உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 1 ஜூலை, 2013

காதலியல்




யாருமற்ற இடம்
ஏதுமற்ற மொழி
எப்போதும் பிடிக்கும் உனக்கு.

உன் மொழி உடைக்க
நீட்டித் தருகின்றேன்
சிறு இடைவெளியை..

கைகோர்த்துக்கொள்கின்ற
இருளுக்குள்
இரவல் வாங்கிக் கொள்கிறாய்
என் கைகளை...

மெளனம் நிறைந்த
பாதையை கடந்து
வெகுதூரம் பயணிக்கிறது
உன் பார்வை

இப்போது மழை வேண்டுமென்று
உன் மொழி உடைய
குடைவேண்டுமென்ற
என் மொழி அடைக்க

காத்திருந்தவனைப் போல்
காற்றாய் தேகம் நுழைந்த
அந்நிமிடம்
விதைகள் விருட்சமாகத்தொடங்கின
ஆழமாய் அதி ஆழமாய்
இம் மழையில்...


••




 நன்றி உயிர்மை, யூத்புல் விகடன்
http://uyirmmai.com/Uyirosai/contentdetails.aspx?cid=6186


http://youthful.vikatan.com/index.php?nid=1344#cmt241

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசித்தேன்...

வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

கவிதை கலக்கல்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அழகிய வரிகள்

sathishsangkavi.blogspot.com சொன்னது…

ஆழமாய் அதி ஆழமாய்
இம் மழையில்... உங்கள்
கவிதை மழையில்
நனைந்தேன்..