உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 29 ஜனவரி, 2015

மெளன மொழி




சொல்லிக்கொள்ளாமல் பேசிக்கொள்ளுதலின்
சுவரஸ்யங்கள் குறித்து
உன்னிடம் கேட்டதில்லாது போயினும்
அளவெடுக்கும் உந்தன் கண்களில்
குறிப்பெழுதியே வைத்திருந்தாய்

மழை நீர் தேக்கத்தில்
கப்பல் விடும் சிறுவனாய்
உன் நினைவுத் தேக்கத்தில்
காதல்விட்டு
விளையாண்டு கொண்டிருக்கிறேன்

உனைக் கடக்கையில்லெல்லாம்
நெஞ்சிலேறிக்கொள்கிற கனம்
என்னை விட்டு வருகையில்
லேசாகிப்போகிறது

நீ கண்களை மூடிக்கொள்ள
இரவு தாழிட்டு  திறக்கப்பட்ட
எந்தன் கனவு தேடி
அலைய ஆரம்பித்தேன்

புரியப்படா உன் மெளனமும்
புரியவைக்க சேர்ந்துகொள்ளும்
தனிமையும்
காதலென்ற மொழிகொடுக்க
பேசக்கற்றறிந்த வேளையில்
பேசாமலே வந்துவிட்டேன்


நாளை நீயும்
என் மொழி அறியலாம்
அப்போது வா
சேர்ந்து பேசுவோம்
நம் மொழியை....

-ரேவா

0 கருத்துகள்: