உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 25 மார்ச், 2014

இத்தனை அழகில்லை





அந்திவானம்
அத்தனை அழகில்லை
இதுவரை

வரையறை வைத்து
வரைந்திட்ட வாழ்வில்
உன் வர்ணம் கொண்டு
புதுவர்ணம் கொடுத்தாய்


உயிர்கிளியின் கூண்டுகள் தன்னை
வான்நோக்கி பறந்திட
திறந்திட்டாய்


சிறகசைப்பின் வெகுதூரக்கவனிப்பில்
வந்துசேர கிடைத்திட்ட இடமதில்
சலசலக்கிற ஆறும்
சந்தமாய் பேசும் காடும்
மெளனமாய் உன்னை என்னிடம் சேர்க்க


அடர்ந்திருக்கும் இவ்வானில்
பார்க்க கிடைக்கும் முழு நிலவும்
மடிகொடுத்து உன்னை நிறைக்க
நீ அருகிருக்கும்  அந்திவானம்
இத்தனை அழகில்லை
இதுவரை


2 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

கவிதை அருமை...
வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

அருமை..