உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 29 ஜனவரி, 2015

மலரும் புன்னகை




மொட்டு விட்டிருந்த ரோஜா
இன்று மலர்ந்து சிரிக்க
நாளை என்னவாகிப் போகுமென்ற நினைப்பில்
சிறைபிடித்துக்கொண்டேன்
புகைப்படத்தில்

நெருங்குகின்ற இரவை
நிறுத்துவதெப்படி
என்ற யோசனையில்
உறங்கிப்போக

இரவை மென்று விழுங்கியபடி
பகல் எட்டிப்பார்க்க
நேற்றைய இடத்தை
தொலைந்திருந்த ரோஜாவுக்காய்
கனத்து தொலைந்தது மனம்

எதிர்பாரா திசையில் கண்கள் திரும்ப
ஒன்றுக்கு பத்தென
பலவண்ண பூக்கள் புதுப் புன்னகைகொடுக்க
நேற்றைய ரோஜா புகைப்படத்தில்
பதில் புன்னகைகொடுக்கிறது
எதையோ சொல்லியபடி..


-ரேவா

0 கருத்துகள்: