உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 26 ஜனவரி, 2015

என் கூடு




எழுத வாய்ப்பளித்த காலத்திலும், எழுத்து மட்டுமே நம்மை பிடித்துவைத்திருக்கும் காலத்திலும், எழுந்து கொள்ள ஏற்ற இடமாய் இருந்த இந்த இடம் சமீபங்களின் கவனமின்மையாலோ அல்லது மற்ற சமூகதளங்களின் மீதுள்ள தாக்கத்தாலே கவனிக்காமல் விட்டதில் போன வருடத்தில் வெறும் 30 கவிதைகளைத் தான் பதிய முடிந்ததென்ற வருத்தமும், இனி வரும் நாட்களில் அதை ஒழுங்கு செய்யவேண்டுமென்ற எண்ணத்தையும் இந்த புத்தாண்டில் ஒரு தீர்மானமாய் எடுத்துக்கொண்ட போதும், அதை செயல்படுத்தும் இந்த காலத்தில் படிந்திருக்கும் செளகர்யமென்ற பெயரின் அசட்டுத்தனத்தை நானே கடிந்துகொள்கிறேன்.

எத்தனை வசதிகளால் நம்மை நாம் அலங்கரித்துக்கொண்டாலும், நமக்கென்ற ஒரு வீடு எத்தனை பெறும் ஆறுதல்.. எங்கெங்கோ பயணப்பட்டாலும், ஓய்ந்து உட்கார நமக்கென்று காத்திருக்கும் சுவர் தான் எத்தனை பெரிய கொடுப்பினை, இப்போதெல்லாம் மனம் எதிலும் நாட்டமற்று திரிகையில், ஏனோ இந்த என் தாய்வீட்டில் மறுபடியும் என்னை மீள் உருவாக்கம் செய்ய துடிக்கிறேன்..

தனித்திருத்தலெனும் பெரும் வரம் கொஞ்சம் கொஞ்சமாய் சாபத்தின் வடிவிலே சில அசெளகர்யங்களைத் தந்திட்ட போதிலும் எழுத்தைப் பிடித்தே எழத்தெரிந்தவள் என்கிற முறையிலும், எனக்கென்ற இடம் என்னிடத்தில் எனக்கு ரொம்பவும் முக்கியமென்ற வகையிலும் மறுபடியும் என் தளத்தை புதிதாய் கட்டமைக்கிறேன்..

இனி என் சரிபார்ப்பின், கவனிப்பின், கற்றலின் வாசலை சரிசெய்துகொள்ளும் வாய்ப்போடு  வருகிறேன்...

-
ரேவா



1 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி...
வாழ்த்துக்கள்.