சரியாக ஒரு வருடம் பிளாக்கரில் எந்த பதிவும் இடாமல் இருந்திருக்கிறேன். ஏதோ ஒரு மனநிலை எதையோ கடத்திக்கொண்டு வந்திருக்கிறது என்பதைவிட ஓர் உழைப்பிற்கு கொடுக்கமுடிந்த இடைவெளியாகவும் இதைக் கருதிக்கொள்கிறேன்.
கவனிப்பற்ற பொழுதுகளில் எனக்குள் நானே பேசிக்கொள்வதைப் போல் இலக்கிய உலகம் குறித்த எந்த புரிதலும் இல்லாத போதும் எந்த சத்தமும் இல்லாமல் இங்கே எழுதிச் சேர்த்த கவிதைகளை அது உருவாக்கிய வெப்பத்தை நினைத்துக்கொள்கிறேன்.
இனி வாசிப்பு எழுத்து பகிர்தல் என மீண்டும் இங்கே அதிகம் பதியவேண்டும் என்ற எண்ணம் உந்தித்தள்ளுகிறது.
அதற்கு முதலாய் போன வருட இறுதியில் வெளியான என் கவிதைத் தொகுப்பான கவனிக்க மறந்த சொல்லோடு வந்திருக்கிறேன்.
எனக்கு நானே உருவாக்கிக்கொண்ட சுவர்களைப் போல் இந்த இடம் எனக்கு அத்தனை வரம்..
தொடர்கிறேன்
-ரேவா
2 கருத்துகள்:
மகிழ்வளிக்கும் செய்தி
தொடர்ந்தால் மகிழ்வோம்
வாழ்த்துக்களுடன்...
இரண்டு வருடத்திற்கு பிறகு... ;)
கருத்துரையிடுக