விந்தின் வழி முளைக்கவில்லை
முலைப்பாலும் குடிக்கவில்லை,
ஏழு மலை தாண்டி
ஏழு கடல் தாண்டும்
என் உயிரில் பொருளில்லை...
பொறுப்பான மனிதனிடம்
இருப்பதெல்லாம்
என்னிடம் இருந்ததில்லை..
ஆனாலும்
பலர் விழிநீர் நான் துடைத்ததுண்டு
பலர் விதியோடு விளையாடியதும் உண்டு..
இருப்பவரிடம் இல்லாமலும்
இல்லாதவரிடம் இருந்திடவும் துடித்ததுண்டு...
ஆனாலும் ஆண்டவர்கள்
என்னை அடிமைபடுத்த,
ஆன்மீகர்கள் என்னை பாடாய்படுத்த,
பலரும் பலவாறு
என் கற்பை கலைக்க
வெற்றுகாகிதமென்னை வேசியாய்
மாற்றியவர் நீர்...
ஆசையாய் பலர் புணர,
அடுத்தடுத்து பலர் கைக்களுக்கு
மாற்றி விட்டவர் நீர்..
என்னை படைத்த மனிதரின்
கடவுளுக்கும்யெனை
காணிக்கையாக்கியவர் நீர்..
இயந்திர மனிதனாய்
மாறிப்போன மனிதனின்
மாற்றிபோட்ட செய்கைக்கு
பின்
என்னை காரணம் காட்டும்
மனிதனே
முலைப்பாலும் குடிக்கவில்லை,
ஏழு மலை தாண்டி
ஏழு கடல் தாண்டும்
என் உயிரில் பொருளில்லை...
பொறுப்பான மனிதனிடம்
இருப்பதெல்லாம்
என்னிடம் இருந்ததில்லை..
ஆனாலும்
பலர் விழிநீர் நான் துடைத்ததுண்டு
பலர் விதியோடு விளையாடியதும் உண்டு..
இருப்பவரிடம் இல்லாமலும்
இல்லாதவரிடம் இருந்திடவும் துடித்ததுண்டு...
ஆனாலும் ஆண்டவர்கள்
என்னை அடிமைபடுத்த,
ஆன்மீகர்கள் என்னை பாடாய்படுத்த,
பலரும் பலவாறு
என் கற்பை கலைக்க
வெற்றுகாகிதமென்னை வேசியாய்
மாற்றியவர் நீர்...
ஆசையாய் பலர் புணர,
அடுத்தடுத்து பலர் கைக்களுக்கு
மாற்றி விட்டவர் நீர்..
என்னை படைத்த மனிதரின்
கடவுளுக்கும்யெனை
காணிக்கையாக்கியவர் நீர்..
இயந்திர மனிதனாய்
மாறிப்போன மனிதனின்
மாற்றிபோட்ட செய்கைக்கு
பின்
என்னை காரணம் காட்டும்
மனிதனே
உந்தன் செய்கைக்கு
எனக்கு எதற்கு சாயம்?...
படைத்தலும்
காத்தலும்
அன்பாலே தொடங்கி
அன்பாலே முடியட்டும்...
வெற்று காகிதமெனை
வேசியாய் மாற்றாதீர்....
பின் உங்கள் கயமை எனக்கும் வரக்கூடும்..
படைத்தலும்
காத்தலும்
அன்பாலே தொடங்கி
அன்பாலே முடியட்டும்...
வெற்று காகிதமெனை
வேசியாய் மாற்றாதீர்....
பின் உங்கள் கயமை எனக்கும் வரக்கூடும்..
ஜாக்கிரதை....
இப்படிக்கு
பணம்....
இப்படிக்கு
பணம்....

