உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 29 ஜனவரி, 2015

காலத்தின் கூர்வாள்




மனமேறிக் கொண்ட பின்
மாற்றமில்லாது போன ஒத்திகை
நாளுக்கு நாள் அதிகரிக்க


அதிகாரத் தோரணையாய் பாவனை
அரிதாரம் தனைப் பூசிக்கொள்ள

நிலா சுடுவதை உணர்ந்த
உம்மத்தப் பொழுதுகள்
வாய்ப்பாடறியா கணக்கென
வாழ்க்கை மாறிய நிமிடங்கள்
நடுநிசி பொழுதையும்
விட்டுவைக்கா நினைவுகளென
நீ நீயாகவே
நீக்கமற நிறைந்திருந்தாய்
கனவுதனிலும் அதையே எடுத்துரைத்தாய்

மந்திரக்காரனின் கோலென
காதலது 

உன் விழியினால் பேச
கனவது கவிதையில் பேச
நிபந்தனைகளோடு நின்று கொல்கிறோம்
அவரவர்கான உலகத்தில்

காத்திருத்தலென்னும் கூர்வாள்
ஒருமுனையில் உன்னையும்
மறுமுனையில் என்னையும்
குத்திக்கிழித்தபடி சிரிக்கிறது
காதலுக்கு காலமென்னும்
பெயரை வைத்து 


-ரேவா

1 கருத்துகள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
மிக அருமையாக உள்ளது இரசித்தேன்..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-