உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 14 ஜூன், 2010

காதலுடன்

தட்டு தடுமாறி
நடைபோட்ட
பொழுதில் கை கொடுத்த
என் அன்னை மீது
எனக்கு முதல்
காதல்.......................


தவறு எனத் தெரிந்தாலும்
தடுக்காமல் என்னை
நெறிபடுத்திய என்
தந்தை மீது
எனக்கு இரண்டாம் காதல்..............


காதலையே நேசித்து
காதலையே காற்றாய்
சுவாசித்த அந்த காதல் மீதும்
எனக்கு ஓர் மூன்றாம் காதல்............


ஆனால் இந்த காதல் தந்ததோ?

காற்றாய் வந்து என் கனவு
கலைத்தது...

நெருப்பாய் வந்து என்னை
வாட்டி சென்றது.

கண்ணீராய் வந்து சோகம்
நனைத்து.......

நிலமாய் வந்து என்னை
விதைத்து சென்றது..........

ஆகாய போர்வையில்
என்னை மறைக்க
நினைத்தது.............


ஆம் இவ்வைந்து
புலன்களும் நான் நேசித்த
உன்னை மறக்க மறுத்தது.
காதலே!


* உன் கண்ணாடி மனதில்
என்றேனும் என் பிம்பம்
வந்ததுண்டா?

* காற்றாய் வந்து என்றேனும்
உன் தூக்கம் நான்
கலைத்ததுண்டா?

* கலவரமான உன் மனதிற்குள்
எந்தன் கனவுகள் என்றேனும்
வந்ததுண்டா?

* காயமான உன் மனதிற்கு
ஊனமான என் காதல் என்றேனும்
மருந்து தடவி சென்றதுண்டா?

சொல்லடா?

@ சொல்லாமலே போன என்
காதலின் சோகம் சொல்லி சொல்லி
என்னை கொல்லுதடா?
^ இது உன் முதல் காதலா என்று? ^


********^தட்டு தடுமாறி
நடைபோட்ட
பொழுதில் கை கொடுத்த
என் அன்னை மீது
எனக்கு முதல்
காதல்.......................

இப்படிக்கு
முதல் காதலுடன்
உன் காதலையும் விரும்பும்
உன்னவள்
ரேவதி

2 கருத்துகள்:

எவனோ ஒருவன் சொன்னது…

Excellent!

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

Excellent!

thanks aanath