எம் சங்கமத்தில்
கிடைத்திட்ட
திரிசங்கு உலகம்
நீ..
வற்றாத எம் கனவுகளின்
வடிகாலாய் வந்தவன்
நீ..
நடைபயின்ற நேரத்தில்
எனை வளர்ந்த
அன்னை
நீ...
கிட்டாத பெயரையெல்லாம்
கிட்டித்தந்த
வள்ளல்
நீ...
புரியாத சேதியெல்லாம்
புரியத்தந்த
புலவன்
நீ..
கரைசேரா எம் கனவுகளின்
கலங்கரை விளக்கம்
நீ..
பிள்ளையாய் உனைபெற்று
பெற்றோராய் எமை
பிறப்பித்த எங்களின்
உயிரும்
நீ..
அரவணைப்பில் அன்னையாக,
அடத்தினில் பிள்ளையாக,
சண்டையில் எதிரியாக,
சமாதானத்தில் நண்பனாக,
பரிவினில் தந்தையாகவென,
எமக்கு பலவாறு தெரியும்
தசாவதார கடவுளும்
நீ..
பள்ளி சென்றாய்
’அ’ கரத்தில்
எனை நிறைத்தாய்,
உயிர் எழுத்தில்,
ஏனோ
உயிரற்ற பொருள்களை
வளர்த்தாய்...
பட்டம் பெற்றாய்,
படிப்பினை தந்தாய்..
அட்டவணைக்குள்ளே
எம் அன்பினை அடைத்தாய்..
திரைகடல் ஓடி
வசதிகள் வளர்த்தாய்,
வாய்ப்புகள் கொண்டு,
வளம்தனை நிறைத்தாய்,
வறுமையில் ஏனோ
எம் அன்பினை அடைத்தாய்..
விரும்பிச்செய்திலாய்
என்று
வெளிச்சமாய் அறிந்தாலும்
ஏனோ சமாதானம் கொள்ளாமல்
தவிக்குது மனது,
உன் அன்பு தொலைபேசிக்குள்
அடைபட்ட போது..
உனக்கென்ற ஒரு வாழ்வை
எமைக் கொண்டு அமைத்தாய்..
உன் மழலையை
என் மடியினில் நிறைத்தாய்..
பெறாத பேறுயெல்லாம்
உன்னை பெற்றாதாலே
பெற்றோம்,
இனி என்ன வேண்டுமென்று
இறைவன் எனைக்கேட்டாலும்
மீண்டும் உன்னை கருவில் வைக்கும்
வரமே வேண்டுமென்றே
கேட்டிடுவேன்..
மழலை உன் விரல் பிடித்தே
என் இறுதியை கழித்திடுவேன்...
கிடைத்திட்ட
திரிசங்கு உலகம்
நீ..
வற்றாத எம் கனவுகளின்
வடிகாலாய் வந்தவன்
நீ..
நடைபயின்ற நேரத்தில்
எனை வளர்ந்த
அன்னை
நீ...
கிட்டாத பெயரையெல்லாம்
கிட்டித்தந்த
வள்ளல்
நீ...
புரியாத சேதியெல்லாம்
புரியத்தந்த
புலவன்
நீ..
கரைசேரா எம் கனவுகளின்
கலங்கரை விளக்கம்
நீ..
பிள்ளையாய் உனைபெற்று
பெற்றோராய் எமை
பிறப்பித்த எங்களின்
உயிரும்
நீ..
அரவணைப்பில் அன்னையாக,
அடத்தினில் பிள்ளையாக,
சண்டையில் எதிரியாக,
சமாதானத்தில் நண்பனாக,
பரிவினில் தந்தையாகவென,
எமக்கு பலவாறு தெரியும்
தசாவதார கடவுளும்
நீ..
பள்ளி சென்றாய்
’அ’ கரத்தில்
எனை நிறைத்தாய்,
உயிர் எழுத்தில்,
ஏனோ
உயிரற்ற பொருள்களை
வளர்த்தாய்...
பட்டம் பெற்றாய்,
படிப்பினை தந்தாய்..
அட்டவணைக்குள்ளே
எம் அன்பினை அடைத்தாய்..
திரைகடல் ஓடி
வசதிகள் வளர்த்தாய்,
வாய்ப்புகள் கொண்டு,
வளம்தனை நிறைத்தாய்,
வறுமையில் ஏனோ
எம் அன்பினை அடைத்தாய்..
விரும்பிச்செய்திலாய்
என்று
வெளிச்சமாய் அறிந்தாலும்
ஏனோ சமாதானம் கொள்ளாமல்
தவிக்குது மனது,
உன் அன்பு தொலைபேசிக்குள்
அடைபட்ட போது..
உனக்கென்ற ஒரு வாழ்வை
எமைக் கொண்டு அமைத்தாய்..
உன் மழலையை
என் மடியினில் நிறைத்தாய்..
பெறாத பேறுயெல்லாம்
உன்னை பெற்றாதாலே
பெற்றோம்,
இனி என்ன வேண்டுமென்று
இறைவன் எனைக்கேட்டாலும்
மீண்டும் உன்னை கருவில் வைக்கும்
வரமே வேண்டுமென்றே
கேட்டிடுவேன்..
மழலை உன் விரல் பிடித்தே
என் இறுதியை கழித்திடுவேன்...
முந்தைய பதிவு : முடிக்கத்தெரியாமல் ஒரு கவிதை

