உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 31 டிசம்பர், 2010

வருக புத்தாண்டே !!!!!

***********
 
*********




* பிறக்கும் புத்தாண்டில்,
எல்லோர் மனதிலும்
மகிழ்ச்சி நிலவட்டும்....

*னவுகள், லட்சியம்,
ஆசை, எதிர்பார்ப்பு,
ஏக்கம்,  என
நம் எல்லோர் மனதிலும்
நிறைவேறாமல்
நிறைந்து கிடக்கும் எண்ணங்கள்
யாவும் வெற்றி என்னும்
ஒற்றை மந்திரத்தில்  உயிர்பெறட்டும்...

* நாணயத்தின் இரு பக்கம் போல்
வெற்றியும் , தோல்வியும்
நம் வாழ்வில் நிறைந்திருக்க..
நாணயமானோரே இங்கு நலமுடன்
வளர்வார் என்பதை  நல்லோர் மனம்
புரிந்துகொள்ளட்டும்...

 * திட்டமிடலும்,
திரும்பிப் பார்ப்பதும்
நம் வாழ்வின் வளர்சிக்கு உதவும்..
சமாதானம் என்னும் சொல்லின் மூலம்
அன்பு நிலவும்.மனதில் அமைதி தழுவும் ..
முடிந்தவரை உன் எதிரிக்கும்...
உன் அன்பை பரிசளி...
கடந்து செல்கின்ற வருடத்தில்
நாம் விதைத்த விசயத்தின்
விதையை எடுத்து இந்த
புது வருடத்தில்
புதிய மனிதானாய்
பயணிப்போம்....

ம் புதிய மனிதனாய்
பயணிப்போம்......அதற்கு
இலக்கை நோக்கி பறந்து செல்வோம்
தடைகள் வந்தால் தாண்டிச் செல்வோம்...
அன்பை வைத்து உலகை அளந்துப் பார்ப்போம்...
அனுமதித்தால் அதற்கும் ஓர் அளவு வைப்போம் ..
 பிறந்த பிள்ளை போல்
நேசம் கொள்வோம்...
நேசம் கொள்ளும்,
தூரோகம் மறப்போம்...
அச்சம் தவிர்ப்போம்...
ஆணவம் களைவோம்...
விழுந்தாலும் வீரியம் மிக்க விதையாய் எழுவோம்..

ண்பா!!!

* முடியாத "இலக்கு"  என்று எதுவும் இல்லை
முடிந்தால் இமயம் கூட தூரம் இல்லை..
தோல்வியில் துவண்டாலும்,
தோற்றிடாத உன் நம்பிக்கை கொண்டு
புதிய பாதை செய்...
தோல்வி என்பது தோற்றதில் இல்லை...
தோற்ற ஒன்றின் தோற்றத்தில்
இருந்து தெளிந்த பின்னும்
தொடராமல் இருப்பது
என்பதை புரிந்து  
பயணிப்போம் இந்த இனிய புத்தாண்டில்...

என் நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...
வளங்கள் யாவும் உங்கள் வீட்டில் குடிபுகவும் , மாற்றம் தரும்  ஏற்றத்திற்காய் காத்திருக்கும் உள்ளங்களுக்கும்.... வேண்டியவை வேண்டியபடியே கிட்ட ... எல்லாம் வல்ல அன்பெனும் ஆண்டவன் துணை கொண்டு  வேண்டுகிறேன்....  

அன்புடன்
ரேவா

திங்கள், 27 டிசம்பர், 2010

வாழ்க்கை வசப்பட....




வாரமலர் இதழில் வெளியானது.... நண்பர்களின் பார்வைக்காய் என் தளத்தில் பதிவு செய்துள்ளேன்... நன்றி தினமலர்....

வாழ்க்கை வசப்பட.... 

* அழுத்தமாக கை குலுக்குங்கள்...
* கண்களை நேராக பார்த்துப் பேசுங்கள்...
* இயல்பாக, இதமாகப் புன்னகையுங்கள்..
* அறிமுகமானவர்கள் எதிர்ப்படும் போது, "வணக்கம்" சொல்வதில் முந்திக் கொள்ளுங்கள்..
* உங்கள் பலங்களை  பலப்படுத்துங்கள்...
* உங்கள் பலவீனங்களை பலவீனப்படுதுங்கள்...
* நெஞ்சார நன்றி சொல்லுங்கள்...
* இயற்கையை ரசிக்க நேரம் ஒதுக்குங்கள்..

* எப்போதும் துணையிருக்கும் நண்பர்களுக்கு,
எப்போதும் வழிகாட்டும் எழுத்துக்களுக்கு,
எப்போதும் சிரிக்கும் பூக்களுக்கு,
எப்போதும் கைவிடாத நம்பிக்கைக்கு,
நன்றி சொல்லுங்கள்....

* சோர்வாக இருக்கிறதா:

* அமைதியான இடத்திற்கு செல்லுங்கள்...
* உங்கள் பலன்களை எழுதுங்கள்...
* மாற்று வழிகளைச் சிந்தியுங்கள்..
* தியானம் செய்யுங்கள்...

சோதனை சூறாவளியில்: 

* அச்சம் தான் நம் எதிரி - அச்சத்தை உதறுங்கள்.
* உடனடியாய் என்னை செய்ய? உள்ளுணர்வைக் கேளுங்கள்.
* அடுத்தடுத்துப் போராட ஆயத்தம் ஆகுங்கள்...
* போனதெல்லாம் போகட்டும்.... புதிதாக தொடங்குங்கள்..

வாழ்க்கை வசப்பட:
* பகைவர்கள் மிக நல்ல நண்பர்களாய் மாறலாம்..
* பழைய தோல்விகளின் பாரங்கள் நீங்கலாம்.
* எத்தனை இழந்தாலும் இழந்த பொருளை மீட்கலாம்.
* என்றைக்கு இருந்தாலும் எண்ணியதை எட்டலாம்..
* பதறாத மனம்தான் புதுமைகள் நினைக்கும்..
* புதுமைகள் செய்தால் செயல்கள் சிறக்கும்.
* செயல்கள் சிறந்தால் சாதனை பிறக்கும்.
* சாதனை பிறந்தால் வாழ்க்கை இனிக்கும்..
 

* புதிய நட்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்...
* பழைய நண்பர்களைக் கொண்டாடுங்கள்...
* இரவல் வந்குபவற்றைத் திருப்பி கொடுங்கள்..
* நாளொன்றுக்கு மூன்று பேரையாவது பாராட்டுங்கள்..

நிரந்திரமான மகிழ்ச்சி :

* துணிவான முடிவுகளில் இருக்கிறது .
* பணிவான வார்த்தைகளில் இருக்கிறது...
* கனிவான அணுகுமுறையில் இருக்கிறது..
* பரிவான உதவிகளில் இருக்கிறது...
* தோல்வி வந்தால் பொறுமை அவசியம்..
* வெற்றி வந்தால் பணிவு அவசியம்..
* எதிர்ப்பு வந்ததால் துணிவு அவசியம்...
* எது வந்தாலும் நம்பிக்கை அவசியம்...
* கவனக்குறவை உணர்த்தும் தோல்விகளுக்கு,
* திருத்தத் தூண்டிய தவறுகளுக்கு, 
* வைராக்கியம் வளர்த்த அவமானங்களுக்கு,
* பாராட்டும்படி வளரச் செய்த பரிகாசங்களுக்கு 
நன்றி சொல்லுங்கள்...
* ஆற்றல் சிதறாமல் திரட்டிக் கொள்ளுங்கள்.
* அடிப்படை சரியாமல் நிறுத்திக் கொள்ளுங்கள்..
* மாற்று ஏற்பாட்டை வகுத்துக் கொள்ளுங்கள்...
* மறுபடி  எழுவோம் என் உறுதி கொள்ளுங்கள்..
* உங்கள் விருப்பத்திற்கு வாழ்க்கையை வளைக்கலாம்.
* உங்கள் கனவுகளை உண்மையென ஆக்கலாம்.
* உங்கள் உறுதியினால் சிரமங்களைக் கடக்கலாம்.
* உங்கள் எல்லைகளை நீங்களே உடைக்கலாம்..  

நிரந்திரமான மகிழ்ச்சி :

* கனவுகளை வரையறுப்பதில் இருக்கிறது..
*லட்சியத்தை செயல்படுத்துவதில் இருக்கிறது.
* இழப்புகளை ஈடுகட்டுவதில் இருக்கிறது  * கணிசமாக சேமிப்பதில் இருக்கிறது.

 வாழ்க்கை வசப்பட:

* வழிதேடி வளர்ந்தவர்தான்  வழிகாட்ட முடியும்.
* பதில் தேடி அடைந்த்தவர்தான் பதில் சொல்ல முடியும்.
* தடுமாறி எழுந்தவர்தான் துணையாக முடியும்.
* முதல் தோல்வி பார்த்தவர்தான் முன்னேற முடியும்..
* எத்தனை முயன்றாலும், முயற்சிகள் போதாது!!!
* எத்ததனை  பயின்றாலும், பயிற்சிகள் போதாது!!!!
* எத்தனை வளர்ந்தாலும், வளர்சிகள் போதாது!!!!

நன்றி 
தினமலர் (வாரமலர்) நாளிதழ்...

அன்புடன் 
ரேவா

வெள்ளி, 24 டிசம்பர், 2010

இந்த காதலால்?!............



காலம் மறந்தேன்!.....
காட்சிகள் மறந்தேன்!.....
சுழலும் பூமி
சுத்தமாய் மறந்தேன்!.....
உறக்கம் மறந்தேன்!.....
உள்ளுற இருக்கும்
உள்ளத்து உணர்வுகள்
உன்னிடம் உரைக்க மறந்தேன்

இந்த காதலால்?!............

அன்புடன் 
ரேவா

வியாழன், 23 டிசம்பர், 2010

சுகம்...

.

* உன் விரல் பிடிக்கையில் தான் 
என் தந்தையின் சுகம்
உணர்கின்றேன்..

* தந்தையாய் என் (அன்பு) சுமை
என்னவென்று 
அறிகின்றேன்....

* மாற்றங்கள் வாழ்க்கையில் 
மாறாமல் இருக்க..
நான் வாழ்வில் அடைந்த 
மாற்றமே "  நீ
அன்று " பிள்ளையாய் "
இன்று " தந்தையாய் "

அன்புடன்
ரேவா 

செவ்வாய், 21 டிசம்பர், 2010

கொஞ்சம் கொடுக்கலாமே!!!!!


ள்ளி உன் வெட்கத்தையா 
கேட்டேன் ...
ன் வெட்கத்தின் பின்னால்
னக்காய் நீ ஒளித்து
வைத்திருக்கும் என் முத்தத்தை
தான் 
கொஞ்சம் கொடுக்கலாமே!!!!!

அன்புடன் 
ரேவா

திங்கள், 20 டிசம்பர், 2010

காதல் சான்றி(இ)தழ்....





காதல் ஒப்புதலுக்கு
நீ கொடுத்த சான்றிதழோ ??? 
ன்  இதழ் முத்தம்.... 
அன்புடன் 
ரேவா

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

பிரியமானவன்



* விழிப் பார்வையில், 
ன் மொழி ஆள்பவன்....
* மொழிப் போரிலோ,
மௌனம் காப்பவன்... 
* மௌனம் காத்தே,
ன் உயிர் குடிப்பவன்.... 
* யிர் குடிக்கவோ,
என் உள்ளம் கேட்பவன்....
* உள்ளம் கொடுத்தால் 
உள் நின்று எனை ஆள்பவன் 
என்
***பிரியமானவன்***

அன்புடன் 
ரேவா

வெள்ளி, 17 டிசம்பர், 2010

இனியும் வரப்போவதில்லை....



னியவனே!!!!!
உன் முதல் பார்வை என்னுள்
காதலை விதைக்க.,
காத்திருந்தவன் போல் நீயும் 
உன் காதலைச் சொல்ல.,
தொடக்கம் எங்கென்று  தெரியாமல்
தொடங்கிய நம் காதல் காலம்
இனியும் வரப்போவதில்லை...

* ன் கண்ணில் விழுந்து,
என் கருத்தை கவர்ந்த 
என் அன்பு காதலி நீ  தான்  என்று
சொல்லிச் சொல்லி என் கவனம்
ஈர்த்த என் காதலனே!!!!!


* பொய்மைக்கும் மெய்மைக்கும்
இடைப்பற்ற ஒன்றை உருவாக்கி
என் நம்பிக்கைக்கு உரித்தாகி
என் உயிர் கலந்த என் காதல் நீ
தான் என்று  ஊருக்கு
உரக்க சொன்ன காலம்
இனியும் வரப் போவதிலை.....

*ன் பாதி நீ என்றும்
என் பதி நீ என்றும் கர்வமாய்
உன் கரம் பற்றி நான்
வலம் வந்த நாட்கள்
இனியும் வரப்போவதில்லை....

*றக்கம் மறந்து,
உண்மை மறந்து
உன்னையே என் உயிராக
உருகி உருகி நான் உயிர் தவித்த பொழுதுகள்
இனியும் வரப்போவதில்லை...

* சிறு சிறு தவறுகளாலும், அர்த்தமற்ற
உன் சந்தேகங்களாலும், சரிவை நோக்கிய
நம் காதலை சமாதானத்தின் முலம்
சாந்தி படுத்திய காலம்
இனியும் வரப்போவதில்லை... 

* டலின் பின் நீ அர்த்தப்படுத்தும்
நியாங்கள் தவறென்று தெரிந்தாலும்
உன் புன்னைகைக்காய் தவறை மறந்து
புலம் பெயரும் அகதியாய்
நான் என்னை மாற்றிய வேலைகள்
இனியும் வரப்போவதில்லை....

* ங்கோ தொடங்கிய நம்
காதல் அர்த்தமற்ற காரணங்களால்  
காயம் காண, எனை விட்டு செல்
என்று சொல்லியும் விலகாது நிற்கும்  
என் காதலை நீ உணர்ந்து
கொள்ளும் காலம்
இனியும் வரப்போவதில்லை....

*ம் ஏதோதோ காரணங்களுக்காய்
காதல் கொள்ளும் காலத்தில்
உன்னையே உயிராய் நினைத்து
உன் உணர்வுகளுக்காய் என் உணர்வை
புதைத்து நான் வாழ்ந்த பொய்
காலம் இனியும்
திரும்பி வரப்போவதில்லை....

* காதலுக்கு அன்பின் பெயரால்
பலர் பல அர்த்தம் புகட்ட
என்னோடான உன் காதலுக்கு
என்னை நிராகரித்தத்தின் வழியே
புது அர்த்தம் தந்த
இனியவனே....
உன்னோட இனிக்கும் அந்த
காலங்கள்  
இனியும் வரப்போவதில்லை....

 னியவனே!!!!!
உன் முதல் பார்வை என்னுள்
காதலை விதைக்க.,
காத்திருந்தவன் போல் நீயும் 
உன் காதலைச் சொல்ல.,
தொடக்கம் எங்கென்று  தெரியாமல்
தொடங்கிய நம் காதல் காலம்
இனியும் வரப்போவதில்லை...

அன்புடன்
ரேவா

சனி, 4 டிசம்பர், 2010

உயிரற்ற என் கவிதை!!!!

என்னுள் கருவாகி
என் எழுத்தின் உயிராகி
என்னுள் கலந்த என் இதயமே
உனக்காய் உருவாக்கப்பட்ட
என் கவிதை உன் பார்வைக்கு 
வராமலே சிதைக்கு இரையாய்
போனதால் இதுவும் 
 ஓர் உயிரற்ற கவியே!!!.
******
வெகுநாட்களாய் எனக்கோர் ஆசை 
என்னை எழுதவைத்து எனக்குள் 
என்னை ஆட்டிவைக்கும் என்னவன் 
என் கவியை படிக்கவேண்டும்....
 அது வரை 
இதுவும்  ஓர் உயிரற்ற கவியே!!!!
 ************
நிதர்சனங்களை நீக்க 
தெரிந்தவன் நீ என்பது எனக்கு 
தெரியும்... அதனாலே உன்னால் 
புறந்தள்ளப்படும்
என் கவிதையும் கூட 
**உயிரற்ற ஓர் கவிதையே...** 

அன்புடன் 
ரேவா

வெள்ளி, 3 டிசம்பர், 2010

அன்பென்பது யாதெனில்


* அண்டம் என்னும்
அகண்ட வெளியில்
அனுமானங்களை சில நேரங்களில்
கடந்து விடுகிறது இந்த அன்பு...

* படிப்பினைக்கும் பல நேரங்களில் 
பாடம் கற்பிக்கின்றது  இந்த அன்பு...

* தோற்றவனையும் வெற்றிபெற 
வைக்கிறது இந்த அன்பு...

*  இருக்கின்ற ஒன்றை இல்லாமல் 
ஆக்கவும், இல்லாத ஒன்றை
உருவாக்கவும் பிறந்தது  தான் இந்த அன்பு...

* அழுகின்ற கண்ணில் விழுகின்ற
நீரை துடைத்து விடும் கைகள் தான் இந்த அன்பு...

* மாற்றம் என்பது
மாறாதிருக்க மனிதனின் மனிதம்
காக்க உதவுவது தான் இந்த அன்பு...

* அடையாளமற்று அழிகின்ற
உயிரை ஆட்சிசெய்வது தான்  அன்பு...

* இருளின் வழியில் வாழ்கின்ற
உயிரை உனக்காய் நான் இருக்கிறேன்
என்று ஒன்றை சொல்லில் உயிர்பிக்க
செய்யும்  கனிவு தான் இந்த அன்பு...

* முகவரிகள் தெரியாமால்.
முன்னுரை எழுதும் பல உறவிற்கு
ஆணிவேர் தான் இந்த அன்பு...

* அழுகின்ற குழந்தைக்கு
தருகின்ற இனிப்பு தான் இந்த அன்பு...

* தொலைதூர உறவையும்,
தொடுகின்ற உணர்வு தான் இந்த அன்பு...

* கோபத்தில் புதையுண்ட மனதையும்,
தனிமையின் தணலில்  தக்கிக்கும் மனதையும்,
அமைதி படுத்துவது தான் இந்த அன்பு....


* வரமேன்பது சில நேரங்களில்
சாபமாய் போக, வருகின்ற பிறர்
துயர்க்காய் வருந்தி துடிப்பது
தான் இந்த அன்பு...

* சொல்ல முடியா வேலைகளிலும்
சொல்லி அழும் காலங்களிலும்
அன்னை மடியாய்
ஆறுதல் தருவது தான் இந்த  அன்பு...

* காதல் என்னும் மாயையில்
மடிந்து போகும் மனதிற்கு
நட்பின் ஆறுதல் மருந்தாய்
இருப்பது தான் இந்த அன்பு...

* வலியவனும், எளியவனும்,
அவனவனாய் வாழ்வதற்கு காரணமாய் விளங்கும்
ஆதாரப் பொருள் தான்  இந்த அன்பு...

* வாழ்கை வருகின்ற வரைக்கும்...
முடிகின்றவரைக்கும் நம்மை
பலவாறு வடிவமைக்கும் கலை தான் இந்த அன்பு...

* அன்பு!!!!
அன்பு  இதை உச்சரித்து உணர்ந்தவன்
மனிதனாவான்...
அன்பு இதை எச்சரித்து அறிந்தவன்  
ஞாநியாவான்.....

 * இறுதியாய்,
மனிதனை மனிதனாக்குவதும்
மனிதனை மனத்தால் இறைவனாக்குவதும்
இந்த அன்பு...

* அண்டம் என்னும்
அகண்ட வெளியில்
அனுமானங்களை சில நேரங்களில்
கடந்து விடுகிறது அன்பு...

அன்புடன் 
ரேவா