மாலையில் ஓர் நாளில், குளிர் காற்று அழகி அவள் தேகம் தொட, மண்வாசம் சுவாசம் தொட, வானவில் கொஞ்சம் வளைந்து வந்தே அவள் அழகைப் பார்க்க ஆயத்தமாகும் முன் , விரைந்து வந்த வானமகன்,அனுமதி இன்றே அவள் மேனி நனைக்க, இருக்கைகள் நீட்டி அவன் அன்பை மழைத்துளியாய் வாங்கிய நேரம், அவள் கோலம் கலைத்தது அந்த குறும்செய்தி,
ஹாய் செல்லம் என்னடி பண்ற?....
புன்னைகைத்து விட்டு பதில் அனுப்பினாள்,
மழையில நனைஞ்சுகிட்டு இருக்கேன் டா?.....
மீண்டும் சிறு குருவி போல் பறந்து சென்று, சிறகை விரித்து மழைத்துளியை முத்தம் மிட்டு கொண்டிருக்க,
எப்போடா உன்ன பார்ப்பேன், எப்போடா என் பேச்சை கேட்ப பையா என அவள் கைபேசி அலற, அழகி அவள் பறந்தே வந்து அவன் அழைப்பை எடுக்க,
அழைப்பின் முனையில் அவன்:
என்ன டி பண்ணுற?...
அப்போவே சொன்னேன்ல டா, மழைல நனைஞ்சு கிட்டு இருக்கேன்....
ஏன் டி என் அத்தை இல்ல,
ஏன் டா அவங்களையும் கூட சேர்த்துட்டு நனையவா?.........
அடி என் லூசே, மழைல நணையிரையே, அதான் உங்க அம்மா உன்ன எதுவும் சொல்லலையானு கேட்டேன்....
ஓஹ...சாரி டா...அம்மா இல்ல, நான் மட்டும் தான் வீட்டுல இருக்கேன்...
ஓஓஓஓ....இத முதலையே சொல்லி இருக்க கூடாதா?
சொல்லிருந்தா, என்ன பண்ணிருப்ப,
மழைக் கம்பிகள்
உன் மேனி தொடுவதற்குள்,
குடைக் கம்பியாய்
உன்னுள் படர்ந்திருப்பேன்னு .
. மொக்கையா எதாவது கவிதை சொல்லிருப்ப,
தெரியாதாடா உன்னப் பத்தி....
ஹ ஹ...நல்லாவே என்ன புரிஞ்சு வச்சு இருக்கடி....
ஆமாம் ஆமாம்....அங்க அங்க சாமியாருங்க எல்லாம், கதவ திற கமலா வரட்டும்னு கவிபாடுதுங்க...நீயும் தான் இருக்கையே.......
ஓவரா பேசுறடி நீ....
சரி செல்லம் நான் ஒன்னு கேப்பேன் தருவியா?
என்னடி கேக்குற தோனியே சரி இல்லையே...சரி கேளு..
இல்ல......................
என் காதல் வாழ்க்கைக்கு,
அழகு சேர்க்க, உன் இதழ் தூரிகையால் , அழகான ஓவியம் என் கன்னத்தில் வரையனும் .........முடியுமா? ..
ஏய்ய்ய்ய்ய்ய்...............ச்சே ஏன் டி இப்படி பேசுற?...
என்னடா ?.பேசுனேன் ?......
சரி நான் நாளைக்கு ஆபீஸ் ல கொடுக்க வேண்டிய கணக்கெல்லாம் கரெக்ட் அஹ முடிச்சிட்டயா?......
உன் ஆபீஸ் கணக்கெல்லாம் முடிச்சாச்சு, உன் மெயில்க்கும் அனுப்பியாச்சு, உன் கணக்கு தான் இன்னும் முடிக்க முடியாம இருக்கு...
என் கணக்கா?... என்ன கணக்கு புதுசா சொல்லுற....
ஒய் அன்னைக்கு, காத்து வாக்குல, நீ போறப்போ நான் கொடுத்த பறக்கும் முத்தத்தை பத்திரமா
எடுத்து பதியம் போட்டேன்னு போன் ல சொன்ன...
ஆமாம் சொன்னேன்...
எனக்கு திருப்பி வேணும்..
முடியாது...கிடைக்கிறப்போ வட்டியோட கிடைக்கும்...இப்போ ஆளவிடு...
சரி அழுது தொலைக்காத, வேற எதாவது பேசு...
சரி, உனக்கு எந்த புத்தகம் படிக்க பிடிக்கும்டி சொல்லேன் நான் மறந்துட்டேன்...
இப்போதைக்கு,
உன் இதழ் என்னும்
இருவரி புத்தகம் தான் படிக்க ஆசைப் படுறேன்...
பாத்தியா?....என்னையவே வாருற பாரேன்...
டேய்...அங்க அங்க போய் பாருடா...அவன் அவன், பார்க்குக்கும் பீச்சுக்கும் அவங்க காதலிய எப்படி கூட்டிட்டு போறங்கனு?.....
ஹி ஹி அதான் பாத்தோம்ல....
டெபாசிட் இழந்த அரசியல்வாதி தலைல துண்டப் போட்டு, போறமாதிரி தானே போராங்க....
.ச்சிப் போ நீ வேஸ்ட் டா....
சரி நான் வேஸ்ட் அஹ வே இருக்கேன்...உனக்கு என்ன என்ன விஷயம் பிடிக்கும்...
எனக்கா, உன் காதல் பேசுற கண்கள் பிடிக்கும்...
கர்வத்தையும், காமத்தையும் ஒளிச்சி வச்சு சிரிக்கிற உன் இதழும், உன் இதழ் குழந்தையை, இப்போதைக்கு, என்கிட்ட கொடுக்காம ஒளிச்சி வச்சி இருக்காளே, என் சக்காளத்தி?... அதான் அந்த மீசை, அதுவும் ரொம்ப பிடிக்கும்...அப்பறம், எப்பவும் நான் மட்டுமே சாய்ந்து கொள்ளும், உன் சந்தன நிறத் தோள்கள் பிடிக்கும்...
ஏய்ய் ய் ய்ய்...இரு இரு நான் உனக்கு பொதுவா என்ன பிடிக்கும்னு தான் கேட்டேன்.. நீ என்ன பத்தி சொல்லிட்டே இருக்கே...
இம்ம்ம்... பொதுவாவா ?... என்ன எதப்பத்தியும் யோசிக்க விடாம, ஒன்னப் பத்தி மட்டுமே யோசிக்க வச்ச உன்ன பிடிக்கும்....
என்னடி நீ... என்ன தவிர்த்து என்ன பிடிக்கும்...
உன்ன தவிர்த்து எதுவும் பிடிக்காது டா...
சரி டி நீ தான் கவிதை எல்லாம் எழுதுறயே, எங்க என்னப் பத்தி இப்போ ஒரு கவிதை சொல்லேன்...
கவிதையா?...உனக்கு நான் கவிதை சொல்லனும்னா?...இந்த மாலை மறஞ்சு இரவு வரணும் பரவா இல்லாயா?..
நீ எங்க வரேன்னு தெரியுது...
சரி ராது, அம்மா இல்லையே நீ என்ன சாப்பிட்ட?....
உன்னோட போடோவையும், தொட்டுக்க உன் குரும்செய்தியையும் தான் சாப்டேன்...
கடிக்காதடி....சரி உன் அம்மாவீட்டுக்கு போய் இத்தன நாள் ஆகுதே, இந்த புருசன வந்து பாக்கனும்னு உனக்கு தோனுச்சாடி?....
கொன்னுடுவேன் உன்ன, நீ தானே நான் மாட்டேன் மாட்டேன் னு சொல்லியும், இது தலப் பிரசவம், அம்மா வீட்டுக்கு போ னு சொல்லி அனுப்பி வச்ச, இப்போ வந்து மூணு நாலு தான் ஆகுது அதுக்குள்ளே இப்படி பேசுற?....
இல்ல ராதுமா (ராதா), நீ இல்லாத இந்த மூணு நாளும், மூன் அஹ பாக்க கூட பிடிக்கலடி...உன்ன ரொம்ப மிஸ் பண்ணறேன்....சீக்கிரம் என் குழந்தைய எப்போ பாப்பேன்னு இருக்கு...
பாத்தியா, நான் அழுவேன், இப்போதானே என்ன மிஸ் பண்றேன்னு சொன்ன, அதுக்குள்ள, உன் குழந்தய பாக்கனும்னு சொல்லுற, போடா,நான் இனிமேல் அங்க வர மாட்டேன்....
அட பைத்தியமே, நான் கொழந்தைன்னு சொன்னதே உன்னைத்தாண்டி...
ஹி ஹி அப்படியா?.....ஐ லவ் யூ சோ மச் டா.....
மீ டூ செல்லம்...நீ நம்ம குழந்தைய பெத்துக்க போற நேரம், நம்மக்குள்ள இருக்கிற அழகான காதல் குழந்தைய, பத்திரமா பாத்துக்கோ ராது....
நான் பாத்துகிறேன்...இது தான் சாக்குன்னு, நீ எதிர் வீட்டு பொண்ண பத்து பல் இளிச்சதா தெரிஞ்சது, மவனே கொன்னுடுவேன்...
சரி டா சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்...சரி உடம்ப பாத்துக்கோ...டைம் க்கு சாப்புடு....உன் டெலிவரி டைம் அப்போ நான் வந்துறேன்.....
இமம் ஓகே மை டியர்..யூ டூ டேக் கேர்....
இரண்டு மாதங்களுக்கு பிறகு...............
வாடிய மலர் போல, வாட்டத்துடன் ராதா மருத்துவமனையில் இருக்க, ராகேஷ் விரைந்து வந்து அவள் கரம் பற்ற, தன் காதல் குழந்தை,தன் கரம் பற்றிய மகிழ்ச்சியில், அல்லி மலர் போல் கண் விழித்தால் ராதா....
எப்படி மா இருக்க,
டாக்டர் இன்னும் ஒன் அவர் ல டெலிவரி நடந்துரும்னு சொன்னங்க,
இம்மம்ம்ம்....
ஏதாவது பேசுடி...எப்பவும், வாய் மூடாம பேசிட்டே இருப்பயே, இப்போ பேசு...
என்ன பேச, எனக்கு தெரியல டா, உன்ன மிஸ் பண்ணிடுவேனோனு பயமா இருக்கு....
ச்சீ...லூசே அப்படிலாம் பேசாத....
இம்.....அம்மாஆஆஆஆ...
டாக்டர்.......ராதாவுக்கு வலி வந்துருச்சு...விழி நீரைத் துடைத்துக் கொண்டே, அவள் கை பற்றியபடி பிரசவ அறைக்குள் நுழைந்தான்...
சாரி ஜென்டில் மேன், ஜென்ட்ஸ் நாட் அலோவ்ட்....
பயப்படாத டா...நான் நம்ம குழந்தையோட பத்திரமா திரும்பி வருவேன்....
இம்ம்ம்....
பிரசவ வலியில் துடிதுடித்து கொண்டிருந்த ராதாவிற்கும், அவள் வலியின் துடிப்பதைப் பார்த்து, மனதில் துடித்து கொண்டிருந்த ராகேஷின், காமம் மறைத்து, அவள் மீதான, அழகான காதல் குழந்தையை அவன் பிரசவிக்க.....
மறுமுனையில் ராதா அழகானா ஆண் குழந்தை பிரசவித்தாள்.....
ராதா...இம்ம்ம் இப்போ எப்படி பீல் பண்ணற....
இம்ம்ம் ஐ பீல் பெட்டெர் நொவ்..
.உன் குழந்தைய பாரு....
நோ டாக்டர் நான் என் கண்வர பாக்கணும்.....
இம்ம்ம் ஓகே.....
ராகேஷ், உங்க குழந்தை உங்கள மாதிரியே இருக்கான்,
நோ டாக்டர்...என் ராது மாதிரியே இருக்கான்...
இம்ம்ம்..குட்...நைஸ் கப்பில்ஸ்
தேங்யூ டாக்டர்....
டாக்டர்...
இம் சொல்லுங்க ராகேஷ்..
.இல்ல ஆபரேஷன் தேட்டர்ல, ஜென்ட்ஸ் நாட் அலோவ்ட் னு சொன்னேங்க,
ஆமாம் சொனேன்....
இப்போ என் பையன மட்டும் எப்படி விட்டேங்க....
யூ நாட்டி.................
.just for fun ...thankyou so much டாக்டர்....
டேய்....இங்க நான் ஒருத்தி குத்துக் கல்லாட்டம் இருக்கேன்ல, அங்க என்ன அந்த டாக்டர் கிட்ட பேச்சு வேண்டி கிடக்கு....
இல்ல ராது, நான் நம்ம அடுத்த கொழந்த டெலிவரிக்கும், இந்த ஹோஸ்பிடல் தான் வருவோம்...கொஞ்சம் பாத்து பண்ணுங்க னு அந்த டாக்டர் கிட்ட சொன்னேன்....
ச்சீ....லூசு டா நீ.....திருந்தவே மாட்ட....
ஹ ஹ ஹ....................தேங்யூ செல்லம்......
சுபம்
( சின்ன சின்ன சீண்டலிலும், ஊடலிலும், அதன் பின் வரும் சமாதானத்திலும் தானே அன்பு பலப்படும்...கொஞ்ச நாளா ரொம்ப சீரியஸ் அஹ, எல்லாத்தையும் அழவைக்கிற மாதிரியே பதிவு போட்டாச்சு...அதான் ஒரு சேஞ்சுக்கு காதல் + ரொமான்ஸ் கலந்த பதிவு...இந்த பதிவ எழுத சொன்ன நல்லவருக்கு நன்றிகள் பல..... வழக்கம் போல உங்கள் கருத்துகளை நோக்கி, பதிவை சமர்பிக்கிறேன்....இந்த பதிவை என் இணையநண்பன் எவனோ ஒருவனுக்காவும்.....)