உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 25 மார்ச், 2014

நேரத்தின் காட்சி




இது அதன் பெயரால்
அப்படியே அழைக்கப்படும்

தனக்கான அந்தரவெளிகளோடு
தனித்தே தான் இருக்கும்


துயரத்தின் காட்சியையும்
பாவத்தின் நீட்சியையும்
துரத்தும் பாவனையை
தொடர்ந்தே தான் கொடுக்கும்


தப்பிக்கும் நேரமும்
தப்பிழைக்கும் காலமும்
தப்பாமல் தவறுக்குள்
வரவொன்றை வைக்கும்


இருப்பின் ஓடமதும்
சுழல் காற்றின் கையில் சிக்கி
சிருங்காரமாய் ஆடும்


ஆடுமிந்த ஆட்டமது
முடிந்த பின்னும்
முயற்சிக்கு முற்றுவைத்து
முடிவைத்தேடி தொடருமிதை
அதுவென்றே
நல்லுலகம் கூறும் 





நன்றி கீற்று, அதீதம்
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=24506%3A2013-07-26-04-07-04&catid=2%3Apoems&Itemid=265

http://www.atheetham.com/?p=5487

0 கருத்துகள்: