உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 29 ஜனவரி, 2015

தனிமையில் இல்லை





தனியாக எழுதும் வேளையில்
நான் தனியாக இல்லை


தனிமைக்காய் எழுதும் வேளையிலும்
அது தனிமையில் இல்லை


யாருமில்லையென்று எடுத்துவைத்த வார்த்தையிலும் 

தனிமையில்லை

உன்னைப் பற்றி என்னைப்பற்றிய நினைவெதுவும் 

தனியாய் இல்லை

யாருக்கோ துணைபோகின்ற நேரத்தில்
யாருமே தனிமையில் இல்லை


தனித்தனியே புழங்கிய பின்னும்
புழுக்கம் கொடுக்கும் உணர்வும்   

தனியாய் இல்லை

தனிமை தனிமையென்று எழுதித்தீர்த்தபின்னும்
தனிமை மட்டும் தனியாய் இல்லை


தனித்துவிடுவதெற்கென்றே
எழுதிவிட்ட இவ்வரிகள் கூட
இறுதிவரை தனித்து விட்டும்
இது தனியாய் இல்லை

0 கருத்துகள்: