உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 29 ஜனவரி, 2015

வாழ்தல் இனிது




எழுதப் படிக்கத் தெரியாத அப்பாவும்
டிவித் திரைப்பார்த்து சரியாய் சொல்கிறார்
உத்தம புத்திரனென்ற படத்தின் பெயரை


தன் பிறப்புப் பற்றி குறைபட்டுக் கொள்ளும் அம்மாவும்
புதியாய் பிறக்கும் பூக்களை கண்டு கண்டு மகிழ்கிறாள்


இந்த ஆடையும் தனக்கு அழகாயில்லையென்று 

சொல்லும்போதெல்லாம்
கூடுதல் அழகாகிப் போகிறாள் தங்கை


இவ்வருட தீபாவளிக்கு கேலக்ஸி டேப்பிற்காய்
தன் சேமிப்பைத் தொடங்கிவிட்டான் தம்பி


தன்னிடம் இல்லாதவொன்றில்
இருக்குமொன்றைத் தேடத்தெரிந்தவர்
வாழ்வில் கிடைப்பதையெல்லாம்
கவிதையாக்குகிறார்கள்


முடியாதவர்கள் என்னைப்போன்று
கவிதையில் செய்கிறார்கள்
ஆகமொத்தம் வாழ்தல் இனிது
கவிதையைப்போல...



0 கருத்துகள்: