உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 29 ஜனவரி, 2015

சொற்கள்




பேசுவதற்காகத்தான் உன்னை வரச்சொன்னேன்

வரும் வழியெல்லாம் மனம் பேசிய 
சொற்களின் அயற்சி
உன்னைப் பார்த்ததும் ஓய்ந்துவிடுமென்று
சத்தியமாய் நினைக்கவில்லை

மெளனமாய் இந்த நிமிடம் 
துளி புன்னகை இல்லை
சினேக விசாரிப்பும் இல்லை
நம்மிடையே சூழ்ந்திருந்த அந்த உன்னத உணர்வும் 
இந்நிமிடம் கிடைக்கவில்லை

பார்வை வழியே நினைவோட்டம் 
கொஞ்சம் நிதானித்து இருந்திருக்கலாம்  
என்ன செய்ய பேசமாலே வந்துவிட்ட
இச்சொற்களை

0 கருத்துகள்: