
***தோழனே உன் நினைவோடு
வாழும் இந்த வாழ்கை
போதும் என்று சொல்ல
நமக்குள் நடப்பது
திரைக்கதையும் அல்ல..

*உன்னயே வென்று
காட்டுவேன் என்று சொல்ல
நமக்குள் நடப்பது
காவியக்கதையும் அல்ல.
**எதார்த்த உலகத்தில்
ஏமாற்றங்களையும் நமக்கு
ஏற்றதாய் எடுத்துக்கொள்ள
தெரிந்தவனே ஏதார்த்த மனிதன்.

^நான் ஏதார்த்த மனிதனாய்
வாழவிரும்பும்
ஒரு போகும் பாதை
தெரியாத பயணி.
எனக்கு தெரிந்ததெல்லாம் -
**நான் இன்று
உன்னோடு பயணப்படுகின்றேன்***
***என் நினைவுகள்
உன் கனவோடு
பயணபப்படுப்படுகின்றன****
இப்படிக்கு
முடியாத பயணங்களை
உன்னோடு மட்டும்
பயணிக்க
விரும்பும்

ரேவதி

2 கருத்துகள்:

எவனோ ஒருவன் சொன்னது…

ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. வார்த்தைகள் இல்லை உங்களைப் பாராட்ட. எந்த வரியை நான் மிகவும் ரசித்தேன் என்று என்னால் சொல்ல முடியவில்லை.எல்லா வரிகளும் அருமை :-)

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. வார்த்தைகள் இல்லை உங்களைப் பாராட்ட. எந்த வரியை நான் மிகவும் ரசித்தேன் என்று என்னால் சொல்ல முடியவில்லை.எல்லா வரிகளும் அருமை :-)

ரொம்ப ரொம்ப நன்றி நண்பா