உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 30 செப்டம்பர், 2010

எங்கே சென்றாய் நீ?



* காதலே!
உன்னை நேசிக்க வேண்டி,
நீ,
வந்து வந்து காதல்
பேசிய காலங்கள்...

* பொய்யை கூட
மெய்யாய் நம்பும் படி
சொன்ன வேலைகள்...

* வண்டி வண்டியாய் 
நலம் விசாரித்து,
அக்கறை காட்டிய தருணங்கள்...

* உன் பெயரோடு  என் பெயரையும்
சேர்த்து நீ உச்சரித்த பொழுதுகள்...

* என் சிரிப்பிற்காய்  நீ
சேஷ்டை செய்த நிமிடங்கள்...

* என அள்ள அள்ளக் குறியாத
உன் நினைவுகள் என்னை
வதைக்க...

* உன் காதலை உணர்ந்தவளாய்
என் காதலை உன்னிடம் சொல்லவரும்
போது என்னை விட்டு 
எங்கே சென்றாய் நீ?

* உனக்கொரு துயர் என்றால்
என் உயிர் கொண்டு துடைப்பேன்
என்று சொல்லி, என்னை தூரமாக்கி
எங்கே சென்றாய்?...

* உன் அக்கறை, நலம் விசாரிப்புகள்
விலாசமின்றி தொலைந்து போனதை
போல்..நீயும்
எனைவிடுத்து எங்கே சென்றாய்?...

* என்னை விட்டு நீ சென்றாலும்,
உன் அன்பை விட்டுகொடுக்காதவளாய்,
உன் நினைவை விடாது தொடர்பவளாய்,
உணர்வுகளை உணர்தலும்,
உனக்காய் உருகுவதும்,
உனையே உயிராய் நினைத்தலும்,
என என் காதல்,
என்னுள் ஆழமாய் தொடர,
****நீ மட்டும்****
காதலை கானலாக்கி
எங்கே காணமல் சென்றாய்...
 
* காதலே!!!
உன் உருவமில்லாமல்
தொடரும் என் நினைவுகளை
தொலைதூரம் ஆக்கி
என்னை தூரமாக்கி
கொண்ட தூயவனே.....
என்னை நிராகரித்ததின்
பொருள் கேட்டு நித்தமும்
என் மனம் போராடுகிறது....

* விருச்சமாய் நான் வளர்த்துக்கொண்ட
உன்னோடான என் காதல் கனவுகளை
வெட்டியெறிய நினைத்தாலும்
துளிர்விடும் வேராய்
உன் நினைவுகள்....

* காதலே!
*** அறிதுகொண்டேன்
காலத்தில் சொல்லாத காதலும்,
சரியான காலத்தில் கொடுக்க
படாத மன்னிப்பும்...
நம்மை மீளா நினைவுத் துயரில்
ஆழ்த்தும் என்பதை புரிந்துகொண்டேன்...

* காதலனே!!!!!
 உன் அன்பை விட்டுகொடுக்காதவளாய்,
உன் நினைவை விடாது தொடர்பவளாய்,
உணர்வுகளை உணர்தலும்,
உனக்காய் உருகுவதும்,
உனையே உயிராய் நினைத்தலும்,
என என் காதல்,
என்னுள் ஆழமாய் தொடர,
****நீ மட்டும்****
காதலை கானலாக்கி
எங்கே காணமல் சென்றாய்???...

அன்புடன் 
ரேவா 
( ஒரு இணைய நட்பின் வேண்டுகோளுக்காய் இந்த கவிதை)

புதன், 29 செப்டம்பர், 2010

எனக்கானவன் எவனோ?


*விடை தெரியா,
விதி அறியா ஒன்று நம் வாழ்வு....
இதில் என் பயணத்தில்
 தன் கதை எழுதும்
என் நாயகன் எவனோ?
அவனுக்காய்....

* நான் போகும் பாதை எங்கும்
தோல்வி என்னும் இருள் சூழ,
வெற்றி என்னும் வெளிச்சத்தை
எனக்கு அறிமுகம் செய்யும்
என் விடியல் எவனோ?

* உண்மையாய் ஓர்
உயிரை நம்பி ஊனமான
என் மனதிற்கு,
மறுவாழ்வு தரும்
என் நாயகன்  எவனோ?

* சூழ்ச்சியில்  உலகம் சுற்ற,
சூசகமாய் பலர் என்னை சுற்ற,
புரியாமலே போன
என் காதல் வாழ்வை,
எனக்காய் திருப்பி தரும்
என் காதலன் எவனோ?

* அன்பை மட்டும்,
மூலதனமாய் கொண்டு என்னை
மட்டும் சுற்றும் என்
சூரிய குடும்பத்தின் நாயகன் எவனோ?

* விசாரிப்புகள்,  "நலம்" என்னும்
விஸ்வரூப பொய்யை சுமக்க,
மனம் வாடி நிற்கும் என் தனிமை
காலங்களுக்கு வர்ணம் திட்டும்
என் வானவில் எவனோ?

* கண் எல்லாம் கனவாக,
என் காட்சியெல்லாம் நினைவாக
எனக்கு திருப்பி
தரும் என் லட்சியனாயகன்  எவனோ?

* அன்னையின்  அன்பை,
தந்தையின் கண்டிப்பை,
தோழமையின் நட்பை,
உறவுகளின் பாசத்தை,
ஒரே உறவில் தரும்
என் "அட்சய" நாயகன் எவனோ?

* ஆறடுக்கு மாளிகையேயானாலும்,
இல்லை ஆறாடி நிலமேயனாலும்,
எனக்காய் தன் தோள் கொடுக்கும்
என் தோழன் எவனோ?

* புரியாமலே போன
என் எதிர்காலவாழ்வில்
எனக்காய் எதிர்நீச்சல் போடும்
என் நாயகன் எவனோ?

* தோழமையாய்,
என் அன்னையாய், என் காதலாய்,
என் கனவாய், என் கணவனாய்,
என் சமுகமாய் என்னுள்
நிறையும் என்னவன் எவனோ?

* எனக்கான ஒருவன்
தனக்கான ஒன்றை
கண்டறியும் நாளும்
எதுவோ?
 

அன்புடன் 
ரேவா

Flower Image

சனி, 18 செப்டம்பர், 2010

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

ஆதலால் காதல் செய்



காதல்,

நம் உயிர் வாழ்வின் உன்னத தருணத்தை
நினைவுகளால் உயிர்ப்பிக்கும்  

ஒற்றை மந்திரம்  காதல்...
நாம் மறந்த நிமிடத்தை,
மறக்க நினைக்கும் தருணத்தை
நினைவால் கிட்ட வந்து
கட்டி போடும் ஒற்றை சொல்
...  காதல்.....

~ உயிர்க்குள்ளே உயிர் பறிக்கும்
ஓர் உன்னத வலி தான் காதல்....

~ நிழலாய் நினைவை தொடர்ந்து
நினைவால் அகம் தொடும் ஓர் உன்னத
கலை தான் காதல்.....

~ உயிர் வாழ்வின் அடிப்படை
தேடலே, தேடலின் பொருளே, 
காதல்....

~ பிரபஞ்சமே நீயாக....
பிதற்றலும் கவியாக உருமாறும்
வித்தையே காதல்....

~ அன்னையின் வடிவாக,
ஆதார பொருளாக நம்மை நாடி
வரும் உயிர் தான் காதல்...

~ கனவுகளின் வடிவாக,
கடமையின் வேறாக நம்மை
வளர்ப்பதும், வடிவமைப்பதும்
தான் காதல்...

~ முன்னுரை தெரியாமல்
முகவரி அறியாமலே  ஒற்றை
பார்வையிலே ஆட்டி படைக்கும்
அகிம்சை இம்சை  தான் காதல்.....

~ பார்த்தமாத்திரத்தில் உயிருக்குள்
உட்புகுந்து உன்னை ஆட்சி செய்யும்
ஆனந்த அவஸ்த்தை  தான் காதல்

~ எதிர்மறைகள் ஒரே புள்ளியில்
சங்கமிக்கும் சாரம் தான் காதல்....

~ நம்மையறியாமல் களவு போகும்
கலைக்குப் பொருள்  தான் காதல்...

~ கண்களில் தொடங்கி,
இதயத்தின்  வழியாய் இருமனங்கள்
இணைவது தான் காதல்....

~ முரண்பட்ட மனதினை
பண்படுத்தும் உன்னத நிலை தான் காதல்....

~ மதத்திரையை அகற்றும் மனம்
கொண்டது தான் காதல்....

~ கண்ணீரில் கரைந்தாலும்,
காலத்தை  தொலைத்தாலும்
நம்மில் இருக்கும் நம்மை,
நமக்கே அடையாளம் காட்டும்
கருவி தான் காதல்....

~ தனிமைப்பொழுதின் ரணங்களை
நினைவின் மூலம், திருப்பித்தரும்
 வலிநிவாரணி தான் காதல்...

~ எட்டி உள்ள மனிதரையும்,
எட்டாத தூரம் என
ஏங்கி நிறுக்கும் மனிதரையும்,
அன்பால் ஆட்டிப்படிக்கும் இந்த காதல்....  

~ ஓற்றை சொல்லில் உயிர் வாழ்வதும்
ஓற்றை சொல்லுக்காய் உயிர் வாழ்வதும் தான் காதல்...


~ மொத்தத்தில் நம்,  

வாழ்வியல் வளர்ச்சியில்,
வளர்பிறை காண வயதினில்,
முதல் முதல் இச்சைகொண்ட பொழுதினில்,
அன்பை ஆதாரமாய் அவன் வசம் கண்டபொழுதினில்,
பார்த்த மாத்திரத்தில் பறிபோன பொழுதுகளில்,
இவள் இன்றி உலகம் இல்லை என்ற எதார்த்தங்களில்,
என்று பலபேர்க்கு பலமுகம் காட்டி நம்மை
பண்படுத்தும் இந்த பாடத்திற்கு
பெயர் தான் காதல்...

~ இந்த காதலால்,
பிறர் மனத்தை  வென்று சாதித்தவன்
எல்லாம் பித்தனும் இல்லை.........
இந்த காதலின்றி,
பிறர்  மனதை சாதிப்பது என்பது சாத்தியமுமில்லை...
  
~ ஆம் ,
காதல் என்று சொன்னவுடன்
உயிர் துடிக்கும், உணர்வுகள் துடிக்கும்
நம் உயிர் வாழ்வின் உன்னத தருணத்தை
நினைவுகளால் உயிர்ப்பிக்கும் ஒற்றை மந்திரம்,

மறக்கும் நிமிடத்தை,
மறக்க நினைக்கும் தருணத்தை
நினைவால் கிட்ட வந்து
கட்டி போடும்
ஒற்றை சொல் தான்  
இந்தக்காதல்.....


அன்புடன் 
ரேவா 

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

மரணப்பார்வை



அன்பே!

உன்னை கண்ட நாள்
முதல் கண்ணுறக்கம் தொலைத்த இரவுகள்....

உன் கதை பாடி
ஓடி திரிந்த நினைவுகள்.....

உன் கைப்பற்றி கதை
பேசி கழிந்த பொழுதுகள்...

உன் கண்ணியம் காத்
இரவுகள்....

என எதுவும் நியாபகம்
இல்லை தோழா?....

என்னை வீதியில்
விட்டு , என் நிழல் மறையும்
வரை நீ பார்த்த
ஒற்றை
உயிர் குடிக்கும்
அந்த
மரணப்பார்வையை
தவிர...

அன்புடன்
ரேவா