உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

மனக்கிறுக்கல்கள் 5

   

உணர்வுகள் கொண்டு கட்டி எழுப்பப்படும் மாளிகைகள் அழகானவை. அதன் நாடி நரம்பில் கலந்தோடும் இளஞ்சிவப்பின் சூடு தரும் செளகர்யம், உறவின் உயிர்வாழ்தலை உள்ளபடிச் சொல்லிப்போவதில், உயிர்த்திருக்கும் இந்நாட்களின் பச்சையுடம்பு பேறுகால தடத்தை தடவி தடவி இன்புறும் தாயைப் போல் மனதின் முகத்தை அழகேற்றுகிறது.. 

வழித்தடங்கள் திறப்பதற்காய் ஏற்கும் வலியாவும், ஓர் இனிய பிரசவித்திற்கு என்றென்னும் மனம் அத்தனை லேசில் வாய்ப்பதில்லை தான். இருந்தும் கத்திபடா ஒர் இயற்கை வழியை தேர்த்தெடுக்க. வலியேற்கத் தான் வேண்டுமென்பது, பழகப் பழக ஏறிக்கொள்ளும் மரத்தத் தோளைப் போல், நம்மை மாற்றிக்கொள்ளும் பக்குவத்தை தெரிந்தோ. அல்லது நாம் தெரியாமலோ வலிகள் நமக்கு கற்றுக்கொடுத்துவிடுகிறது. 

எப்போதும் போலல்லாத எப்போதையும் போன்ற ஒரு நாட்கள். நம்மை அழைத்துவந்து நிற்கவைக்கும் இடம். சட்டென்று எதிர்பாரா ஒரு மாற்றத்தை கையில் திணிக்கையில், ஏற்படும் சுவாசக்கோளாறில். மனக்கோளாறடையாது கடந்துபோக வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டும் , அதை மீறி வரத்துணிய மேற்கொள்ளும் பயணம் தான் வழிகாட்டுதலின் வேரை ஆழப்படுத்தும்,அப்படியான சவால் நிறைந்த பயணங்களில் கிடைக்கும் சம்பவங்கள் வருபவருக்கு நிழல் கொடுக்குமென்ற எண்ணம் கடந்துவந்தவைகளுக்கான இளைப்பாறலாகவும் மாறும்.

இதில் ஒட்டுமொத்த மாற்றமும் ஒரு விதையின் மறைவில்  கிடைக்குமென்ற நிஜத்தின் காத்திருப்பிற்குப் பின், வளரக் காத்திருக்கும் பாசிட்டிவ் விசயங்களின் பார்வை வரப்பெற்றவர்கள் பாக்கியவான்கள்.  
அத்தனை லேசில் வராத இந்த பார்வைக்குப் பின்னிருக்கும் கோளாறு, நாம் பார்த்துப்பழகிய பிழைகளின் கோர்வையால் உண்மையைப் போல் வேடம் கட்டிக்கொண்ட  மெழுகு உருவமென்று மனதின் கண்கள் நம்பிடும் நேரத்தில் கிடைக்கும் புதிய உலகின் வெளிச்சம், முதல் ஒளியைக் காணும் குழந்தையின் கண்களைப் போல் பரிசுத்தத்தில் நிறைந்திருப்பது. 

மூளையையும் கண்களையும் தாண்டி மூன்றாவதாய் நம்மோடு கைக்கோக்கும் மனதின் குரல் உயிரணுக்களைப் போன்றது.. கணக்கற்ற செல்களில் தகுதியான ஒன்றே உயிராவதைப் போன்றே, நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்தியும், , பேசிச் சிரித்து, சிரித்துத் துன்புறுத்தி, ஒரு நோயாளியைப் போல் பைத்திய நிலைக்குத் தள்ளி, நம்மிலிருக்கும் நம்மை நாமே உந்தித்தள்ள உதவும் குழப்பமான வலி நாட்கள் நமக்குக் கொடுக்கும் இந்த வாழ்வின் பிரசவ வலி அழகானவை தான்,,

நம் வாழும் நாட்களுக்கு நாம் தாயென்ற எண்ணம்,இந்த வாழ்வை இன்னும் நேசிக்க தூண்டுதலாய் இருக்கையில் இதைவிட பெரிதாய் நமக்கு வேறென்ன வேண்டும்..


தாய்மையோடு நேசிப்போம்..

தொடர்ந்து பேசுவோம்..


-ரேவா

Painting : Jaison Cianelli


0 கருத்துகள்: