உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 29 ஜனவரி, 2015

சிறகிழந்த பறவை




கட்டிவைத்தக் கூட்டைத் தாண்டி 
பறக்க நினைத்த பறவையின் சிறகுகளை
கூடுகள் வேயக் கொடுத்துவிட்ட பின்னும் 

துளிர்க்கும் சிறகிற்கு
வண்ணமேற்றி 
வாசலனுப்ப அதிகாரமில்லையென்பதை 
அரிதாரப் பொய்களால் உரைக்கையில்

அக்கூட்டுப் பறவைகள் 
சிறகடிப்பதைப் பார் என்கிறாய்

கூடுகளாவிட்ட குஞ்சுகளுக்காய்
பாலையை முல்லையாய்  
மாற்றத் தவிக்கிறது
சிறகிழந்த பறவையொன்று

-ரேவா

1 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

கவிதை அருமை....
வாழ்த்துக்கள்.