உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 30 அக்டோபர், 2010

ஊன்றுகோலாய் நீ



  வீழ்வதும், வாழ்வதும்,
அவரவர்  விதி என்றால்,,,
வீழ்ந்த நான் எழுவது
உன் மொழியாலே....

  தோல்வி என்பது,
என்  எழுத்தாய்  என் கவியில் இருக்க...
தோற்றது நான் என்று பலர்
எள்ளி நகைக்க...
இதுவே உன் வெற்றி என்று
எனக்கு உத்வேகம்  தந்தது
நீ .

ஆண்மையின் பலத்தால்
பலர் ஆயிரம் விதைக்க,
ஒற்றை கவியில் நான்
என்னை விதைக்க,
தோல்வி என்பது தோற்பதில்
இல்லை,
தோற்ற ஒன்றின்
தோற்றத்தில் இருந்து தொடர்வது,
தொடர்ந்த ஒன்றின் அனுபவத்தில்
இருந்து அமைவது என்று எனக்கு
புரியவைத்தவன் நீ...

  உணர்வுகள் என்பது பொதுவென்றிருக்க,
உணர்த்திடும்  நெஞ்சம் உணரட்டும்
என் மொழியை...
உரைத்திடும் நெஞ்சம்
ஒதுங்கி நிற்கட்டும்....
 என்று என் கவிக்கு உணர்ச்சி தந்த 
என் நட்பின் கவிதை இலக்கணமே ..
நீ,

என் வடிவங்கள் எல்லாம்
காலம் தந்த மாற்றம்,
என் மாற்றம் எல்லாம்
என் நட்பு நீ தந்த தோற்றம்...

என் கவிக்கு மறுவடிவம்
தந்த என் மாற்றுத் தாயே ....
என் கவிதையின் ரசிகன் நீ...
என் கவிதையின் காட்சிக்கு கலங்கரை விளக்கம் நீ....
என் கானல் கவிதையின் தூண்டுகோல் நீ...
என்னை தாங்கி பிடிக்கும் ஊன்றுகோல் நீ...
உத்வேகம் தரும் புது இலக்கணம் நீ...
ஆம் பலர் அர்த்தத்தில் அகப்படாத இலக்கண மீறல் நீ!!!

தோழனே!!!!!

வீழ்வதும், வாழ்வதும்,
அவரவர்  விதி என்றால்,,,
வீழ்ந்த நான் எழுவது
உன் மொழியாலே...
ஆம்
அன்பு கொண்ட உன் மொழியாலே....

அன்புடன்
ரேவா