உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 29 ஜனவரி, 2015

தற்செயல் நிகழ்வு




ஒளிந்து கொள்வது சுலபமில்லையெனும் போதும்
மழைக்கு விரிக்கும் குடைத்தோகையில்
பட்டுத்தெரிக்கும் வண்ணச்சிதறல்களால்
வாசல் நிறைக்கும் நீர்கோலம் போல்
நனைதலே நடக்கிறது

நியாபகச்சூட்டை கிளப்பிவிடும் இதனிடம் 

இத்தனை கடுமையை எதிர்பார்க்கவில்லையெனினும்
திரும்ப திரும்ப இது நிகழ்கிறது

ஒன்றிரண்டு துளிகளோடு கரையட்டுமென
எடுத்துவந்த கண்ணீரை
நனையவிட்டு
கூட்டி வந்த பொழுதில்
தலை துவட்டிக்கொண்ட நினைவிற்குள்
தும்மல் எழுந்தது
தற்செயல் நிகழ்வாய் கூட இருக்கலாம்...



-ரேவா

0 கருத்துகள்: