உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 14 ஜூன், 2010

புரியாமல் ஓர் கவிதை

விட்டு விலகும் நெஞ்சங்கள்
எல்லாம் விடுதலை விரும்பிகள்
என்றால்..,

விருப்பத்தை மறைத்துத்தான்
விதைத்திருக்கலாமே ?

* விடையறியா
என் வழியோடு விளையாடும்
என் ஆண் விதியே.,

இது தான்
உன் கணக்கென்று
அன்றே நீ உறைத்திருந்தால்,
மனனம் செய்த உன்
கணக்கெல்லாம் என் மனதோடே
போயிருக்கும்......

*ஆனால் என் ஆண் விதியே - நீ
உன் விழியால்
என் மனதை கிறங்கடித்தாய்....

உன் அன்பால் ,
என் மனதை சிறைப்பிடித்தாய்....

புன்னகைக்கும் உன் இதழ்களுக்குள்,
இரு விடைகள் தந்து நின்றாய்...

**புரியாத உன் புன்னகைக்கு
புதுப்பெயர் காதல் என்று இவள்
கணித்து கொண்டாள்**

என்னவனே...

என் காதல் விதியோ
உன் நினைவின் பயணத்தோடு

ஆனால்
உன் பயணமோ
ஒரு வித பயத்தோடு ...

சொல்,


விட்டு விலகும் நெஞ்சங்கள்
எல்லாம் விடுதலை விரும்பிகள்
என்றால்..,

விருப்பத்தை மறைத்துத்தான்
விதைத்திருக்கலாமே ?

அன்புடன்
ரேவா

2 கருத்துகள்:

எவனோ ஒருவன் சொன்னது…

நல்லா இருக்கு....

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

நல்லா இருக்கு....

நன்றி நண்பா