உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்
காதல் கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 29 ஜனவரி, 2015

காலத்தின் கூர்வாள்




மனமேறிக் கொண்ட பின்
மாற்றமில்லாது போன ஒத்திகை
நாளுக்கு நாள் அதிகரிக்க


அதிகாரத் தோரணையாய் பாவனை
அரிதாரம் தனைப் பூசிக்கொள்ள

நிலா சுடுவதை உணர்ந்த
உம்மத்தப் பொழுதுகள்
வாய்ப்பாடறியா கணக்கென
வாழ்க்கை மாறிய நிமிடங்கள்
நடுநிசி பொழுதையும்
விட்டுவைக்கா நினைவுகளென
நீ நீயாகவே
நீக்கமற நிறைந்திருந்தாய்
கனவுதனிலும் அதையே எடுத்துரைத்தாய்

மந்திரக்காரனின் கோலென
காதலது 

உன் விழியினால் பேச
கனவது கவிதையில் பேச
நிபந்தனைகளோடு நின்று கொல்கிறோம்
அவரவர்கான உலகத்தில்

காத்திருத்தலென்னும் கூர்வாள்
ஒருமுனையில் உன்னையும்
மறுமுனையில் என்னையும்
குத்திக்கிழித்தபடி சிரிக்கிறது
காதலுக்கு காலமென்னும்
பெயரை வைத்து 


-ரேவா

மிச்சத்தின் மொத்தம்




உதிரும் சருகின் ஞாபகப் பசுமையில் 
நினைவின்  சலசலப்புகள்

வேர்விட மறந்த சம்பாஷணையில்
துளிர்த்திருக்கும் நியாயங்கள்

ஆழப்பற்றுதலில் அறுந்துவிட்ட
விதைகளில் 
முழிந்திருக்கும் விருட்சங்கள்

மீளாக்கணங்களை விரித்துப் போடும் 
காலத்தின் கண்களை
நேராய்ப் பார்க்க திராணியற்ற 
காயத்தின் தழும்பென மிச்சமிருக்கும் ப்ரியங்கள்

எதன் பொருட்டும் விடுவித்துக்கொள்ளா 
உயிர்வேரின் ஈரத்தில் துளிர்விடத் தெரிந்தும்
தொலைத்ததைப் போன்றதொரு தெனியில் தான் 
வாழ்ந்தாகவேண்டியிருக்கிறது 
இந்த வாழ்வை





மெளன மொழி




சொல்லிக்கொள்ளாமல் பேசிக்கொள்ளுதலின்
சுவரஸ்யங்கள் குறித்து
உன்னிடம் கேட்டதில்லாது போயினும்
அளவெடுக்கும் உந்தன் கண்களில்
குறிப்பெழுதியே வைத்திருந்தாய்

மழை நீர் தேக்கத்தில்
கப்பல் விடும் சிறுவனாய்
உன் நினைவுத் தேக்கத்தில்
காதல்விட்டு
விளையாண்டு கொண்டிருக்கிறேன்

உனைக் கடக்கையில்லெல்லாம்
நெஞ்சிலேறிக்கொள்கிற கனம்
என்னை விட்டு வருகையில்
லேசாகிப்போகிறது

நீ கண்களை மூடிக்கொள்ள
இரவு தாழிட்டு  திறக்கப்பட்ட
எந்தன் கனவு தேடி
அலைய ஆரம்பித்தேன்

புரியப்படா உன் மெளனமும்
புரியவைக்க சேர்ந்துகொள்ளும்
தனிமையும்
காதலென்ற மொழிகொடுக்க
பேசக்கற்றறிந்த வேளையில்
பேசாமலே வந்துவிட்டேன்


நாளை நீயும்
என் மொழி அறியலாம்
அப்போது வா
சேர்ந்து பேசுவோம்
நம் மொழியை....

-ரேவா

தற்செயல் நிகழ்வு




ஒளிந்து கொள்வது சுலபமில்லையெனும் போதும்
மழைக்கு விரிக்கும் குடைத்தோகையில்
பட்டுத்தெரிக்கும் வண்ணச்சிதறல்களால்
வாசல் நிறைக்கும் நீர்கோலம் போல்
நனைதலே நடக்கிறது

நியாபகச்சூட்டை கிளப்பிவிடும் இதனிடம் 

இத்தனை கடுமையை எதிர்பார்க்கவில்லையெனினும்
திரும்ப திரும்ப இது நிகழ்கிறது

ஒன்றிரண்டு துளிகளோடு கரையட்டுமென
எடுத்துவந்த கண்ணீரை
நனையவிட்டு
கூட்டி வந்த பொழுதில்
தலை துவட்டிக்கொண்ட நினைவிற்குள்
தும்மல் எழுந்தது
தற்செயல் நிகழ்வாய் கூட இருக்கலாம்...



-ரேவா

புதன், 1 ஜனவரி, 2014

எதாவது சொல்.





எதாவது சொல்
எதையாவது செய்
நினைப்பதை பேசு
நினைத்ததில் நில்
அழுக்கு ஆடை
அழகென்று சொல்
அரிதாரம் சுத்தமாய்
ஒட்டவில்லையென சரிசெய்
நெற்றிப்பொட்டின் கோணலை காட்டி
நெற்றி தொடு
நெற்றியிலிருந்து கண்களை பார்
காரணம் கேள்
காத்திருக்கும் இவ்விழிகளின்
பார்வைக்குள் நுழை
அனுமதி வேண்டுமெனில் அதையும் கேள்
அனுமதித்த இதழ்களை தொடு
இன்னும் வேண்டுமென
புன்னகையில் கொல்
இதற்குமேல் வேகத்தடைகொடுக்கும்
அமைதியினை எறி
எதற்கும் தயாராய் இரு
தொடராத புள்ளியில்
முழுக்கோலம் அழகென்று பொய்சொல்
மருதாணி பொருத்தமென்று சொல்லி
என் பெரும்மூச்சை அள
ஆர்பரிக்கும் அலைகளின் முன்
என் அழுகுரல் கேள்
அணைத்துறங்கும் தலையணையிடம்
ஆசையினை அறி
கோபிக்க வேண்டுமென நான் சொன்ன
பொய்களை ரசி
ரசித்தாயாயின் ருசி
ருசி கண்ட மனம்
இன்னுமொருமுறை
உனைக் காரணம் கேட்கும்
காரணமுடைத்து
காதல் வேண்டும்
கதைத் துறங்க காதல்மடி தேடும்
அதற்குமுன்
ஒரே ஒரு முறை
 
சத்தம் போடாதே
தனித்திருக்கும்
இந்நிமிடம் பேசட்டும் ...

சனி, 7 டிசம்பர், 2013

நான் என்பவள்





பூங்கொத்து நின் பார்வை
களி நடனம் உன் சிரிப்பு
ஊழிக்கூத்து உன் கோவம்
மேகக்கூட்டம் உன் ஊடல்
மழைச்சாரல் நின் தீண்டல்
கோப்பை தேனீர் உன் அணைப்பு
பெருங்கடல் உன் நேசம்
நான் என்பவள் உன் வரைக்கும்...




சனி, 9 நவம்பர், 2013

சடங்கு






இறுதியாய் முகம் பார்க்கும்
மயான சடங்கிற்கும் அழைத்தே செல்கிறாய்
அதுவரை அறியாத உயிர் பயமொன்று
உள்ளுக்குள் உதறலெடுக்க
கனவுகளை எரியூட்டி
கண்ணிர் குடமுடைத்து
திரும்பிப்பார்க்கமலே அங்கிருந்து கடக்கிறாய்
பழக்கப்பட்ட கையசைப்பிற்கும்
தோள் சாய்தலுக்கும்
வழியின்றி மறைய
வரைந்து போகிறாய்
சிறு புள்ளியை

உயிரடங்கும் பொழுதுகளைவிட
உயிரோடிருத்தலே வலிதருவதாய் இருக்கும்
இவ்வேளையில்
மிச்சமிருக்கும் ஞாபகங்களையும்
எரித்துவிட்டு அங்கிருந்து நகர
மறைத்தலின் பொருட்டு
வந்து விழுந்த
மழை
எதன் பொருட்டு
எதற்காக பெய்யத் தொடங்கியதென்று
தெரியாமலே வந்துசேர்ந்தேன்
நான்....

புதன், 2 அக்டோபர், 2013

என்ன செய்ய?




பேசுவதற்காகத்தான்
உனை வரச்சொன்னேன்
வரும்வழியெல்லாம் மனம்
பேசியச்சொற்களின் அயற்சி
உனைபார்த்ததும் ஓய்வெடுத்துகொள்ளுமென
சத்தியமாய் நினைக்கவேயில்லை
மெளனமாய் இந்த நிமிடம்
துளி புன்னகையில்லை
சினேக விசாரிப்புகள் இல்லை
நம்மிடையே சூழ்ந்திருந்த
அந்த உன்னத உணர்வும்
இந்நிமிடம் கிடைக்கவில்லை
உன் பார்வையின் வழியே நினைவோட்டம்
கொஞ்சம் நிதானித்து இருக்கலாம் தான்
என்ன செய்ய
பேசமாலே கிடக்கும்
என் சொற்களை



செவ்வாய், 1 அக்டோபர், 2013

ஒற்றைச்சிறகு




காதலெனும் சிறகெடுத்து
நானுனக்கு மாட்டிவிட்டபின்
இலக்கின்றி பறந்தலைந்த பொழுதொன்றில் தான்
எங்கோ தொலைத்திருந்தேன்
என் ஒற்றைச்சிறகை
சில்லு சில்லாய் சிதறிக்கிடக்கும்
பிரியங்களின் வார்த்தைகளிலெல்லாம்
நிறைந்து கிடக்கின்ற முகம்
இறைத்து போட்டபடியிருக்கிறது சபையேறா பேச்சுகளை
கதைசொல்லி களைத்து போகின்ற இடம்
காரணமின்று சிரித்துப்பார்த்த தடம்
எது என்னை உன்னை நோக்கியிழுத்ததென்று
நினைப்பை கொடுத்த களம்
அத்தனையும் தாண்டி
கடல் மணலின் பாதங்கள் பரப்பி விளையாடும்
பிள்ளைமனதாகிப்போகின்ற
ப்ரியத்தின் முன்
வெட்கங்களை உண்டு
வேட்கைகளை நிறைவேற்றும் உன் தளமெனக்கு
அன்னியமாய்பட்ட போதும்
அடுத்தடுத்த எடையிழப்புகளால்
நிலைகுலைந்து போன சுயம்
உன் முகமெடுத்து கொண்ட போதும்
உனது விருப்பங்களுக்கு முன்
பலியிடப்படும் எனது கனவுகளைபற்றியோ
காணாமல் போகும் வார்த்தைகளைபற்றியோ
பற்றற்றுபோன
பற்றுதலை பற்றி
யாதொரு கவலையுமுனக்கு இல்லையென்ற போதும்

தொலைத்திருப்பேனென்று
தெரிந்திருந்தால்
நண்பனாகவே இருந்திருக்கலாம்
நீ



திங்கள், 16 செப்டம்பர், 2013

ரகசிய அறை



திறவுகோலது கையிலே இருக்க
திறந்திடும் முன்னே
நின்றிடு

வார்த்தைகளாலான
அறையெனது
உனக்கு பிடித்தச்சொற்களை
உருவுவதில் தொடங்கி
நீடித்துகொள் எனதறையில்
தொடர்ந்தென்னை வார்த்தைகளால் தோற்கடி
தோற்பதில் தான் ப்ரியத்தின்
உயிருள்ளதென்பதை
நானுணர்ந்ததைப் போல்
நீ உணர்
உணவாகும் வரை உயிர் தேடலென்பது
தொடருமென்பது
உணவுச்சங்கிலி கொடுத்தபாடமென்றாலும்
வலிக்க வலிக்க
உனது தேடலை தொடர்
உண்ண உணவது
உயிரினில் அடியினில் கிடக்க
அடிவானமதை கண்டடைந்த போது
உறங்கிப்போ
அதற்குமுன்
முத்தமிடு
சத்தமிட்டு காதலிப்பதாய் சொல்
சாத்தியப்படுகையில் உன் வார்த்தைகளால்
எனதறைக்கு பலம் சேர்
சேர்ந்து வாழ
பிரியமட்டும் போதாதென்பதை
நான் கட்டிய எனதறையை
படித்தறிதலில்
புரி
புரிந்தறிதலில்
தெளி
தெளிந்த பின்
தேடு
தேடியடைந்த பின்
கூடு
கூடிய பின்
களி
களித்தெழ
கழித்திடு
ப்ரியம் முட்டும் வரை
வானம் படை
பிறகு போட்டுடை
முதலில் இருந்து தொடங்கு
முடிவைத்தேடி நெருக்கு
நெருங்கிய பின்
முற்றுபுள்ளியிட்டு
மறுபடியும் தொடர்
தொடர காரணமற்று நீண்டுபோன
இவ்வரிகளுக்கான
திறவுகோலது கையிலே இருக்க
திறந்திடும் முன்னே
நின்றிடு.



-ரேவா 

 

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

என்ன செய்ய




பேசுவதற்காகத்தான்
உனை வரச்சொன்னேன்
வரும்வழியெல்லாம் மனம்
பேசியச்சொற்களின் அயற்சி
உனைபார்த்ததும் ஓய்வெடுத்துகொள்ளுமென
சத்தியமாய் நினைக்கவேயில்லை
மெளனமாய் இந்த நிமிடம்
துளி புன்னகையில்லை
சினேக விசாரிப்புகள் இல்லை
நம்மிடையே சூழ்ந்திருந்த
அந்த உன்னத உணர்வும்
இந்நிமிடம் கிடைக்கவில்லை
உன் பார்வையின் வழியே நினைவோட்டம்
கொஞ்சம் நிதானித்து இருக்கலாம் தான்
என்ன செய்ய
பேசமாலே கிடக்கும்
என் சொற்களை



வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

நண்பனாகவே இருந்திருக்கலாம்




காதலெனும் சிறகெடுத்து
நானுனக்கு மாட்டிவிட்டபின்
இலக்கின்றி பறந்தலைந்த பொழுதொன்றில் தான்
எங்கோ தொலைத்திருந்தேன்
என் ஒற்றைச்சிறகை
சில்லு சில்லாய் சிதறிக்கிடக்கும்
பிரியங்களின் வார்த்தைகளிலெல்லாம்
நிறைந்து கிடக்கின்ற முகம்
இறைத்து போட்டபடியிருக்கிறது சபையேறா பேச்சுகளை
கதைசொல்லி களைத்து போகின்ற இடம்
காரணமின்று சிரித்துப்பார்த்த தடம்
எது என்னை உன்னை நோக்கியிழுத்ததென்று
நினைப்பை கொடுத்த களம்
அத்தனையும் தாண்டி
கடல் மணலின் பாதங்கள் பரப்பி விளையாடும்
பிள்ளைமனதாகிப்போகின்ற
ப்ரியத்தின் முன்
வெட்கங்களை உண்டு
வேட்கைகளை நிறைவேற்றும் உன் தளமெனக்கு
அன்னியமாய்பட்ட போதும்
அடுத்தடுத்த எடையிழப்புகளால்
நிலைகுலைந்து போன சுயம்
உன் முகமெடுத்து கொண்ட போதும்
உனது விருப்பங்களுக்கு முன்
பலியிடப்படும் எனது கனவுகளைபற்றியோ
காணாமல் போகும் வார்த்தைகளைபற்றியோ
பற்றற்றுபோன
பற்றுதலை பற்றி
யாதொரு கவலையுமுனக்கு இல்லையென்ற போதும்

தொலைத்திருப்பேனென்று
தெரிந்திருந்தால்
நண்பனாகவே இருந்திருக்கலாம்
நீ

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

மெளனப்பாடல்




 Photo: மெளனம் ஒரு பாடலாகவே 
இருந்தது நமக்கு..
இசைக்குறிப்புகள் பற்றிய கவலையின்றி
தாளம் பற்றிய தயங்கங்களின்றி
சுதி சுத்தமாய் பாடப்படுமோவென்ற பயங்களின்றி
ப்ரியத்தின் வரிகள் சரியாய் 
படிக்கப்பட்டதன் பொருட்டு
இந்த மெளனம் ஒரு பாடலாகவே 
இருந்தது 
ந
ம
க்
கு.....

-ரேவா

மெளனம் ஒரு பாடலாகவே
இருந்தது நமக்கு..
இசைக்குறிப்புகள் பற்றிய கவலையின்றி
தாளம் பற்றிய தயங்கங்களின்றி
சுதி சுத்தமாய் பாடப்படுமோவென்ற பயங்களின்றி
ப்ரியத்தின் வரிகள் சரியாய்
படிக்கப்பட்டதன் பொருட்டு
இந்த மெளனம் ஒரு பாடலாகவே
இருந்தது


க்
கு.....

-ரேவா

திங்கள், 29 ஜூலை, 2013

முத்தவழிச்சாலை


 Photo: இருபக்கமும் அடர்ந்திருக்கும்
அவ்வசீகர சாலை
ஆரம்பத்தில் குறுகளாகி
ஆரம்பித்ததன் வேகத்தின் கணக்கில்
லாவக ஓட்டம் பிடிக்க

அழுத்தம் நிறைந்த பகுதிக்குள்
தடையின்றி செல்ல 
நீலியின் கைகள்
ஏதுவாய் அமைய

தூரமாய் செல்லச்செல்ல
செல்ல கைகளாய் மாறிய
நிழல்
உதிர்ந்த காரணங்களையெல்லாம்
கிளையேற்றி பார்க்கும்
கண்களை கொடுக்க

நிலா
நீ
வானம்
தனிமை
கருமையென அலைந்து பறக்கின்ற
மனதிற்கு
வேகத்தடையெடுத்து வருகிறது
இம்முத்தவழிச்சாலை...

இருபக்கமும் அடர்ந்திருக்கும்
அவ்வசீகர சாலை
ஆரம்பத்தில் குறுகளாகி
ஆரம்பித்ததன் வேகத்தின் கணக்கில்
லாவக ஓட்டம் பிடிக்க

அழுத்தம் நிறைந்த பகுதிக்குள்
தடையின்றி செல்ல
நீலியின் கைகள்
ஏதுவாய் அமைய

தூரமாய் செல்லச்செல்ல
செல்ல கைகளாய் மாறிய
நிழல்
உதிர்ந்த காரணங்களையெல்லாம்
கிளையேற்றி பார்க்கும்
கண்களை கொடுக்க

நிலா
நீ
வானம்
தனிமையென அலைந்து பறக்கின்ற
மனதிற்கு
வேகத்தடையெடுத்து வருகிறது
இம்முத்தவழிச்சாலை...

செவ்வாய், 16 ஜூலை, 2013

ஜோடி தூரிகை


 Photo: எதை எதையோ 
கொடுத்து பேச வைக்கிறாய்
யாருமற்ற இவ்வெளியில் சொற்கள் 
சூரியனாகி சுட்டெரிக்க 

நீ கொடுத்துப்போன குரல்
ஆன்மாவில் பெருங்குரலெடுத்து 
பாடிக்கொண்டே திரிய

கைவிளக்குகளாகிப்போன 
காரணங்கள்
காத்திருப்பதை நியாயமென்றுணர்த்த

காதலது காத்திருப்பில் கரைய
மிச்சமிருக்கும் காலத்தை
காட்சிபடுத்த கிடைக்கட்டும் 
ஜோடி தூரிகை...
எதை எதையோ
கொடுத்து பேச வைக்கிறாய்
யாருமற்ற இவ்வெளியில் சொற்கள்
சூரியனாகி சுட்டெரிக்க

நீ கொடுத்துப்போன குரல்
ஆன்மாவில் பெருங்குரலெடுத்து
பாடிக்கொண்டே திரிய

கைவிளக்குகளாகிப்போன
காரணங்கள்
காத்திருப்பதை நியாயமென்றுணர்த்த

காதலது காத்திருப்பில் கரைய
மிச்சமிருக்கும் காலத்தை
காட்சிபடுத்த கிடைக்கட்டும்
ஜோடி தூரிகை...

திங்கள், 1 ஜூலை, 2013

காதலியல்




யாருமற்ற இடம்
ஏதுமற்ற மொழி
எப்போதும் பிடிக்கும் உனக்கு.

உன் மொழி உடைக்க
நீட்டித் தருகின்றேன்
சிறு இடைவெளியை..

கைகோர்த்துக்கொள்கின்ற
இருளுக்குள்
இரவல் வாங்கிக் கொள்கிறாய்
என் கைகளை...

மெளனம் நிறைந்த
பாதையை கடந்து
வெகுதூரம் பயணிக்கிறது
உன் பார்வை

இப்போது மழை வேண்டுமென்று
உன் மொழி உடைய
குடைவேண்டுமென்ற
என் மொழி அடைக்க

காத்திருந்தவனைப் போல்
காற்றாய் தேகம் நுழைந்த
அந்நிமிடம்
விதைகள் விருட்சமாகத்தொடங்கின
ஆழமாய் அதி ஆழமாய்
இம் மழையில்...


••




 நன்றி உயிர்மை, யூத்புல் விகடன்
http://uyirmmai.com/Uyirosai/contentdetails.aspx?cid=6186


http://youthful.vikatan.com/index.php?nid=1344#cmt241

திங்கள், 27 மே, 2013

முத்தபுராணம்


 
சத்தமில்லாமல்
நம் சரித்திரம் சொல்லட்டும்
இந்த முத்தபுராணம்...

 உயிர் ஒப்பந்தமொன்றை
உதடுகள் எழுதுகிறது
முத்தமெனும்
 மையிட்டு

*
சொர்க்கமென்பதை
இரண்டாய் பிரித்து
உன் இதழாய் படைத்தானோ
இறைவன்...

 *
ஒரு துளியாய் விழுந்து
பிரவாகமாய்
உருவெடுக்கும் வித்தையை
எப்படி கற்றது
உன் முத்தம்...

*
உனக்காக ஒன்று
எனக்காக ஒன்றென
தனைக்காக்க தானாய்
வளருகிறது
இம் முத்தம்...

*
ஊடலை உடைக்க
உடன் எடுத்துவருகிறாய்
உன் முத்தத்தையும்
அதன் மொத்தத்தையும்.
.
*
உனக்கு ஊட்டையில்
மட்டும்
பசியேறி ஏறிகொள்கிறது
இம்முத்ததிற்கு.
.
*
இன்னுமொரு கவிதையென
கன்னம் காட்டுகிறாய்
கட்டுக்கடங்காமல் இதழ்கள்
எழுதித்தீர்க்கிறது
உன்னை.

*
அசலோடு வட்டியை
அடம்பிடித்து வாங்கும்
முத்த வட்டிக்காரனாய்
உன்னை முழுதாய் மாற்றியிருந்தது
இம்முத்தம்...

*
காமத்தின் சாவியிட்டு
காதல் திறக்கும்
ரகசிய வழி
முத்தம்
*
முதல் முத்தத்திற்கு
முகம் மூடுகிறாய்
விரலிடுக்கில் வந்து விழுகிறது
நாணமெனும்
முத்தம்..

*
 உலராமலே கிடக்கிறது
நீ உயிர்த்தொட்டு
எழுதிய கவிதையொன்று
இதழிலில்..

*
இதழ்கோப்பைதனை
மறுமுறையென்
இதழ்மாற்று
போதை தெளியட்டும்
இம்முத்ததிற்கு..
*
உனைக்கண்டதும்
கவியெழுத
காதல் கட்டெடுத்த
வார்த்தை
முத்தம்...

*

சத்தமில்லாமல்
நம் சரித்திரம் சொல்லட்டும்
இந்த முத்தபுராணம்...


ஞாயிறு, 26 மே, 2013

வெற்று மைதானம்




வெற்று மைதானமென
வெறுமை சூழத்தந்தாலும்
ஆடிக்களைத்த நிகழ்வுக்குள்
நிதானமாய் ஓடிவிளையாடுகிற
ஒற்றை பந்து
காதல்...

தோல்விகள் புரிந்தாலும்
தொடர்ச்சியாய் முயற்சிகள்,
அயற்சியை மறைக்க
அவ்வவ்போது
நினைவுகள்..

வலிக்கு வலியென
வழிகொண்டு தொடர
வார்த்தைகொண்டு அடைக்கிறாய்
இப்பெருவெளியை...

உடலுக்கும் உயிருக்குமான
தொடர்பு அறுபடும் நிலையிலான
இறுதி போராட்டத்திலும்
வசதியாய் வந்தமர்கிறாய்
சிறு இடைவெளி கடத்தும்
நிகழ்வுகளில்..

எத்தனை முயன்றும்
கிட்டாத வெற்றியில்
ஒரு பார்வையாளனைப்போல்
காத்திருக்கின்ற காதலுக்கு
சமாதானம்
சொல்லமுடியா வார்த்தைகளை
கைக்கு கொடுக்கின்றேன்

காதலென்பது
எழுதப்படாத தீர்ப்புகளில்
நிறைந்திருப்பதென்று....

-ரேவா

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

தேடல்




பெரும் காத்திருப்பில்
சேர்ந்துவைத்திருக்கிறேன்
வாழ்வின் மீதத்திற்கான ப்ரியங்களையும்
இதுவரை பிடிக்காத சண்டைகளுக்கான
காரணங்களையும்..

பதற்றமிக்க
இத்தனிமைபிரதேசத்தில்
மெளனத் தீ கொழுந்துவிட்டெறிய
கனவுச் சிறகசைத்து
உனை அடைந்திடுவேன்
தணிக்கைகளற்று...

இல்லா உருவமொன்றை
அருவமாய் ஏற்றாகிவிட்டது
இல்லாமைக்குள் இருப்புகொண்டு
தவிக்கின்ற இளமைக்குள்
விலை வைக்கா
கூட்டம் தேடி அலைகிறது
இந்நாட்கள்

வேகத்தடைகளென
முளைக்கின்ற உறவுதனையும்
சமவெளி நோக்கி
இழுத்துச்செல்ல முயலுகையில்
முந்திக்கொண்டு நிற்கிறதாங்கோர்
தனிமை

நிலம் உறிஞ்சிய மிச்சம் போக
வேர்கால்களில் சேமிக்ககிடைக்கின்ற
சிறுதுளியில்
சில்லிட்டு துளிர்விட
எப்படியும் உனைத்தேடி அடைதலில்
வேர்விடுவேன்
இம்முறை...

செவ்வாய், 1 ஜனவரி, 2013

யாருக்கும் தெரியாமல்




சட்டென்று நீயெனை கடந்திருக்கலாம்
ஆனால்
கூடவே வந்த்தில்
கூடுதல் மகிழ்ச்சிதான்
எனக்கு

ஏதேதோ பேசுகிறாய்
எல்லா பேச்சுலும்
உணர்கிறேன்
உன் நேசத்தை

கைகளை நீட்டுகிறாய்
நட்பென்று சொல்லி
பற்றுதல் சுகமெனினும்
ஏதோ ஒன்று தடுக்கிறது

விடியல் மறந்த பேச்சுகளில்
விட்டுக்கொடுத்த சுபாவங்களில்
தட்டிக்கேட்கும் ஆளுமையில்
உன் வேரை உணர்கிறேன்

படர்தல் முடியாதெனினும்
உயிரோடு இருத்தலில்
உருக்கொள்ளட்டும்
என் அன்பு
உன் மீதான நட்பில்

பின்னாதாய்
எல்லோரைப்பற்றிய கவிதையொன்றில்
உன்னையும் சேர்த்திட துடிக்கிறாய்
பெயரற்ற இந்த கவிதைக்குள்
நீ இடம் பெற்றிருக்கிறாய்
என்பதை அறியாமல்